ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 29 May 2011

சீனா - ஒரு அறிமுகம்

அன்பு நண்பர்களே !

ஒரு குழும நண்பர்கள் சந்திப்பில் - சந்தித்தவர்கள் பற்றிய ஒரு இடுகை இட்ட போது - சீனா என்பவரைப் பற்றிய ஒரு அறிமுகமாக இது எழுதப்பட்டது.

சீனா .... சீனா

எப்போது இடி இடிக்கும் ?
இல்லை !
எப்போது மின்னல் மின்னும் ?
இல்லை !
எப்போது காற்றடித்து மழை பெய்யும் ?
இயற்கை யாருக்குத் தெரியும் ?
தெரிந்தாலே தேவ இரகசியம் இல்லை !

இதைப் போல சீனா !
அது என்ன சைனா
என்று அவ்வப்போது
கேட்கத் தோன்றும் !

சிரித்த முகம் - சிந்தும் புன்னகை - சிறப்பே !
இருந்தாலும் இந்தச் சினம்
அவ்வப்போது தலை காட்டும் !
அந்தி மலைச் சாரலாய் !
எவர்க்கும் தெரியாது
என்ன மனநிலை என்று !

செய்வதெல்லாம் செயலே ! ஆம்
செயல்களே வழி பாடாய் சீரிய வழியில் !
நான் படித்தேன் குறள் ! ஆனால்
அதன் பாதை எல்லாம் அவர் செயல் !

கொடுப்ப தென்றால் பிடிக்கும் !
கோபுரமாய் கொடுக்கவே
உள்ளம் இனிக்கும் !
இருந்தாலும் எவர்க்கும்
தெரியாது இயக்கம் !
மனதுக்கு மட்டுமே தெரியும் !

மலர்ந்து மணப்பதுவே பயன் !
சொல்லாமல் செய்கின்ற
சோர்வற்ற வேலைகள் பல !

சோதனையை சாதனையாக்கும்
தத்துவம் தெரியும் !
வளர் தொழிலில் வழி காட்டும் பாங்கு !
வருவார் முகத்தில் தெரிகின்ற நம்பிக்கை !
வாங்குகின்ற பெயரெல்லாம்
வலக்கரம் செய்கின்ற வலிமையால் !

இதற்கு இலக்கணம் இல்லை !
இலக்கியம் உண்டு !
ஊரறிந்த உவகையினை
உளமறிந்து உவந்ததுண்டு !
தூக்கி விட்டுத் துணையாகி !
எடுத்தியம்பி எளிமையாய் !
ஏற்றமுற போற்றுமொழி
சொல்லி எங்கும் இனிக்கவே
இதயம் விரும்பும் !

கடிதோச்சி மெல்ல நகும்
காரியந்தான் அனைத்தும் !
சொல்லச் சிறந்த வழி
எளிமை ! எதிலும் இயல்பு !
இனிப்பதுவோ இதய மொழி !

எப்படியும் செயலாற்றும் ஏகலைவன் !
ஏக்கங்கள் ! தூக்கங்கள்! எதிர்த்தாலும்
ஏணியை விடாத ஐங்கரன் துணை !
ஆளும் ஆனைமுகன் அன்பன் !
அனைத்திலுமே அடக்கி வாசிக்கின்ற ஆற்றல் !
இரக்கத்திற்கும் ! இதயத்திற்கும் !
இறைமைக்கும் ! இலகுகின்ற
இன்முகம் இந்தச் சீனா !


---------------------------------