ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 22 October 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

அருமை நண்பர் சதங்கா இவ்வருடம் தீபாவளியினை முன்னிட்டு ஒரு சிறப்பு இடுகை இட்டு அதனைத் தொடர் இடுகையாகத் தொடர பலரை அழைத்திருக்கிறார். அத்தொடரில் என்னையும் அருமைச் சகோதரி நானானி அவர்கள் அழைத்திருக்கிறார். எழுத் வேண்டுமாம். இப்படி யாராவது அழைத்தால் தான் எழுதுவது என்பது வழக்கமாகி விட்டது. என்ன செய்வது ....


தொடரில் பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன

அவற்றிற்கு மனந்திறந்து பதிலளிக்க வேண்டுமாம் - பார்ப்போம் எப்படி மனம் திறக்கிறதென்று.

அதற்கு முன்னால் விதிமுறைகள் :

  1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

  2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

  3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

  4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

  5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.

சரி சரி கேள்வி பதிலுக்கு வருவோம்

பொதுவாக நானானி அளித்த பதில்கள் பெரும்பாலும் அப்படியே எனக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லிட்டு முடிச்சிடலாமா ? பரவால்ல - கொஞ்சம் எழுதுவோம்.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
    என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பா .... ஆகா ஆகா - தம்பட்டம் அடிக்குமளவிற்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை. பொறியியல் பயின்றவன் - வங்கியிலே பணி புரிபவன் -தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிப்பவன். தமிழ் கற்றவன். அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை. தமிழ் கற்றவன் அவ்வளவுதான்.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

அப்படி ஒன்றும் நடந்ததாக நினைவில் இல்லை. சிறுவயதுத் தீபாவளி - ஒரு இடுகை இட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு தீபாவளீயின் போது . மலரும் தீபத் திருநாள் நினைவுகளாக. நேரமிருப்பின் சென்று பார்த்து மகிழுங்களேன்.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

இனிய 2009 தீபாவளிக்கு எங்கும் செல்ல வில்லை. மதுரை
மாநகரத்திலேயே தான் இருந்தோம்.
Justify Full
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை. வழக்கம் போல் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, கங்காஸ்நானம் ஆச்சா - கேள்வி கேட்டு - கேட்டவர்களுக்குப் பதில் கூறி - கோவிலுக்குச் சென்று - வந்து நல்லா சாப்பிட்டு - தொலைக்காட்சி பார்த்து - இணையத்தில் பொழுது போக்கி ..........

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தைப்பதெல்லாம் என் பெற்றோர் காலத்தில் - படித்த காலத்தில் - பணியில் சேரும் முன்னர் - இருந்த பழக்கம். இப்பொழுதெல்லாம் ஆயத்த ஆடையகம் தான். தீபாவளிக்கென்று புத்தாடை வாங்குவது குறைந்து விட்டது. மனதிற்குத் தோன்றிய பொழுதெல்லாம் வாங்குவது வழக்கமாகி விட்டது. எப்பொழுதும் வீட்டில் சில புத்தாடைகள் இருக்கும். உள்ளாடைகளும் பிள்ளையார் துண்டும் சனீஸ்வரர் துண்டும் புதியதாக வாங்குவோம். குறிப்பிட்ட கடை என்று ஒரு கொள்கையும் கிடையாது.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

செய்வது வாங்குவதெல்லாம் என் வேலையல்ல. அதற்கென்றே வீட்டில் ஒரு துணைவி வைத்திருக்கிறேனே. அவர்கள் செய்வதைச் சாப்பிடுவேன். அவ்வளவுதான். என்ன சாப்பிட்டேன் - தெரில - கேக்கணும். பொதுவா ரெண்டே பேர் தான் இருக்கறதாலே அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. வீட்டிற்கு நெறெய பலகாரங்கள் வரும் - செல்லும்.

வந்த பலகாரங்கள் : தேன்குழல் - மாஉருண்டை - அதிரசம் - ரிப்பன் பகோடா - குலோப் ஜாமூன் - சீப்புச் சீடை - உலர்ந்த பழங்கள் - அல்வா - லட்டு - சோன் பப்டி - இன்னும் பலப்பல இனிப்புகள். இவை அனைத்தும் கண்ணால் பார்த்து விட்டு சாஸ்திரத்துக்கு ஒன்று இரண்டு சாப்பிட்டு விட்டு மீதம் பலருக்கும் சென்று விடும்.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

அலைபேசி தொலைபேசி மின்மடல் இணைய வாழ்த்து அட்டைகள் என நவீன முறைகள்

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

இரண்டும் இல்லை. கணினியில் மூழ்கி விட்டேன்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கோ / நிறுவனங்களுக்கோ உதவி செய்ய்யும் வழக்கம் இல்லை. ஆண்டு முழுவதும் - தேவைப்படுபவர்கள் அணுகும் போது - நிறுவனங்களும் சரி தனி நபர்களும் சரி - இறைவனின் கருணை இருக்கும் வரை உதவி செய்கிறோம் - செய்வோம்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

இதுதான் கடினமான கேள்வி - யாரை அழைப்பது - யாரை விடுவது - கடினமான செயல். இருப்பினும் மதுரைக்காரர்களை அழைத்து விடுகிறேன்.

01 : கார்த்திகைப் பாண்டியன் - http://ponniyinselvan-mkp.blogspot.com
02 : ஸ்ரீ - http://sridharrangaraj.blogspot.com
03 : பாலகுமார் - http://www.solaiazhagupuram.blogspot.com
04 : தேனி சுந்தர் -http://thenitamil.blogspot.com

அப்பாடா - ஒரு வழியா எழுதி முடிச்சாச்சு - மக்களே படிங்கப்பா

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Tuesday 18 August 2009

செந்தில் நாதன் - சிங்கை நாதன்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த சில நாட்களாக - எங்கு நோக்கினும் நண்பர் செந்தில் நாதனைப் பற்றிய இடுகைகள் தான் - அவரின் உடல் நிலை பற்றிய இடுகைகலும் - பண உதவி வேண்டும் இடுகைகளும் தான்.

கீழே கொடுக்கப்பட்டிருப்பது ஒரு காபி பேஸ்ட் இடுகை

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்

LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)

Address:
Siddeswaran Sethuraman
20810 Amie Ave, Apt# 10
Torrance, CA 90503

Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c

siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Western Union மூலமாக பணம் அனுப்புபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டு அனுப்பியவர் பெயரையும் Money Transfer Control Number (MTCN)யும் karunanithi.muthaiyan@credit-suisse.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சிங்கப்பூர்

ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775 (joseph.paulraj@gmail.com)
கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721


அமெரிக்கா

இளா - +1 609.977.7767
ilamurugu@gmail.com

Europe

S.குமார்
Mobile number : 0049-17622864334.
E-mail : friends.sk@gmail.com

இந்தியா

நர்சிம் - +91 9841888663

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293





சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks


Regards,
Santhi Senthil Nathan.


---------------------------------------------------------------------------------

நண்பர்களே - சற்றே சிந்தியுங்கள்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

குறளாசான் கூறியது - இடுப்பு வேட்டி நழுவும் போது தன்னிச்சையாக - எவ்விதத் தூண்டுதலுமில்லாமல் கை சென்று அதனைக் கட்டிவிடுவது போல - நாம் இப்பொழுது உடனடியாக நண்பர் செந்திலின் துயரம் துடைக்க நம்மால் இயன்ற அளவு பண உதவி செய்திட வேண்டும்.

மாற்று இதயம் பொருத்துவதற்கு ஆகும் செலவான 33 இலட்ச ரூபாயில் இது வரை 11 இலட்சம் சேர்ந்திருப்பதாக அறிகிறேன்.

நண்பர்களே ! = பல் வேறு இடுகைகள் பணம் அனுப்பும் முறையினைப் பற்றிப் பேசுகின்றன. எவ்வாறேனும் தேவையான பணத்தினைத் திரட்டும் முயற்சியில் அருமை நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிறு சிறு துளிகளாகத் திரளும் நீர் பெரு வெள்ளமாக மாறும் காலம் விரைவினில் வரும். நம்பிக்கையுடன் செயலாற்றுக நண்பர்களே !

விரைந்து பண உதவி செய்க - கேள்வி கேட்காமல் உதவி செய்க - விவாதிக்க நேரமில்லை - சிறு துளியும் வரவேற்கப்படுகின்றன.

பயனுள்ள சுட்டிகள் :

http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html

http://kvraja.blogspot.com/2009/08/collection-updates.html

http://www.narsim.in/2009/08/blog-post_13.html

http://www.narsim.in/2009/08/blog-post_17.html

http://madhavipanthal.blogspot.com/2009/08/senthilnathan.html

http://www.maraneri.com/2009/08/collection-updates.html

http://www.maraneri.com/2009/08/blog-post_15.html

http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_12.html

http://sandanamullai.blogspot.com/2009/08/blog-post_12.html

http://govikannan.blogspot.com/2009/08/blog-post_13.html

அனைவரையும் ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்











Friday 31 July 2009

சிறந்த நண்பருக்கு விருது

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

குறளாசான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே நட்பின் இலக்கணம் வகுத்துச் சென்றிருக்கிறான்.

நட்பென்பது அழகானது. அன்புணர்ச்சி உடைய மனக்கசிவே நட்பு. இறுக்கமற்றது. நினைக்குந்தோறும் நிம்மதி தருவது. நட்புக் கொண்டால் நிலைத்து நிற்கப் பாடுபடவேண்டும். நட்பின் நினைவே மகிழ்வூட்டுவதாய் நிற்க வேண்டும். ஆராய்ந்து கொள்ளும் நட்பே உயர்வானது. உள்ளும் புறமும் தூய்மையுடைய மனமே நல்ல நட்பை உருவாக்க முடியும். தோளோடு தோள் தட்டி வாய் விட்டுச் சிரிப்பது மட்டும் நட்பல்ல. இன்னல்கள் தீர்க்க தட்டிக்கொடுத்து தலை நிமிரச் செய்வதே நட்பு.

இன்பத்தில் கூடி மகிழ்வது இயற்கை. தேனின் எறும்புகள் சொல்லிக் கொடுத்து அழைத்து வரப்படுபவை அல்ல. மனத்தின் மறுமொழிகள் வாய்ச்சொற்களாக வந்தால் நட்பு மணம் பெறும். நட்பில்லாத உலகம் அழகின்றி அன்பின்றி வாடும். முகம் மட்டும் மலர்தலின்றி அகமும் மகிழ்ந்து கண்கள் மலரும் கனிவே நட்பு. நட்பு இருக்குமிடம் நம் மனமே ! மனத்தில் நாளும் நல்ல நட்பை வளர்ப்போம்.

நட்பு - நட்பெனில் யாது : பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, புகைவண்டி நட்பு, இணைய நட்பு என பல்வேறு பட்ட நட்புகளில் முன் பின் தெரியாத - முகமறியாத நட்பெனப்படுவது இணைய நட்பாகும்.

இணையத்தில் - பதிவர்கள் -வலைஞர்கள் நட்பு என்பது மிகச்சிறந்த நட்பாகும். பதிவர்கள் இடும் இடுகையைப் படித்துப் படித்து - ரசித்து ரசித்து - மறுமொழிகள் இட்டு - அவர்களது எழுத்துகளில் மயங்கி - எழுத்தின் மூலம் நண்பர்களானவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பதிவர் சந்திப்பு - ஒரே இடத்தில் வசிக்கும் பதிவர்கள் - எளிதில் நண்பர்களாகி விடுகின்றனர்.

நட்பிற்கு இலக்கணம் படைப்பவர்கள் பதிவர்களே.

பதிவர்களிடையே சிறந்த நண்பர்களைத் தேடிப்பிடித்து விருது வழங்கும் செயல் தொடர்ந்து வருகிறது. அருமை நண்பர் - காரைக்குடி மருத்துவர் தேவன் மாயம் ( புனைப்பெயர் தான்) ஒரு இடுகை இட்டு இவ்விருதினை எனக்கு வழங்கி உள்ளார். விருதின் விதி முறைகள் படி நான் எனக்குப் பிடித்த சிறந்த நண்பர்களுக்கு இத்தொடர் விருதினை வழங்க வேண்டும்.

விதி முறைகள் :

1.
நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம். 2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம். 3. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல் - ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும். 4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்படக் கூடாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.


நான் விருது வழங்கத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் :

01 : தருமி - இவர் தான் நான் சந்தித்த முதல் வலைஞர் - நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில், மின்னஞ்சல்கள் மற்றும் மறுமொழிகள் மூலமாக நான் அதிகம் உரையாடியது இவரிடம் தான்.என்னை விட வயதில் மூத்தவர். ஓய்வு பெற்ற பேராசிரியர்.

02 : மீறான் அன்வர் :
நான் சந்தித்த இரண்டாவது பதிவர். பாசக்காரப் பயபுள்ள - சம்பன்குளத்தான் - கப்பலூரில் பணி புரிகிறான்.

03 : சிவசுப்பிரமணியன் : மூன்றாவது பதிவர் - மணப்பாறையைச் சேர்ந்தவர் - பெங்களூருவில் பணி புரிகிறார் - மிகச்சிறந்த நண்பர்.

04 : மங்களூர் சிவா : பழகுவதற்கு இனியவர் - புதிதாய்த் திருமணம் ஆனவர் - புது வரவினை எதிர்பார்ப்பவர்.

05 : நந்து - நிலா : ஈரோட்டினைச் சார்ந்த தொழிலதிபர் - நட்பு மற்றும் அன்பின் இலக்கணம்.

06 : வால் பையன் : அறிமுகம் தேவை இல்லாத அருமை நண்பர்

07 : தமிழ் பிரியன் : அருமை நண்பர் - அமீரகத்தில் பணி புரிகிறார் - வத்தலக்குண்டினைச் சார்ந்தவர்

08 : கோவி கண்ணன் : சிங்கையில் பணி புரியும் நண்பர் - ஆத்திகரா அல்லது நாத்திகரா - விவாதத்திற்குரிய கேள்வி

09 : துளசி கோபால் : மூத்த பதிவர் - அனைவரும் அறிந்த பதிவர் - உலகம் சுற்றும் பதிவர்

10 : நானானி : நல்ல குணமுடைய அமைதியான பதிவர்.

11 : சதங்கா : அமெரிக்க நாட்டில் பணி புரிகிறார் - சிறந்த நண்பர்

12 : பாசமலர் : மதுரையைச் சார்ந்தவர் - ரியாத்தில் வசிக்கிறார் - ஆங்கிலப் பேராசிரியை - தமிழில் கலக்குகிறார்

இரண்டாண்டு காலமாக பதிவராக இருக்கிறபடியால் எனக்கு நண்பர்கள் அதிகம். நேரில் கண்ட முகமறிந்த நண்பர்களில் அதிகம்தெரிந்தவர்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். மற்ற நண்பர்கள் வருந்த வேண்டாம்.

கடந்த மே மாதம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. அதில் அதிகமாக பதிவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை சில நிமிடங்கள் சந்தித்துப் பேசினேன். பிறகு அவர்களில் பலர் நண்பர்களாகி விட்டனர். அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட வில்லை. மனம் வருந்த வேண்டாம்.

நல்வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்

சீனா


Thursday 25 June 2009

மண விழாவில் பதிவர் சந்திப்பு

அன்பு நண்பர்களே

நேற்றைய தினம் - 24-6-2009 புதன் கிழமை மதுரையில் அருமை நண்பர் - சக பதிவர் கார்த்திகைப் பாண்டியனின் தங்கை திருமணம் சிறப்பாக நடந்தது. நண்பரோ அனைத்து நண்பர்களையும் நேரிலும் தொலைபேசியிலும் மண விழாக் காண
அன்புடன் அழைத்திருந்தார்.

திருமண மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம். அதில் சிறு தீவாக நமது பதிவர் வட்டம். நானும் எனது துணைவியும் ( அவர்களும் பதிவர் தான்) சென்றிருந்தோம். மண்டப வாசலிலேயே காரைக்குடியில் இருந்து வந்திருந்த மருத்துவர் தேவகுமாரும் சிவகாசியிலிருந்து வந்திருந்த அன்புமதியும் மதுரையில் இருக்கும் தேனி சுந்தரும் வரவேற்றனர்.

தேவன்மயம் எங்களை அன்புடன் அழைத்துச் சென்று காலை உணவு ஏற்பாடு செய்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்திலேயே நின்று அவரது வீட்டுத் திருமணம் போல் உபசரித்தார். நன்றி நல்ல உள்ளத்தினிற்கு.

திருப்பூரிலிருந்து ஆதவனும் சொல்லரசனும், மதுரையில் இருந்து ஸ்ரீதரும் தருமியும் பாலகுமாரும் ஜாலி ஜம்பரும் வந்திருந்தனர். களை கட்டியது சந்திப்பு.

மண விழா முடிந்ததும், என்னுடைய அலுவலக அவசர அலுவல் காரணமாக நாங்களூம் விடை பெற்றோம். நண்பர்களும் மாலை வரை இருந்து நீண்டதொரு சந்திப்பாக மாற்றி விடை பெற்றதாக அறிந்தேன்.

புகைப்படங்கள் - வீடியோ எல்லாம் மற்ற பதிவர்களீன் இடுகைகலில் பார்க்கலாம். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்த கா.பாவினிற்கு நன்றி


Friday 5 June 2009

மாட்டிக்கிட்டேனே

அன்பின் ரங்கா - பழகலாம் வாங்கன்னு சொல்லி தொடர் இடுகைலே மாட்டி வுட்டுட்டான்.

என்ன செய்யறது ..... பதில் சொல்வோமே

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாய்வழித் தாத்தாவின் பெயர் எனக்கு என் அம்மா ஆசையாக வைத்தார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

என் தாய் இறந்த போது -

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும், ஆனா நான் எழுதற்தே இல்லையே - பேனா திறப்பதே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடத்தான்


4).பிடித்த மதிய உணவு என்ன?

வெஜிடேரியன் .. அதனால் தக்காளி சூப் - உருளைக் கிழங்கு அவியல் - பூசனிக்காய் சாம்பார் - தயிர் - சாதம்



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமா யாராச்சும் பழக ஆரம்பிச்சா உடனே நட்பு தான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் குளிக்கப் பிடிக்கும் - ஆனல் சந்தர்ப்பங்கள் குறைவு

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தோற்றம் - கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என் திறமை - என் முன் கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

அதிக அன்பு- என்னைச் சோம்பேறியாக்கும் வகையில் என் வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்வது

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

பெற்ற மக்கள் அயலகத்தில் - அவர்கள் இல்லாதது வருத்தத்தினை அளிக்கிறது


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஊதா - நீலம்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கணினியின் திரை பார்க்கிறேன் - ஒன்றும் கேட்கவில்லை

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்,

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மற்றும் மலர்களின் மணம்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அண்ணன் தருமி
நானானி
துளசி

இவர்கள் என் சம வயதினர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சின்னப்பையன் ரங்காவின் பதிவுகளில் - அவனது அப்பாவினைப் பற்றிய பதிவு எனக்குப் பிடிக்கும். நல்ல கவிதை

17. பிடித்த விளையாட்டு?

செஸ் - ரம்மி - ஃப்ரீசெல்


18.கண்ணாடி அணிபவரா?

ஆம்

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


நகைச்சுவை - த்ரில்லர் - புராணப்படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, - சூபர் படம்

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

ஏனெனில் அந்த மாதங்களில் நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்பொழுதா - இரா.முருகனின் சிறுகதைத் தொகுப்பு

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றுவதே இல்லை

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அயலகம் - இலண்டன்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

கணினியில் மென்பொருள் - கோபால் நிரலி - கை வந்த கலை
ஸ்கோயூனிக்ஸ் - எம் எப் கோபால் -


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என் செயல்களில் குற்றம் கண்டு பிடிப்பது

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அந்தரங்கம் புனிதமானது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம். ஆக்ரா, மதுரா

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்.... ..

நாள் பூரா தூங்குவது - எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழு ! வாழ விடு !



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

தருமி, நானானி, துளசி

Saturday 2 May 2009

பட்டாம் பூச்சி விருது - பகுதி 2

பட்டாம்பூச்சி விருது - இதனைப் படித்து விட்டு இங்கே வரவும் :

ஆமா - இதென்ன பெரிய இடுகையா - கருத்துள்ள கதையா கவிதையா கட்டுரையா இலக்கியமா - என்ன இது சின்னப்புள்ளத்தனமா பகுதி இரண்டாமில்ல - கேக்கறதுக்கு ஆளில்லப்பா

யார்யா இது - இங்கே வந்து கத்தறது ......

சரி சரி தொலைஞ்சு போ - யாரெல்லாம் விருது வாங்கறாங்கன்னு சொல்லித் தொலை

முதல்வர் : பதிவுலகின் செல்லப் பிள்ளை - அனைவராலும் ரசிக்கப்படுபவள் - படங்களாகவே மயக்குபவள் - எல்லோரையும் கவர்ந்தவள் - நேரில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - தேவதை - நிலா

இரண்டாமவர் : அருமை அண்ணனின் - தருமியின் - மதுரை என்றாலே நினைவுக்கு வரக்கூடிய மூத்த பதிவர் தருமியின் - அருமைப் பேத்தி ஜெசிகா

மூன்றாமவர் : பப்பு - சந்தன முல்லையின் செல்ல மகள் - குறும்புக்காரி - அம்மாவினை அதிகம் தொந்தரவு செய்யாதவள் - எனக்குப் பிடித்தவள்
நல்வாழ்த்துகளுடன் கூடிய விருது.

எப்பா அறிவிச்சாச்சுப்பா

அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்வாழ்த்துகள்

இப்ப விதி முறைகள்:

இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

அதனால மூணுபேருமே என்னைப்போல தாமதிக்காமல் பட்டாம்பூச்சி போல பறந்து பறந்து விருதைக் கொடுத்துடுங்க:)

வணக்கம்.

அன்புடன் .... நட்புடன் .... சீனா

Friday 1 May 2009

பட்டாம் பூச்சி விருது


அன்பின் பதிவர்களே !

நான் இடுகைகள் இடுவதை விட மறுமொழிகள் இடுவதையே அதிகம் விரும்புபவன். இருப்பினும் அன்பின் காரணமாக எனதருமை நண்பர் கோவி கண்ணன் எனக்கும் சில நாட்கள் முன்னதாக (19.03.2009) பட்டாம்பூச்சி விருதினை அளித்து விட்டார். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து - எழுதுவதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து - இன்று ஒரு முடிவுடன் எழுதுகிறேன்.

காரணம் - எனது துணைவியார் இன்று அவருக்குக் கிடைத்த விருதின் விதிகள் படி செயலாற்றி விட்டார். இனி பொறுப்பதில்லை என பொங்கி எழுந்து விட்டேன்.

கோவியாரோ அகவை ஐம்பதைக் கடந்த மூவரைத் தேர்ந்தெடுத்தார். நானோ மழலைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். ஏனெனில் பேரன் பேத்திகளைக் கொஞ்சும் காலமல்லவா இது !

முதல்வர் : நான் விரும்பிப் படிக்கும் பதிவர். பதிவு துவங்கிய காலம் முதல் அனைத்து இடுகைகளையும் படித்தவன் என்ற முறையில் அவருக்கு விருதினை அளித்து அவரை மகிழ்வித்து நான் பெருமைப் படுகிறேன். அருமை நண்பரின் மகள் - அவர் யாரென மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாமவர் : புதிய பதிவர் - மூன்றே இடுகைகள் தான் இட்டிருக்கிறார். வரைவதில் கெட்டிக்காரர். நினைவாற்றல் மிக்கவர். அருமை நண்பரின் பேத்தி. அமெரிக்காவில் வசிப்பவர் - வாழ்பவர். யாரெனக் கண்டு பிடியுங்கள்

மூன்றாமவர் : சித்திரக்கூடத்தின் இளவரசி - பொம்மைக்குக் கூட ஓவியம் கற்பிப்பவர். மழலையாய் உதிர்க்கும் மனமுத்துக்கள் நம்மை மயக்கும்.

ஆக வரட்டா - போதும் இன்னிக்கு - நாளை அறிவிக்கிறேன் - விருது பெற்ற பெரும் பேறு பெற்ற பதிவர்களை.

சரியா - பை பாஃர் நௌ

சீனா

Sunday 22 February 2009

துவண்ட உடல் - துவளாத மனம் !!

அன்பு நண்பர்களே !!
அந்தோணி முத்துவினைப் பற்றி பல பதிவுகள் இடப்பட்டிருக்கின்றன.
பல செய்திகள் - ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றன.
ராணி வாரப்பத்திரிகை - 21.12.2008ல் வந்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்



அவருடைய வலைப்பூக்கள் :




அவருக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி
சீனா







Sunday 18 January 2009

பதிவர் சந்திப்பு - பொங்கல் திருநாளன்று

அப்பாடா - இன்னிக்கு தேதி 19 - பொங்கல் முடிஞ்சு அஞ்சு நாள் ஆச்சு - எல்லாப் பதிவர்களும் பொங்கல் வாழ்த்து சொல்லி - மாடுகளுக்கெல்லாம் மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்லி - பொங்கலப் பத்தி - மாட்டுப் பொங்கலப் பத்தி பதிவெல்லாம் போட்டு மறுமொழியெல்லாம் கேட்டு வாங்கி - அதுக்கெல்லாம் பதில் பொட்டு - பொங்கல மறந்துட்டு அவங்க அவங்க - அவங்க அவங்க வேலையப் பாக்க ஆரம்பிச்சாச்ச்ச்ச்சு.

நான் இப்பத்தான் ஆற அமர ஒரு பதிவு போடலாம்னு வந்துருக்கேன். என்ன இவ்வளவு தாமதமாப் போட்டா படிப்பீங்களா ? படிக்கணும் ஆமா சொல்லிப்புட்டேன்.

இந்தப் பொங்கல்லே என்ன விசேசம்னா - ஒரு பாசக்காரப் பய - பதிவரு தானுங்க - மீரான் அன்வர்னு ஒரு பய - அன்புடன் குழுமத்திலும் எழுதறானுங்க - மதுரைல வேலை பாக்குறான் - சம்பன்குளத்தான் - வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லி கடசில பொங்கல் அன்னிக்கு வந்துட்டான்.

பொங்கல் அன்னிக்கு நாங்க வழக்கம் போல ரொம்ப பிஸி - எங்க தங்க்ஸெ பிடிச்சுக்க முடில - அன்னிக்கு என் தம்பி குடும்பத்தோட அன்போட சென்னைலேந்து வந்திட்டான். அவன் கூடப் படிச்ச நண்பன் ஒருத்தனும் குடும்பத்தோட வந்துட்டான். ஆக மொத்தத்தில் வூடு கலகலன்னு மகிழ்ச்சியா - ரொம்ப நாளைக்கப்புறம் - இருந்திச்சி.


இது நான் தாங்கோ - நம்புங்க - கூட நிக்கற சின்னப் பய என் தம்பியோட வாரிசு.

இது தாங்க சம்பன்குளத்தான் - அன்வர் மீரான் - என்ன ஜாலியா என் கணினிலே உக்காந்து போஸ் கொடுக்கறான் பாருங்க.

இது எங்க வூட்ல எங்க தங்க்ஸ் போட்ட பொங்கக் கோலமுங்க. பொங்கல் கோலத்துடன் துவங்கிய பொங்கல் திருவிழா. இந்தக் கோலம் சாமி ரூம்ல சாமிக்கு முன்னாடி பொங்கல் படைக்கறதுக்காக போட்ட கோலம்.

இது பொங்கப்பானை வைக்கறதுக்காகப் போட்ட கோலம். ரெண்டு சக்கரப் பொங்கல் மற்றும் ஒரு வெண்பொங்கல்.
மூணு பானைலேயும் பொங்கல் பொங்கற சமயமுங்கோ
ஆகா - பொங்கல் பொங்குதுங்கோ - பொங்கலோ பொங்கல் - பால் பொங்கிச்சா - பரஸ்பரம் விசாரிச்சிக்கிட்டோம்.

அடுத்து சாமிக்குப் படைக்கணும் - கரும்பு மஞ்சக்கொத்து கண்ணுப்பிள்ள ஆவாரம்பூ, பனக்கிழங்கு, சோளக்கருது, தேங்கா, பழம், வெத்தலைப்பாக்கு, பூ, விளக்கு, பிள்ளையார் இதெல்லாம் வச்சிச் சாமி கும்பிட்டாச்சு - படைச்சாச்சு - அடுத்து என்ன - சாப்பாடு தானே !
சாப்பாடு அமர்க்களமா இருந்திச்சி - சக்கரைப்பொங்கல் - கூட பச்சரிசிச் சாதம், பருப்பு நெய், பலகாய் குழம்பு, தயிர், குழம்புலே போட்ட பல காய்கறிகள், சக்கர வள்ளிக் கிழங்கு பொறியல், பலாக்காய்க் கூட்டு --ம்ம்ம்ம்ம்ம்
இந்தப் பலகாய்க் குழம்புலே என்னன்ன காயெல்லாம் போடுவாங்க தெரியுமா -கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழக்காய், பலாக்காய், அவரைக்காய், மாங்காய், தேங்காய், மொச்சைக்காய், கொத்தவரங்காய், பறங்கிக்காய், சுரைக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் எட்செட்ரா !!
இந்தக் குழம்பு மறு நா காலைப் பலகாரம் வரைக்கும் சூடு பண்ணிப் பண்ணி ஊத்திக்கலாம்.
ஆக பொங்கல் வாழ்த்துகள் சொல்லி மகிழ்ச்சியா அடுத்த பிளான் போட்டோம். சாயந்திரமா மீரான் கிளம்பிட்டான்.
சாயந்திரம் மதுரைலே இருந்து 20 கிலோமீட்டர் தூரத்துலே இருக்கற ஹவாவெளி ங்கற பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போனோம் - அதெப்பத்தி அடுத்த பதிவுலெ (???) சொல்ரேன்.
இப்ப வர்ட்டா ....... எல்லொர்ருக்கும் அஞ்சு நாள் கழிச்சு - பொங்கல் வாழ்த்து !!!!
நட்புடன் ..... சீனா




Friday 9 January 2009

முடிவெடுங்கள்

அன்பர்களே !

திரு மாறன் என்பவர் எழுதிய வெற்றி மாலை என்ற நூலிலிருந்து .....

முடிவெடுங்கள் :
-----------------------
வெற்றியாளனாக வேண்டுமென்றால் இன்றே இப்பொழுதே முடிவெடுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் முடிவெடுப்பதைத் தள்ளிப் போடாதீர்கள்.

தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப் போட்டு விடுங்கள். ஜப்பானியர்கள்
உயர் நிலையை அடைய முக்கிய காரணமாக அவர்கள் சொல்வது DO IT NOW - இப்பொழுதே செய்து முடி என்பதே !

நாம் பெரும்பாலும் காரியங்களைச் செய்வதில் தாமதம் செய்து, சாதாரணமாக முடிவெடுக்க வேண்டிய செயல்கள் தாமதமாகி, அவசரச் செயலாகவும், அவசரச் செயல்களை மீண்டும் தாமதம் செய்து, மிக மிக அவசரச் செயல்களாக, அரைகுறையாய்ச் செய்து முடிப்போம்.

எனவே முடிவெடுத்து விட்ட நிலையில் சிறிதும் தாமதிக்காமல் உங்கள் செயல்களைச் செய்யத் திட்டமிடுங்கள்.

காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை.

எனவே காரணங்களைத் தவிர்த்து காரியம் கைகூட இப்பொழுதே முடிவெடுங்கள்.

நட்புடன் ... சீனா

Wednesday 7 January 2009

சமையல் குறிப்பு : அவல் கிண்டுவது எப்படி

சகோதரி நானானி அடுத்து என்ன கிண்டி, கிளறப் போறீங்கன்னு கேட்டிருந்தாங்க என்னோட மா உருண்டைப் பதிவுலே - அதன் தொடர்ச்சியா அவல் கிண்டப் போறேன்.

தேவையான பொருட்கள் :

அவல் : 200 கிராம்
வெல்லம் : 100 கிராம்
ஏலக்காய் : 3 அல்லது 4
முந்திரிப்பருப்பு : 5 அல்லது 6
திராட்சை : 7 அல்லது 8
நெய் : 2 ஸ்பூன்
தேங்காய் : அரை மூடி ( துருவி வச்சிக்கணூம்)


(அப்புறம் கேஸ், கேஸ் அடுப்பு, வாணலி, கரண்டி, மூடி கை துடைக்கத்துண்டு இதெல்லாம் எடுத்துக் கொடுக்க ஒரு ஆள் ( பொன்னா இருந்தா நல்லது) - இவ்வளவும் இருந்தா தான் அவல் நல்லா கிண்ட முடியும்)

முதலில் அவலை லேசா ஒரு கழுவு கழுவி ஒரு டம்ளர் தண்ணீலே ஊற வைக்கணும் ( 10 நிமிடம்). அப்புறம் எரியற அடுப்பிலே சட்டி வச்சி அதுலே முந்திரி, திராட்சையை நெய்யிலே நல்லா வறுத்துக்கணும். ரெண்டு டம்ளர் தன்ணியை அது மேலேயே ஊத்தி, வெல்லத்த தட்டி அதுல போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். நல்லா கொதிச்சதும் ஊற வச்ச அவலை அதுலே கொட்டி நன்றாகக் கிண்ட வேண்டும் - கிளற வேண்டும். அடிப்ப்டிக்க விட்டு விடக் கூடாது. நல்ல வாசனை வரும் போது கீழே இறக்கி வைத்து துருவிய தேங்காயை அதில் தூவி நன்றாகக் கிளறி ரெண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

அவ்ளோ தான் - இப்போ அவல் நல்லா சாப்பிடலாம் - ரெடி - உடம்புக்கும் நல்லது - ஆமா சொல்லிப்புட்டேன்.

நட்புடன் ...... சீனா

-----------------------

Tuesday 6 January 2009

திருமண வாழ்த்துப்பா - உடன் பிறப்பின் வாழ்த்து

தமக்கையின் மண நாளன்று தங்கை படித்த நல்வாழ்த்துப் பா
---------------------------------------------------------------------------------
ஆடிப்பாடி அன்பாய் இருந்த நாட்கள் - நாம்
கூடிப்பேசி குலாவி மகிழ்ந்த பூக்கள் !

அறிவும் ஆற்றலும் நம் வாழ்க்கைப்படிகள்
ஆற்றலும் திறமையும் நம் பெற்றோர் மகிழ்ந்தபூக்கள் !

வளர்ந்த முல்லை ! வசந்த முல்லை ! வாழ்வின் செல்வி !
சேர்க்கும் தலைவன் சேதுராமன் செங்கரம் பிடிக்கின்றாய் !

அக்கா நீயும் அன்பாய் இரு ! அள்ளிக் கொடு !
ஆக்கிடும் இறைவன் அருள் புரிவான் !

வாழ்க வளமுடன் நீ !
வாழ்த்த வயதில்லை ! வணங்குகிறேன் !
நன்றே செய்து நலமுடன் வாழ்வாய் !

-----பிரி.

Monday 5 January 2009

ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் என்ற புத்தகத்திலிருந்து சில பொன்மொழிகள்.
ஆங்கிலத்தில் இருக்கிறது - தமிழாக்கம் செய்ய வேண்டும்.

The happiness of the world is transitory. The less you become ataached to the world, the more you enjoy peace of mind.

Even the impossible becomes possible through devotion.

One who makes a habit of prayer will easily overcome all difficulties and remain calm and unruffled in the midst of the trials of life.

He who thinks of the LORD, in which way can evil come to him ?

படியுங்கள் - பயனடையுங்கள் - நன்றி





Sunday 4 January 2009

புத்தாண்டு வாழ்த்துப் பா !!

அருமை நண்பர்களே !

எனது நண்பர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்தாக இக்கவிதையை எழுதி மடல் வரைந்திருந்தார். படித்தேன் - ரசித்தேன் - கடைப்பிடிக்க வேண்டுமென நினைத்தேன். நீங்களும் படியுங்களேன் !
---------------------------------------------------------
அழகாய் மௌனமாய் வீற்றிருக்கும்
பழகப் பழக
புதுப்புது செய்திகள் சொல்லும்
இரவைப் பகலாக்கும்
விடிந்தாலும் இரவாய் பயணிக்கும்
தூக்கம் கலைக்கும்
தொடர்ந்து நித்திரைக்கும்
தூது செல்லும்.

படர்ந்த சிந்தனைகளை
மெதுவாய் அசைபோடும்
புதியன தேடவைக்கும்
புதிராய் அலையவைக்கும்
தாயாய் - தாரமாய்
தலைமுறை போற்றும் சேயாய்
விரலைப் பற்றி
நிழலாய் வலம்வரும்..............

புத்தகமே - நம்
புது அகம் !!
புத்தகமே - நம்
புது யுகம் !!

வாசிப்பே சுவாசிப்பு !
வாசிப்பவரே வசிப்பவர் !
வாசித்தல் நேசிப்போம் !!
வாழ்தலில் வசந்தம் சேர்ப்போம் !!
============================
நட்புடன் .... சீனா .......
--------------------------------------------

Saturday 3 January 2009

மா உருண்டை

அருமை நண்பர் சதங்கா மா உருண்டை எப்படிச் செய்வதென்று ஒரு பதிவு அவரது செட்டி நாட்டுக் கிச்சன் என்ற வலைப்பூவினில் போட்டிருந்தார். நானும் மாஉருண்டை செய்வதில் எங்க அம்மாவுக்கு உதவி இருக்கேன். இப்ப என்ன பண்றது - எப்படிப் பண்றதுன்னு பாக்கலாமா

தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - சீனி - நெய்

செய்முறை :

பாசிப்பருப்பையும் சீனியையும் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கணும் - அப்பல்லாம் வீட்லெ மிக்ஸி எல்லாம் இல்லீங்கோ - மிஷின் காரன் சீனி பிளேட்ல ஒட்டிக்கும் - அதனாலே இப்ப அரைக்க முடியாது - கடசியா கட மூடும் போது அரைச்சுத் தரேன்னு சொல்லுவான் - சாயந்திரமா போய் காத்துக்கிட்டுருந்து அரைச்சுக்கிட்டு வரணும்.

அடுப்புலெ சட்டிய வச்சி - நெய் ஊத்தி காய வைக்கணும். இளஞ்சூடா இருக்கற நெய்யே எடுத்து அப்படியே மாவுலே ஒரு கரண்டி ஊத்தி - மாவையும் நெய்யெயும் சேத்து பதமா உருட்டி - மாவு உருண்டைக் கிண்ணம்னு ஒண்ணு இருக்கும் - சின்னதா அழகா - அதுலே வச்சி அமுக்கி - கிண்ணத்தெ தலை கீழா கவுத்தா மாவுறுண்டை ரெடி. அப்புறம் சாப்பிடலாம் . செய்யும் போதே மாவை அள்ளி அள்ளித் திங்கலாம்.

இப்படியே ஒவ்வொரு கரண்டியா நெய் விட்டு மாவுருண்டை பிடிச்சி - எல்லா மாவையும் உருண்டையாச் செய்யணும். ரொம்ப நல்லா இருக்கும்.

இப்பல்லாம் தங்க்ஸுக்கு இதுல எல்லாம் நான் உதவி செய்யறதே இல்லீங்கோ - அம்மாக்கு மட்டும் பட்டப்படிப்பு முதல் வருடம் படிச்சப்போ உதவி பண்ணுனதுங்கோ - ( அள்ளித் திண்ணது தான் ஜாஸ்தி - மெஷினுக்குப் போய் கால் கடுக்க நின்னு அரைச்சிட்டு வந்தேன்ல )

வர்ட்டா - நாளைக்குப் பாக்கலாம்

Friday 2 January 2009

சென்ற பதிவின் தொடர்ச்சி

அன்பின் நண்பர்களே

சென்ற பதிவின் தொடர்ச்சியாக - சென்ற ஆண்டு எடுத்த சபதத்தினை ஆய்வு செய்ததின் விளைவாக இப்பதிவு. ஒவ்வொரு சபதமாகப் பார்ப்போம்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)

நண்பர்களே ! உதவி செய்வது சென்ற ஆண்டு தடைப்பட வில்லை. உறவினர்களுக்கும், நட்புக்கும், முன் பின் தெரியாதவர்களுக்கும் உதவி தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. சபதம் நிறைவேறியதாகக் கொள்ளலாம். கடன் வாங்கவில்லை. கையைச் சுட்டுக் கொள்ளவில்லை.

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்).

உயரவில்லை. இன்னும் அதே உயரம் தான் இருக்கிறேன். திறமைகளைப் பயன் படுத்த சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. செக்கு மாடு மாதிரி அலுவல் பணி ஆளை சுற்ற வைத்து விட்டது. சிறந்த கொள்கையான போதும் என்ற மனம் என்னை அறியாமலேயே வந்து விட்டது.

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மறு மொழி தருவதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்). யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - அது அவர்கள் ஹெட் லெட்டர்.

கவிதைகள், கதைகள் எழுத வில்லை - மர மண்டையில் உதிக்க வில்லை. பனியும் ( மார்கழி ) பணியும் உதிப்பதற்கு உதவ வில்லை. பின்னூட்டங்களுக்கு குறைவில்லை. கவிதைகளை ரசித்ததிலும் குறைவில்லை. அன்புடன் என்ற குழுமத்தில் அநேக கவிதைகளை ரசித்து மறு மொழி இட்டதுண்டு. யாருடைய ஹெட் லெட்டரையும் மாற்ற வில்லை ( நான் என்ன கடவுளா - மாற்றுவதற்கு).

4. படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும். ( மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகம் வருகிறது).

யாரும் என்னை அணுக வில்லை. யாரையும் நானும் தேடிப்போக வில்லை. இருப்பினும் சென்னையில் உள்ள மென்பொருளாளர்களால் நடத்தப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஒரு பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க உதவினேன். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் செய்து வந்த உதவிகள் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாக வெளி வருவது வருந்தத் தக்கதே. பெருமை அடித்துக் கொள்வதாய் நினைக்க வேண்டாம். ஆணடவன் அருளினால் முடிந்தவற்றைச் செய்கிறேன். கொடுப்பதும் அவனே ! கொடுக்க வைப்பதும் அவனே !

5. மற்றவர்க்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நாமும் மகிழ வேண்டும்.

இது ஓரளவிற்கு நிறைவேறியது. இன்னும் பூரண சரணாகதி அடைய வில்லை. விட்டுக் கொடுத்திருக்கிறேன். மற்றவர் மனம் மகிழ, நானும் மகிழ்ந்திருக்கிறேன். விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை என அலுவலக நண்பர் ராஜூ அடிக்கடி கூறுவார்.

6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.

களைந்த மாதிரி தான். மறு மொழிகள் குறையவில்லை. அன்புடன் குழுமத்திலும் வலைப்பூக்களிலும் மறு மொழிகளுக்குப் பஞ்சமில்லை. வஞ்சனை இல்லாது மறு மொழிகள் இட்டிருக்கிறேன். பதிவுகள் குறைவுதான். ஆனாலும் சபதம் நிறைவேறியது. 2007ல் இட்ட பதிவுகளை விட 2008 ல் அதிகப் பதிவுகள் வெளியாயிற்று.

7. தொலைபேசிக் கட்டணம் மாதம் 2000 வருகிறது ( இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால்). சக பதிவர், எனது துணைவி, ( வலை மொழியில் தங்கமணி) இது அதிகம் எனவும், குறைக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். கவனிப்போம்.

சகபதிவர்களின் ஆலோசனைப்படி இணையக் கற்றையில் நல்ல திட்டத்தினைத் தேர்ந்தெடுத்து பயன் படுத்துகிறேன். மாதம் 500 ரூபாய்க்குள் அடக்கி விட்டேன். ஆக நிறைவேறிய பட்டியலில் இதைச் சேர்க்கலாம்.

8. போதாதா ஏழு - சபதமில்லாமல் ஒன்று. துளசி தளம் முழுவதும் படித்து விட வேண்டும்.

இது சபதமில்லை. எனவே கவலை இல்லை. ஆனாலும் துளசி தளத்தில் அதிகப் பதிவுகள் படித்தேன். மறு மொழிகள் இட்டேன். துளசி தான் கூற வேண்டும். சரியா தவறா என்று.

சரி - சுய பரிசோதனை முடிந்தது. ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ( அப்ரைசல் இப்படித்தான் பூசி மெழுகி எழுதுவோம்).

இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என சுய தம்பட்டமமடித்து, தலைக்கனம் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன். தவறு தான். ஆனால் அப்ரைசல் செய்ததை எழுத வேண்டும் இல்லையா.

சரி சரி ரொம்பப் போரடிக்காமாப் போய்யான்னு என் இளவட்ட பதிவுலக நண்பர்கள் கூவுறாங்க..... 2009 சபதங்கள் யாருமே எனக்குத் தெரிந்து பதிவு போடலே ! அதனாலே நானும் போடலே !

நாளைக்குப் பாப்போமா - வரட்டா

நட்புடன் சீனா

Thursday 1 January 2009

சென்ற ஆண்டின் சபதமும் இந்த ஆண்டின் சபதமும்

அன்பின் சக பதிவர்களே !

சென்ற ஆண்டு - சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் முதல் நாள் - இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு சனவரித் திங்கள் பதினைந்தாம் நாள் - செவ்வாய்க்கிழமை மாலை 17:17 மணி அளவில் 2008ம் ஆண்டின் புத்தாண்டு சபதமாக என்ன எல்லாம் 2008ம் ஆண்டு செய்ய வேண்டும் என ஒரு பதிவு போடிருந்தேன். முப்பத்து ஒரு மறு மொழிகள் வந்திருந்தன. அப்பதிவினை தற்செயலாக ( நம்புங்க அய்யா !!! ) படித்ததில் ஒரு சுய பரிசோனை - ஒரு ஆய்வு செய்தாலென்ன என ஒரு எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

முதலில் அச்சபதம் எடுக்கக் காரணமாயிருந்த சகோதரி
நானானிக்கும், நண்பர் ரூபஸ் அருளுக்கும் நன்றி தெரிவித்து, அவர்களுக்கு என்னுடைய சபதத்தின் இன்றைய நிலை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமை - கட்டாயத்தில் இருப்பதினால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

மேலும் அப்பதிவினில் என்னை 2009ம் ஆண்டு, சபதம் நிறைவேறியதா இல்லையா எனச் சோதித்துப் பார்ப்பேன் எனப் பயமுறுத்திய கண்மணி அவர்களுக்கும் இப்பதிவினில், நிலை என்ன என்பதை அறிவிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

மேலும் அப்பதிவினில் எனக்கு அன்புக் கட்டளை ...ட்டளை ......டளை .........ளை இட்ட மங்களூர் சிவாவினிற்கும் இப்பதிவினில் நிலை என்ன என்பதை அறிவிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

பில்டப் போதுமா - பதிவைத் தொடரலாமா வேணாமா ( எல்லோரும் வேணும் வேணும்னு கேக்கறது எனக்குக் கேக்குது ) - கட்டாயம் தொடர்வேன் - நாளைக்குப் பாக்கலாமா .......

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தவை நடக்கவும், விரும்பியது கிடைக்கவும், மகிழ்வுடன் இருக்கவும், சிறப்புடன் வாழவும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் ....... சீனா