ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, 4 January 2009

புத்தாண்டு வாழ்த்துப் பா !!

அருமை நண்பர்களே !

எனது நண்பர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்தாக இக்கவிதையை எழுதி மடல் வரைந்திருந்தார். படித்தேன் - ரசித்தேன் - கடைப்பிடிக்க வேண்டுமென நினைத்தேன். நீங்களும் படியுங்களேன் !
---------------------------------------------------------
அழகாய் மௌனமாய் வீற்றிருக்கும்
பழகப் பழக
புதுப்புது செய்திகள் சொல்லும்
இரவைப் பகலாக்கும்
விடிந்தாலும் இரவாய் பயணிக்கும்
தூக்கம் கலைக்கும்
தொடர்ந்து நித்திரைக்கும்
தூது செல்லும்.

படர்ந்த சிந்தனைகளை
மெதுவாய் அசைபோடும்
புதியன தேடவைக்கும்
புதிராய் அலையவைக்கும்
தாயாய் - தாரமாய்
தலைமுறை போற்றும் சேயாய்
விரலைப் பற்றி
நிழலாய் வலம்வரும்..............

புத்தகமே - நம்
புது அகம் !!
புத்தகமே - நம்
புது யுகம் !!

வாசிப்பே சுவாசிப்பு !
வாசிப்பவரே வசிப்பவர் !
வாசித்தல் நேசிப்போம் !!
வாழ்தலில் வசந்தம் சேர்ப்போம் !!
============================
நட்புடன் .... சீனா .......
--------------------------------------------

Sunday, 9 March 2008

தந்தையர் தின வாழ்த்து - அசை போட்டது

இது எனது அருமைச் செல்வம் - அயலகத்தில் இருந்து எனக்கு அனுப்பிய தந்தையர் தின வாழ்த்து. பழைய கோப்பிலிருந்து தற்செயலாகக் கண்ணில் பட்டது. படித்து ரசித்து அசை போட்டது.

--------------------------------------------------------------------------

அன்பில் பண்பில் ஆற்றலில் என்றும்
அமைதிப் பெருங்கடல் எங்கள் அப்பா !
அலைகடல் ஒலிக்கும் ஆயினும் அமைதியாய் !
வந்தார் மகிழ வழங்கி மகிழ்வார் !
வழித்துணை இருந்து வாழ்த்தி மகிழ்வார் !
சென்றார் சிந்தனை சிறிதும் வேண்டார் !
சிறந்தார் என்றும் சேர்ந்தே இருப்பார் !
சொல்லில் செயலில் சோர்ந்தார் இல்லை !
செய்தொழில் சிறந்தே செழித்தவர் என்றும் !
அவர்துணை ஆனார் என்றும் அம்மா !
சொன்னது செய்தது சேர்த்தது சிறந்தது
எதிலும் என்றும் இசைந்தே நின்று
ஏற்றம் தேடி இணைந்தே இருந்து
போற்றும் பெயரோடு பொருந்தி வாழும்
அம்மா அப்பா என்றும் சிறக்க
எல்லாம் வல்ல இறையடி தொழும்
தந்தையர் தினத்தில் தலைமகள் வாழ்த்திது !
--------------------------------------------------------------------------------