ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 28 December 2013

தேவை தேவை - அவசரத் தேவை - இன்னும் 36 மணி நேரத்தில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க ந்ண்பர்கள் தேவை

தேவை தேவை - அவசரத் தேவை - இன்னும் 36 மணி நேரத்தில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர்கள் தேவை

அன்பின் நண்பர்களே !

இன்னும் 36 மணி நேரத்தில் - 30.12.2013 திங்கட் கிழமை காலை ஆறு மணி  முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று பணியாற்ற ஒரு பதிவர் தேவை - மிகக் குறுகிய காலத்தில் பொறுப்பேற்க அழைக்கும் படி ஆகி விட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். 

இணக்கம் தெரிவித்து மடல் எழுதுக - cheenakay@gmail.com 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா 



Wednesday 9 October 2013

இன்பச் சுற்றுலா - 6, 7 மற்றும் 8 ம் நாள் அக்டோபர் 2013

அன்பின் நண்பர்களே ! 

2013 அக்டோபர் 6, 7 நாட்களில் ஒரு இன்பச் சுற்றுலாவாக நானும் எனது அருமைத் துணைவியாரும் திருச்சி - பதிவர் சந்திப்பு -  மற்றும் தஞ்சை மாநகரில் உள்ள  கோவில்கள் - வைத்தீஸ்வரன் கோவில் மற்றும்  தஞ்சையில் நான் 1950ல் பிறந்து வளர்ந்து தவழ்ந்த வீட்டினையும், ஓடி விளையாண்ட சஙகர மடத்தினையும் மேல வீதியில் உள்ள சங்கர நாராயணர் கோவிலையும், காமாட்சி அம்மன் கோவிலையும், பெரிய கோவிலையையும்,  மாரியம்மன் கோவிலையும் கண்டு மகிழ்ந்தோம். 

மறு நாள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியோடு மதுரை திரும்பினோம். 

06.10.2013 : 

திருச்சியில் பதிவர் வை.கோபால கிருஷ்ணன் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் எதிர் பாராத விதமாக நவராத்திரி கொலு வந்து விட்ட படியால் பெண் பதிவர்கள் பலரால் கலந்து கொள்ள இயலவில்லை. விடுவோமா நாங்கள் . நண்பர்கள் வை.கோவும் தமிழ் இளங்கோவும் நாங்கள் தங்கி இருந்த பெமினா ஹோட்டலுக்கே வந்து சேர்ந்தனர். மாலை 5 மணீ அளவில் பதிவர் சந்திப்பைத் துவக்கினோம். 

ஏறத்தாழ இரண்டு மணீ நேரம் அளவளாவி மகிழ்ந்தோம்.

புகைப் படங்கள் கீழ்க்கண்ட பதிவுகளில் உள்ளன்.

இருவரும் பதிவர் சந்திப்பினைப் பற்றி எழுதிய பதிவுகள் : 



பிறகு பெண் பதிவர்களைச் சந்திக்க அவர்கள் வீட்டிற்கே நாங்கள் வைகோவின் துணையோடு சென்று சந்தித்து பேசி மகிழ்ந்து திரும்பினோம்.  திருமதி கீதா சாம்பசிவம், திருமதி ஆதி இலட்சுமி மற்றும் ரிஷபன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இரவு நெடு நேரமாகி விட்டது. 

07.10.2013

அயர்ந்து தூங்கிய பின்னர் மறு நாள் காலை 8 மணி அளவில் தஞ்சை புறபட்டோம். தஞ்சையில் முதலில் சென்ற இடம் அகத்தியர் குடில். அங்கே அருள் வள்ளலார் வீற்றிருக்கிறார்.  அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என்று நாம் அறிந்தோ அறியாமலோ அனைவரும் இத்தொடரை உச்சரித்து உள்ளோம். இந்த இடத்தில் அமர்ந்து அகத்தியர் குடிலின் தலைவரோடு உரையாடிய போது அதன் பொருளை உணர்ந்தோம். பிறர் துன்பம் போக்க மனம் கசிந்துருகலே கருணை என்று ஒரு ஒருமைப் பாட்டியக்கத்தைத் தோற்றுவித்த வள்ளலாரின் உருவச் சிலையோடு அந்த மடம் திகழ்கிறது. மடம் உண்மையில் நம் மடமை போக்குகின்ற இடம்தான் - அதை உணர்ந்தவற்கு !

மனமும் மருந்தும் மலரும் நம் நோய் தீர்க்குமென்பதை அங்கு உரையாடிய அந்த நேரங்களில் உணர்ந்தோம். உள்ளத்தில் ஓர் இடத்தை ஏற்படுத்தி  - அங்கே உன் நினைவை இறைவனாக வீற்றிருக்கச் செய் என்ற தத்துவம் செய்முறை விளக்கம் போல் காட்சி தந்தது. ஓர் உயர்ந்த பீடம் அதன் மேல் ஓர் அழகிய சிம்மாசனம். அதன் நேர் மேல் ஓர் ஒளிவிளக்கு.  அந்த விளக்கொளியில் நம் மனத்தைக் கொண்டு போய் வீற்றிருக்கச் செய்தால் இறையன்பு தோன்றும். 

இதுதான் இரண்டாம் நாள் இன்பச் சுற்றுலாவில் நாங்கள் தஞ்சையில் முதலில் கண்ட இடம். 

உடனே எங்கள் உள்ளத்தில் காணும் இறைவனைக் காணத் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ( பெரிய கோவில்) நோக்கிச் சென்றோம். காலால் நடந்து கைகளால் தவழ்ந்து தலையால் நகர்ந்து உடல் தேய்ந்து எலும்புவாய் உருண்டு பிரண்டு கைலாயம் சென்ற காரைக்கால் அம்மையாரின் காட்சியைக் கண்ணிலும் மனத்திலும் தேக்கி கால்கள் சுட்டெரிக்கும் உச்சிப் பொழுதிலே ஓடிச் சென்று பெருவுடையாரைக் கண்ட காட்சி பெரிதும் மகிழ்வினைத் தந்தது. ( பெரிய கோவிலைக் காண காலையிலும் மாலையிலும் செல்லுதல் வேண்டும் )

அடுத்து மதிய உணவிற்குப் பின் நான்  - 1 முதல் 5 வரை படித்த நாயணக்காரத் தெருவில் உள்ள டி.கே.சுப்பையா நாயுடு துவக்கப் பள்ளி சென்று தலைமை ஆசிரியை மற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடி என்னுடைய 1955 ஏப்ரல் முதல் -1960 மார்ச் வரை   எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம். 

பள்ளியினைச் சுற்றிப் பார்த்து பழைய நினைவினை மனதிற்குக் கொண்டு வந்தேன்.  

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆண்டு விழாவிற்கு அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொண்டனர். அழைப்பு அனுப்புக - வருகிறோம் எனக் கூறி அலைபேசி எண், முகவரி, ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டோம்.  

1960 ஏப்ரல் முதல் 1963 மார்ச் வரை - 6,7 மற்றும் 8ம் வகுப்பு வரை படித்த - தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவ உயர் நிலைப் பள்ளி இயங்கிக் கொண்டிருக்கும் மங்கள விலாஸ் கட்டிடத்திற்குச் சென்று ஆசிரியப் பெருமக்களைக் கண்டு அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பறைகளுக்கும் சென்று மகிழ்ந்தோம். 

வகுப்பறையில் சென்று மாணவச் செல்வங்களைக் கண்டு - உரையாடி வந்தேன். இப்பள்ளியில் படித்துத் தான் வங்கியில் முதனமை மேலாளராகப் பணியாற்றும் அளவிற்கு நான் பண்பு பெற்றேன். நீங்களும் நன்றாகப் படித்து நல்ல பிள்ளைகளாக வளருங்கள் என்று வாழ்த்தினேன். 

அன்பால் மாணவச் செல்வங்கள் என்னிடம் கையொப்பம் கேட்டு வண்டுகளாய் என்னை மொய்த்துக் கொண்டனர். நானும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அன்புடனும் வாழ்த்துகளுடனும் கூடிய கையொப்பம் இட்டேன். 

படித்தது வீரராகவ உயர்நிலைப் பள்ளி என்றாலும் விளையாடச் சென்றது எல்லாம் கல்யாண சுந்தரம் உயர் நிலைப் பள்ளி தான். ஆகவே அங்கும் சென்று ஆசிரியப் பெருமக்களைக் கண்டு பேசி மகிழ்ந்து வந்தோம். 

பிறகு நான் பிறந்த, மேல வீதியில் சங்கர மடத்திற்கு அருகில் உள்ள வான்மாமலை மடத்தின் வீட்டினைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டினில் உள்ளவர்களிடம் என் பிறந்த வீடு இது ( 1950 ) எனப் பெருமை பேசி வீட்டினைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தேன். அன்றைக்கு இருந்தது போலவே இன்றும் பழமை மாறாமல் உள்ளது. 

அதே தெருவில் அருகில் உள்ள சங்கர நாராயணர் கோவில் அன்று அடிக்கடி நான் சென்று வந்த இடம். நான் சுற்றி வந்த கோயில் வளாகம் அப்படியே என் நினைவிற்கு வந்தது. 

அதனால் தான் என்னையும் அந்த இறைவன் பெயரால் - வீட்டில் சங்கர் என்றே அழைத்தார்கள். 

மதிய உணவிற்குப் பின் சென்ற இடம் தஞ்சையில் சிறப்பு வாய்ந்த அரண்மனையில் உள்ள பெரியதொரு பழம் பெருமை வாய்ந்த நூலகம்.
இதன் வரலாற்றைக் கேட்ட பொழுதினிலேயே நாமறிந்த வரலாற்றில் எத்த்னை இடைச் செருகல்கள் என்பதனை அறிந்து பெருமூச்செறிந்தோம். 

வரலாறு எப்படிக் காக்கப் பட வேண்டுமென்ற அரசு நடை முறைகள் -. எத்தனை செயல்முறைகள் - அத்தனைக்கும் செப்பேடுகள் - ஓலைச் சுவடிகள் - கையெழுத்துச் சுவடிகள் - ஆவணங்கள் - அறிவியல் மருத்துவம் ஓவியம் அரசியல் வரலாறு என்று வகை வகையாய் எண்ணற்ற நூற் பதிவுகள் . இவற்றை பாதுகாத்த அறிஞர்கள்.
   
அடுத்து நாங்கள் சென்று வந்த காமாட்சி அம்மன் கோவில் தெருக்கோடியில் அமைந்த பெரிய கோவில். அக்கோவிலுக்கும் சென்று அம்மனை நவராத்ரிக் கோலத்தில் கண்டு மகிழ்ந்தோம்.

தஞ்சையைச் சார்ந்த மிகவும் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம். பெரியதென்றால் மிகவும் பெரியதாய் இருந்தது. 

08.10.2013

அடுத்த நாள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று திவ்ய தரிசனம் கண்டு இறை யருள் பெற்று மகிழ்வுடன் மதுரை திரும்பினோம். 

தஞ்சையில் எங்களீன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று இடங்களைப் பார்த்து மகிழ அன்புடன் வந்து உதவிய பண்பாளர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள். இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உமா மகேசுவரனார் மேல் நிலைப் பள்ளியில் முதுநிலைக் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர். தஞ்சையில் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் இவர் அறிமுகமானவராக இருந்தது எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தது. 

கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன் முதலிய மூன்று நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகின்றார்.

அவர் இல்லத்திலேயே எங்களைத் தங்க வைத்து விருந்தோம்பிய அவரின் அன்பு எங்களைத் திக்கு முக்காட வைத்தது. அவர் பெற்றோரும் துணவியாரும பிள்ளைகளும் அருமையாய் எங்களை வரவேற்றனர்.   

அனைவருக்கும் நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா 



Sunday 28 July 2013

எனது முதல் கணினி அனுபவம் - 1984 - 2010

அன்பின் நண்பர்களே ! 

அருமை நண்பர் தி.தமிழ் இளங்கோ என்னை எனது முதல் கணினி அனுபவம் என்ற தொடர் பதிவினில் எழுத அழைத்திருந்தார்.  ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகி விட்டனவே - ஒன்றும் நினைவில் இல்லையே எனச் சிந்தித்தேன். பிறகு மலரும் நினைவுகளாக இருந்த நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தித்து எழுதலாமெ என நினைத்தேன் . சிந்தித்து சிந்தித்து - தலையைச் சொறிந்து சொறிந்து எழுத ஆரம்பித்தேன். 

வங்கியில் 1974 - 2010 பணி புரிந்து 2010ல் பணி நிறைவு செய்து தற்போது ஓய்வாக, மதுரையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.

வங்கியில் கணினி அறிமுகப் படுத்த வேண்டும் என்ற கொள்கையினை எடுத்து பல்வேறு கணினி நிபுணர்களிடம் ஆலோசித்து வங்கி ஒரு முக்கியமான முடிவினை எடுத்தது.  

எந்த ஒரு வங்கியிலும் இல்லாத புதிய கொள்கையினை எங்கள் வங்கி எடுத்தது. 1984ல் எடுத்த கொள்கை இன்று வரை கடைப் பிடிக்கப் படுகிறது. 

அக்கொள்கை என்னவெனில் - கணினியில் பயன் படுத்தப் படும், வங்கி கணினி மயமாக்கப்படத் தேவைப்படும்   மென்பொருட்களை  சந்தையில் கொடி கட்டிப் பறந்த பல் நிறுவனங்களிடம்  இருந்து, மற்ற வங்கிகளைப் போல, விலைக்கு வாங்கிப் பயன் படுத்துவது இல்லை என்ற முக்கியமான கொள்கை. 

அதற்குப் பதிலாக வங்கிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை, வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்  பணியாளர்களை வைத்துத் தயாரிப்பது என்ற முக்கியமான கொள்கையும் எடுக்கப் பட்டது.

அதன் படி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பணியாளர்களை ஒரு தேர்வு வைத்துத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சியினை 90 நாட்களுக்கு அளித்து, பிறகு மென்பொருள் எழுதும் பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் 25 அலுவலர்களீல் நானும் ஒருவன். 
இந்த 25 அலுவலர்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு கணினி பற்றிய ஸ்னானப்ராப்தி கூட கிடையாது. 

முதல் மூன்று மாதங்களுக்கு - சென்னையில் நடக்கும் கணினித்துறையின் மென்பொருள் / வன்பொருள் கண்காட்சிகள்,  கணினி நிறுவனங்கள் நடத்தும் கூட்டங்கள், கணினித்துறையில் பணியாற்றும் நிபுனர்கள் வங்கிக்கு வந்து நடத்தும் கூட்டங்கள், அததனையிலும் இந்த 25 அலுவலர்கள் கலந்து கொண்டு கணினி பற்றிய அறிவு பெற வங்கி ஏற்பாடு  செய்தது.

முதல் 90 நாட்களில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி - கோபால் புரொகிறாம் எழுதுவது எப்படி என்பது தான். அனைவருக்கும் கோபால் பற்றிய புத்தகம் வழங்கப் பட்டது - ராய் & தஸ்திதார் எழுதிய புத்தகம்.

பிறகு கப்யூட்டர் வாங்கும் பணி நடந்தது - அதுவும் இந்த முதல் மூன்று மாதங்களீலேயே நடந்தது. 25 பேருக்கு முதல் மாதம் 4 அல்லது 5 கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. போட்டா போட்டி.  CPM - ஆபரேட்டிங்க் சிஸ்டம், கறுப்பு வெள்ளை மானிட்டர் ஸ்கிரீன், எட்டு இன்ச் ஃப்ளாப்பி ட்ரைவ், தோசைக்கல் மாதிரி ஃப்ளாப்பி, இத்துடன் இருவிரல் மட்டுமே பயன் படுத்தி அக்கணினியினைப் பயன் படுத்தி ப்ரொகிராம் எழுதினோம்.
10 விரலும் பயன்படுத்த தட்டச்சு தெரியாது - இப்பல்லாம் புகுந்து வெளயாடுவோம்ல. 

கோபாலில் புரொகிறாம்,  லோட்டஸ் தற்போதைய எக்செல் ஷீட்டின் முன்னோடி, டிபேஸ் தற்போதைய டேட்டா பேஸ்களீன் முன்னோடி, இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கூட சிரிப்பு வருகிறது. செக்ரட்டரி என்றொரு வேர்ட் பிராஸஸர். ஸ்விட்ச் தட்டிய உடன் 5 நிமிடங்களுக்கு   " லோடிங் செக்ரட்டரி - பிளீஸ் வெயிட் " அப்படின்னு ஒரு மெசேஜ் ஸ்கீரின்ல நிக்கும் - நாம பொறுமையாக் காத்துக் கிட்டு இருக்கணூம். 

 இப்ப இருக்கற மெயின் ஃப்ரேம் கம்பியூட்டர் அக்காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா ?  9 / 10 அடி உயரம் 3 /4 அடி அகலம் - டேப் ட்ரைவ் - கார்ட் ரீடர்..... இப்படி என்னவெல்லாமோ இருக்கும் - முழுவதும் குளிரூட்டப் பட்ட பெரிய அறையில் இருக்கும். 

அனைத்துப் புரொகிராம்களும் கார்டில் எழுதப்படும். கார்ட் பஞ்சிங் மெஷினில் ப்ரொகிராம் எல்லாம் கட்டளை கட்டளையாக பஞ்ச் செய்யப்பட்டு - கார்ட் ரீடரில் படிக்கப் பட்டு மெயின் ஃப்ரேம் கம்பியூட்டருக்கு அனுப்பப் படும். கணினி அறை கர்ப்பக் கிரகம் மாதிரி - குறிப்பீட்ட 3 அல்லது 4 அலுவலர்கள் தான் உள்ளே செல்லும் தகுதி பெற்றவர்கள்.  பல வண்ண விளக்குகள் மின்சாரத்தின் உதவியால் மின்னிக் கொண்டு இருக்கும்.

இது போதும்னு நினைக்கிறேன். போரடிக்கக் கூடாது. 

இந்தியாவிலேயே எங்கள் ஒரு வங்கிதான் துணிந்து முடிவெடுத்து - கணினியின் மென்பொருள்  -  வங்கியின் அலுவலர்களால் எழுதப்பட்டு - 2650 கிளைகள் முழுவதையும் கணினி மயமாக்கி - அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து  எந்தக் கிளையில் வேண்டுமானாலும் - மற்ற ஒரு கிளையில் கணக்கு வைத்திருப்பவர் இங்கு பரிமாற்றம் செய்து கொள்ள வசதி செய்து வாடிக்கையளர்களுக்குப் பல வித வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. 

எங்கள் வங்கி கணினி மயமானதில் - இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களீல் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

விடை பெறுகிறேன் நண்பர்களே !

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா 

Sunday 16 June 2013

வலைச்சரத்தின் தகவல்கள் தொகுப்பு

அன்பின் நண்பர்களே ! 

வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம்

இப்பொழுது வலைச்சரத்தில் பதிவுகளின் எண்னிக்கை இரண்டாயிரத்தினைத் தாண்டி விட்டது.

ஆகவே வலைச்சரத்தில் - பதிவுகள் பற்றிய தகவல்கள் தொகுக்கப் பட வேண்டும் என சிந்தனை ஓடியது.

தொகுக்கப் படத் 
தேவையான் தகவல்கள் ​:

வலைச்சரப் பதிவின் தேதி 
வலைச்சர ஆசிரியர் பெயர்
இவரது மின்னஞ்சல் முகவரி
இவரது வலைத்தள முகவரி
 
இவரது அலைபேசி எண்

வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப் படும் பதிவர் பெயர்
அவரது வலைத்தள முகவரி
அறிமுகப் படுத்தப் படும் பதிவின் தலைப்பு
அப்பதிவின் முகவரி

​ஆகியவை தொகுக்கப் பட வேண்டும்

தொகுப்பில் ஆசிரியர் பெயரோ, அவர் தொடர்பான தகவல்களோ, அறிமுகப் படுத்தப்படும் பதிவர் தொடர்பான தகவல்களோ, எந்த ஒரு தகவலைக் கொடுத்துத் தேடினாலும், அனைத்துத் தகவல்களும் திரையில் வர வேண்டும்.

இத்தொகுப்பில் தகவல் தேடும் வசதி வேண்டும். 

எப்படித் தொகுக்கலாம்

எவ்வளவு நாட்கள் ஆகும் 

மென்பொருள், கணினி - தேவைப்படும் மற்ற உபகரணங்கள் - ஆகும் செலவு

தொகுத்த பின்னர் தினந்தினம் நிரந்தரமாக அன்றையத் தினத் தகவல்கள் பதியப் பட வேண்டும்.

தோராயமாக எவ்வளவு செலவு ஆகும் 

இணையத்தில் உள்ள பதிவர்கள், முக நூல் நண்பர்கள், மற்றைய கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் அனைவரையும் அவரவர்கள் கருத்தினைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். 

சிந்தித்து - விபரமாக - மடல் எழுதவும். முகவரி : cheenakay@gmail.com

நல்வாழ்த்துகள் 

நட்புடன் சீனா




Friday 8 March 2013

ஜோதிஜியின் டாலர் நகரம் - ஒரு பார்வை

ஜோதிஜியின் டாலர் நகரம் : 

ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமும் முன்னேற்றமும் எப்படி இருக்குமென்பதை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஆங்காங்கே சமுதாயப் பார்வையும் சற்றே தலை தூக்குகிறது. பொதுவாக திருப்பூரில் வாழ்பவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பவை இயல்பானதாக இருக்கலாம். ஆனால் திருப்பூரைப் பற்றி புதிதாக அறிபவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கலாம்.

ஒரு வளர்ந்து வருகின்ற ஊர் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்கின்ற ஒரு ஊர் - உழைப்பையும் உழைப்பின் பயனையும் அடுத்த மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் தருகின்ற ஒரு ஊர் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்குத் தயங்காத மக்களைப் பெற்றிருக்கின்ற ஒரு ஊர் - முன்னேற்றமடைவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற சூழ்நிலைகள் உழைப்பாளிகளை வெறுப்படையச் செய்கின்றன எனபதை ஆதங்கத்தோடு எடுத்துரைத் திருக்கின்றார் ஆசிரியர்.  

அயல் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருள் வரும் வழிக்கும் வழி வகுத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற நாட்டாமைகள்,  உழைக்கின்ற ஊருக்கு உதவி வரத் தடுக்கின்ற வழி முறைகளை உள்ளத்தின் நெருடலோடு ஆங்காங்கே உணர்த்துகிறது இந்நூல்.

இயற்கை வளத்தை அழிக்கின்றது சாயக் கழிவுகள் என்றால் அதை நீக்கித் தொழில்வளம் பெறுவதற்கும்,  தனி ஒரு மனிதனுக்கும், அதனையே தொழிலாய்க் கொண்ட ஊருக்கும் வழி வகைகளைச் செய்வதற்கு ஆளுகின்ற அரசு உதவ வேண்டுமே என்ற ஆதங்கம் கருத்துக்களாய் வெடிக்கின்றது இந்நூலில். 

நூலின் துவக்கத்தில் வேலையின் அடிப்படை நிலையில் எல்லாம் தன் திறமையை மட்டுமே ஊன்றுகோலாய்க் கொண்டு உழைப்பில் போராடி 
முன்னேறிய வரலாற்றைச் சோர்வின்றி ஒரு எழுத்தாளனின் பார்வையில் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை வெளீப்ப்டுத்துகிறது. தொழில் - வளர்ச்சி - போராட்டம் - பொருள் - வாழ்க்கை  என்ற நிலைகளை எல்லாம் சொல்லும் போது ஆசிரியர் பாரம்பரியம் - கலாச்சாரம் - தாய் மொழிப் பற்று என்பதனை எல்லாம்  ஆங்காங்கே சொல்லி இருப்பதும் நமமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது. 

ஒரு ஊருக்கு உயிர் கொடுக்கின்ற தொழிலை, வளர்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். செய்தால் அது நாட்டின் நலத்திற்குத் துணை செய்யும் வளர்ச்சி தானே ! என்பதனை நூல் சொல்லாமல் சொல்கிறது. 

எண்ணங்களை எழுத்தாக்குவதென்பது எல்லாராலும் இயலாது.  ஆனால் அது ஜோதிஜிக்கு கை வந்த கலையாக வாய்த்திருப்பது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பாராட்டும் தகுந்த நேரத்தில் இருப்பது அதற்கு இன்னும் மேன்மை சேர்க்கும். 

நல்வாழ்த்துகள் ஜோதிஜி 
நல்ல சிந்தனைகளை இன்னும் தாருங்கள்.

ஆக்கம் செல்வி ஷங்கர். 

அன்புடன் சீனா 




Monday 11 February 2013

மதுரை வாசகர் வட்டம் - 8ம் ஆண்டு நிறைவு விழா

அன்பின் மதுரை வாசகர் வட்ட உறுப்பினர்களே !

நேற்று மாலை ( 10.02.2013 ) நடந்த மதுரை வாசகர் வட்டத்தின் 8ம் ஆண்டு நிறைவு விழாவில் சென்னை ராமகிருஷ்ணா மடத்தினைச் சார்ந்த சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்பு விருந்தினராய் ஆற்றிய சிறப்புரையின்   ஒரு பார்வை. 

தலைப்பு : STOP CHASING MONEY;START ACQUIRING WEALTH


                     பணத்தைத் துரத்தாதே ! செலவத்தைச்  சேர் - இது நம் மனத்திற்கு இடும் கட்டளை. பணமும் செல்வமும் வாழ்க்கையில் நம்மைப் பந்தாடுகின்றன. எது பணம் எது செல்வம் என்பதை அறிவதற்கே நமக்கு மனத் தெளிவு வேண்டும். செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கமுடையான் இடத்து என்ற செல்வத்தின் வரையறையை மிக இயல்பான சொற்களால் எளிமையான நடையில் கேட்பவர் மனம் கொள்ளுமாறு இனிமையாகப் பேசினார்.  சொல் நடையில் ஒரு அதிகாரமோ சொல்லாட்ட்சியில ஒரு ஆணவமோ இல்லாமல் அரிய கருத்துகளை எளிமையாய அவர் வெளிப்படுத்திய தன்மை இதுதான் துறவு என்பதை உணர்த்தியது.  அடக்கமும் அன்பும் ஆழமான அறிவும் நிறைந்த சொற்களால் அவர் நிறையக் கருத்துகளை எடுத்துரைத்தார். 

அவர் உரையின்  நோக்கம்  கேட்பவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற கருத்தினையேச் சுற்றிச் சுற்றி வந்தது. வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும் - அதனால் பொருளைத் தேடு - பொருளே வாழ்க்கை அல்ல - போதுமென்ற மனமே பொன் செய்ய்யும் மருந்து - தேவைகளை நிறைவு செய்யப் பொருளீட்டினால் அது மன நிறைவைத் தரும். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு பேராசையாய்ப் பொருளீட்டினால் அது பெரும் துன்பத்தைத் தந்து விடும்..  அளவான செல்வம் நிறைவான மனத்தைத் தருகிறது. அதற்கு ஒரு அழகான நிகழ்ச்சியாய் எட்டு ரூபாய் சேர்க்கிற ஒருவன் அதில் தானமும் செய்து தருமமும் செய்து எதிர் காலத்திற்கும் திட்டமிட்டு நிகழ் காலத்திலும் நிறைவோடு வாழ்கின்ற வாழ்க்கையை அவர் தெளிவாக எடுத்துரைத்தார். 

படிப்பு, பண்பு, அறிவு, பணம், புகழ், பேர், புனிதம், புண்ணியம் என்ற எட்டையும் பெறுவதே வாழ்க்கை. அதற்குப் பணம் ஒரு கருவி. அவ்வளவே.   அது அளவுக்கு மீறினால் கொம்பேற்றிக் கொள்ளும் ( “ப” பி” ஆகும் ). நம்முடைய பெயரும் படிப்பால் பண்பால் அறிவால் உயர வேண்டும். பெயரும் புகழும் பணமும் நல்வழியில் நல்லவற்றைச் செய்ய உதவ வேண்டும். 

பாம்பாட்டிகள் நிறைந்திருந்த இந்தியா இப்பொழுது எலி பிடிப்பவர்கள் நிறைந்த நாடாகி விட்டது - ( IT People use MOUSE ) என்று காலத்திற்கேற்ற நகைச் சுவையோடு வளரும் இந்தியாவை, வளர்கின்ற இந்தியாவை வெளிப்படுத்தினார். வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் - அது அளவிற்கு மேல் வீங்கி உடலின் வீக்கமாக மாறிவிடக் கூடாது.  செல்வம் சேர்வது அதிகமாகின்ற போது ஆணவமும் வளர்ந்து விடுகின்றது. பணம் வேண்டுமானால் சமபாதிப்பவனுடையதாக் இருக்கலாம் ஆனால் அதனைக் கொண்டு அவன் செய்கின்ற செயல் அடுத்தவர்களுக்குத் துன்பம் தராததாக இருக்க வேண்டும். அளவிற்கு மீறி ஆடம்பர ஆணவத்தோடு உணவுப் பொருட்களை வீணாக்குவது மிகப் பெரிய குற்றம். உணவென்பது உலகத்திற்குச் சொந்தமானது - பொதுவானது - அதனைத் தனி ஒரு மனிதன் வீணடிக்கக் கூடாது என்பதை உணவு விடுதிக்குச் சென்று கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி உண்ணாமல் மேசையிலேயே அரைகுறையாய் வீணடிக்கின்ற செல்வச் சீமான்களீன் செயலைச் சுட்டிக் காட்டினார். 

ஈட்டுகின்ற பொருள் தமக்கும் பிறர்க்கும் இனபத்தைத் தரவேண்டும். நல்வழியில் ஈட்ட வேண்டும் - நல்லதைச் செய்ய உதவ வேண்டும். இது பொருள் தேடும் முறை. இப்படித் தேடும் பொருளே செல்வமாக மாறும். 
செல்வத்தைத் தேடும் செயலில் விடாமுயற்சி வேண்டும் என்பதற்கு விறகு வெட்டியின் கதையை விளக்கமாகக் கூறி - நீ காட்டிற்குள் செல் - இன்னும் சந்தனக் காட்டிற்குள் செல் - வெள்ளிச் சுரங்கத்தைப் பார் - இன்னும் சென்று தங்கச் சுரங்கத்தைப் பார் - இதற்கும் மேலே சென்று வைரச் சுரங்கத்தைப் பார் - என்று விடாமுயற்சியோடு செயல்படும்  மனிதனுக்கு  எழு ! விழித்தெழு ! குறிக்கோளை அடையும் வரை போராடு !  என்ற விவேகானந்தரின் வீர உரையை எடுத்துக் காட்டினார். தேடுகின்ற ஒரு பொருட்செல்வம் நமக்கு நன்மையும் வளமும் பெயரும் புகழும் நன்மக்களும் வீரமும் கொடையும் கல்வியும் பயனும் ஆகிய பிற செலவ்ங்களை எல்லாம் தந்து விடும். எனவே இத்தகையச் செல்வத்தைச் சேர்க்க வேண்டும் - பொருளைத் தேடலாம் - ஆனல் அதனைத் துரத்தும் ஆசையை அடக்க வேண்டும் என்ற நோக்கத்தை அழுத்தமாக எடுத்துரைத்தார்.  

இக்கருத்துகளை எல்லாம் கூறிய அவர் நான் ஒரு பேச்சாளன் அல்லன் - எனது நோக்கம் நான் கூறுவது கேட்பவரைச் சென்றடைய வேண்டும் என்பதே ! தொண்டரொடு கூட்டுக் கண்டாய் என்ற தொடருக்கு அடக்கத்தின் விளைநிலமாய் துறவியின் சொற்கள் அமைந்தது. உள்ளத்தைத் தொட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் : செல்வி ஷங்கர் @ மெய்யமை சிதம்பரம். 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா @ சிதம்பரம்.   



Tuesday 29 January 2013

டாலர் நகரம் - நூல் வெளியீட்டு (திரு) விழா


27.01.2013 ஞாயிறன்று  திருப்பூரில் நடைபெற்ற  திருப்பூர்ப் பதிவர் நண்பர் ஜோதிஜி யின் டாலர் நகரம்நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை.

ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடைபெற்ற விழா. நல்ல சிந்தனையைத் தூண்டும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி. புத்தகங்கள் மனித மனங்களை புத்தாக்கம் பெறச்செய்கின்றன என்பதை நேரிடையாகக் கண்டேன்.  நமக்குத் தெரிந்ததை நாம் எழுதுகின்றோம் -  இது என்ன எல்லார்க்கும் பயன் படவா போகின்றது என்ற தட்டிக் கழிக்கும் சிந்தனை இன்றி - தான் சிந்தித்ததை எல்லாம் அவ்வப்போது பதிவில் எழுதி அதை ஒரு நூல் வடிவமாக்கிய ஜோதிஜியின் முயற்சியை அனைவரும் பாராட்டினர். 

அந்நூலில் முழுவதும் திருப்பூர் நகரின் தொழில் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட விளைவுகள், படைப்பாளியாகத் தன்னுடைய அனுபவம் , தொழில் முனைவராக தன் தொழில் ஈடுபாட்டு வளர்ச்சி, அத்தொழிலின் ஏற்ற இறக்கங்கள்,  அவற்றின் நன்மை தீமைகள், அவற்றைக் களைவதற்கான வழி முறைகள் ஆகியவற்றை தன் பட்டறிவால் உணர்ந்து எழுதி இருப்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரும் பாராட்டியதோடு, இந்நூல் முழுவதும் 100 விழுக்காடு அவற்றிற்குத் தீர்வு கூற வில்லை - 40, 45 விழுக்காடுகள் தன் அனுபவத்தால் கண்ட தீர்வுகளைக் கூறி இருப்பதும், இதனால் இது பற்றிய தொடர் சிந்தனைகள் எதிர் காலத்தில் இன்னொரு நூல் வடிவமாய்த் தொடரும் என பேச்சாளர்கள் அனைவரும் வாழ்த்தினர்.


 மேடையில் தொகுத்து வழங்கிய வெயிலான்,  நூலாசிரியர் ஜோதிஜி - பதிவர் புதுகை அப்துல்லா,   திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.தங்கவேல், , ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் ஞானி ஆகிய சிறப்பு விருந்தினர்கள்  நூலின் படைப்பாளையைப் பாராட்டிப் பல்வேறு பொதுக் கருத்துகளையும் எடுத்துக் கூறியது சிறப்பாய் இருந்தது. 

இடை இடையே தாய்த்தமிழ் மழலையர் பள்ளிச் சிறுமியரின் கவிதைகளும் பாடல்களும் இடம் பெற்றன. புரட்சிகரச் சிந்தனை அமைந்த அப்பாடல்கள் அச்சிறுமியரின் வயதுக்கும் அப்பாற்பட்ட முயற்சி. ஒரு சொல்லில் பாராட்டுகள் என்பதெல்லாம் அவர்களுக்குப் போதாது. வளரும் சிறுமியரின் தொடர் முயற்சி வாழ்த்தி வரவேற்க வேண்டிய ஒன்றாகும். 

தொடரட்டும் இந்நல்முயற்சி - நல்வாழ்த்துகள்.

பதிவர்களையும் வலையுலக நண்பர்களையும் கண்டு உளம் மகிழ உறவாடி மகிழ இந்நூல் வெளியீட்டு விழா துணையாக இருந்தது. படைப்பாளி மேடையில் அமர்ந்திருக்க அவரின் கரங்களைப் போன்ற நட்புகள் சுற்றிச் சுழன்று விழா சிறப்புறச் செயல்கள் புரிந்ததைக் கண்ணாறக் காண முடிந்தது. ஜோதிஜீக்கு நட்பின் துணையும் இந்நூல் வெளியிடுவதற்கு ஊன்றுகோலாய் இருந்ததும் காண முடிந்தது. 

உள்ளக் கருத்துகள் உறுதி பயக்கும் நூலாய் வெளி வரட்டும். நிகழகாலத்தை ஆவணப் படுத்தும் இந்நூல் எதிர் காலத்திற்கு ஓர் வழிகாட்டியாய் அமையும் என்பதை பாராட்டுரை வழங்கிய அனைவரது கருத்தும் வெளிப்படுத்தியது.

நல்ல நூல்களைப் படைப்போம் - உலகிற்கு நல்வழி காட்டுவோம்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா 

Tuesday 22 January 2013

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா 

அன்பின் நண்பர்களே 


வருகிற 27 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்,பிரபல எழுத்தாளர்கள்வலைபதிவர்கள்தொழில் அதிபர்கள்,சுற்றுப்புறச் சூழல் சார்ந்து செயல்படும் சமூக அக்கறை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் டாலர் நகரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் தங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இந்த நூல் ஸ்விஸ் ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4 தமிழ்மீடியா குழுமத்தின் ஒரு அங்கமான 4 தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) மூலம் வெளிவருகின்றது.

திருப்பூரில் உள்ள தமிழ்வழிக்கல்வியை சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமளிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ் இணையம்திரட்டிகள் பற்றிய முழுமையான விபரங்கள்வலைப்பதிவுகளின் வளர்ச்சிமாற்று ஊடகம் குறித்த எண்ணங்கள்திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை வலைபதிவுகளைப் பற்றிய அறிமுகத்தோடுஅவர்களின் தளம் குறித்த விபரங்களை விழா சிறப்பு மலராக வெளிவர உள்ளது.

அருகில் உள்ள கோவை மற்றும் இதனைச் சார்ந்த மற்ற பகுதிகளின் நண்பர்களின் வேண்டுகோள்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருப்பூரில் உள்ள பிரபல தொழிலதிபர் சமூக சேவகர், அமெரிக்கா பெட்னா சங்கத்தில் இருக்கும் கேபிகே செல்வா அவர்களின் அறக்கட்டளை மூலம் இந்த விழா நடத்தப்படுகின்றது.இவர் இங்குள்ள பல்வேறு சங்கத்தின் பொறுப்பாளர். கல்விக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டு வருபவர்.

விழாவுக்காக தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் தமிழ்ச்செடிசேர்தளம்தொழிற்களம்கனவு இதழ் பத்திரிக்கை போன்றவர்கள் மூலம் இந்த விழா நடக்க இருக்கின்றது. இந்த விழாவில் வேறு சில நிறுவனங்களும் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.

விழாவிற்கான அழைப்பு இணைக்கப்பட்டுள்ள்து.

அனைத்து நண்பர்களையும் விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். 







நண்பர்களே !  

இந்த விழாவிற்கு வருகை தர விரும்புவர்கள் நிகழ்காலத்தில் சிவா அவர்களை தொடர்பு கொள்ளவும். அவரின் அலைபேசி எண் : 97900 36233

திருப்பூரில் சந்திப்போம் நண்பர்களே ! 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா