ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday, 27 May 2010

அப்பாவி முரு - திருமணம்


அருமை நண்பன் சிங்கையில் வசிக்கும் அப்பாவி முருவின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்தி வந்தேன். முதலில் முருகேசனைப் பார்த்தது அவனது புரொஃபைல் படத்தில் - பாவம் போல் அப்பாவியாக இருந்தான். அடுத்து மதுரை பதிவர் சந்திப்பில் ஒரிரு நிமிடங்கள் - ஒரிரு சொல் பரிமாற்றம் - அவ்வளவுதான் - மூன்றாவதாக எங்களின் இனிய இல்லத்திற்கு முரு வந்த போது நீண்ட சந்திப்பு - இப்பொழுது திருமணத்தில் அடுத்த சந்திப்பு - ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமான தோற்றம். தொடர்ச்சியாக சந்திக்காததால் புதுப் புது தோற்றமாகத் தோன்றும்.

சரி சரி - பில்டப் போதும் - விஷயத்துகு வரேன்

சின்னாளப்பட்டியில் நேற்று முருவுக்கு திருமணம் - காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து பேருந்தில் புறப்படுவதாக திட்டம் - பேருந்து நிலையத்தில் சென்று காத்திருந்து 08:30க்கு வந்த கா.பா வுடன் சின்னாளப்பட்டி சென்றோம் - அங்கு ரம்யா, கலை, சுரேஷ் ஆகியோர் முதல் நாளே வந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனர். திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு வந்தோம். இனிய அனுபவம்.

மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Thursday, 22 April 2010

லதான்ந்தின் கேள்விக்குப் பதில்

நண்பர் லதானந்த் விஜய கோபால் சாமியிடம் கேள்விகள் கேட்டு, பதில்கள் பெற்று, இவரது கருத்தினையும் கூறி ஒரு இடுகை இட்டிருக்கிறார். அதே கேள்விகளுக்கு என்னைப் பதில் எழுதச் சொல்லிக் கேட்டார். இதோ பதில்கள்

லதானந்தின் கேள்வி சிவப்பு வண்ணத்தில்


எனது பதில் நீல வண்ணத்தில்

1. அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?

ஓஒ ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள் உண்டு - பேருந்தில் பயணம் போகும் போது = கண்டதையும் வாங்கித் திண்ணுட்டு - க்டமுடா க்டமுடா கலக்கி - பஸ்ஸூ எப்ப்டா நிக்கும்னு பாத்து இறங்கி ஓடிணா - ஒரு அறை கூட கிடைக்கல - ஒரு மரத்துக்குப் பின்னாலே போயி .... சரி சரி வேணாம் - நல்லாருக்காது ( இதெல்லாம் நடந்து ரொம்ப ரொம்ப வருசம் ஆயிடுச்சு )

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?

லதானந்தைப் பார்த்து - அவரின் இளமை ததும்பும் மனது - இடுகை இடுகின்ற வேகம் - பல்வேறு தமிழில் எழுதும் திறமை - குசும்பு - பெத்த பசங்க கிட்டே ஃப்ரெண்ட்லியாப் பழகறது - இன்னும் என்ன என்னவோ

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?

அந்தரங்கம் புனிதமானது - 20 வயசில பஸ்லே - சென்னை மதுரை - ஸ்டேட் எக்ஸ்பிரஸ் - நான் ரெண்டு பேரு உக்கார்ர சீட்ல தனியா உக்காந்து வந்தேன் - விழுப்புரம் வரைக்கும் யாருமே ஏறல - விழுப்புரம் தாண்டிப் பாத்தா - பக்கத்து சீட்ல ஒரு பாப்பா - காலேஜ் படிக்கற பாப்பா - என்ன பண்றதுன்னு தெரில - நல்ல தூக்கம் டாம் டயர்டு ரெண்டு பேருமே - அப்பப்ப தொடைகள் வெளிப்பக்க உராய்வு - கால்கள் இடிப்பு - தோள்களில் தலை சாய்வு - இப்படியே போச்சு - மதுர வந்துடுச்சி - அவ்ளோதான் - உண்மை உண்மை உண்மை

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

எப்பவுமே நடக்கறது தானே ! ஒண்ணா இரண்டா எடுத்துச் சொல்ல !

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறதே ! சொல்ல இயலாதே !

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?

முக்கா வாசி அப்படித்தான் - பிளாக்ல தான் வாங்கறது -

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?

சைக்கிள் டபுள்ஸ் - அவ்ளோ தான்

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?

அந்த வழக்கமெல்லாம் இல்ல


9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.

ச.தே அதிகம் படித்திருக்கிறேன் -
ம.ம நான் படிச்ச காலத்துல கேள்விப்பட்டதே இல்லையே

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?

எனக்கொன்றும் ஆட்சபனை இல்லையே

நல்வாழ்த்துகள் லதானந்த்
நட்புடன் சீனா

Sunday, 14 March 2010

திருப்பூர் - முயற்சி - ரத்த தானம்

சென்ற ஞாயிறு காலை ஒரு தினசரியின் இணைப்பில் படித்த செய்தி. பகிர வேண்டுமெனத் தோன்றியது.

அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முன்னிலையில் இருக்கிறது பனியன் நகரமான திருப்பூர். அதே நேரத்தில் சுகாதாரத்திலோ பின் தங்கிக் கிடக்கிறது. வணிக அரங்கில் ஒரு குட்டித் தமிழகமாகத் திகழும் திருப்பூரைச் சுகாதாரத்திலும் முண்ணனிக்குக் கொண்டு வர முயற்சி எடுத்திருக்கிறது ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் பெயரே "முயற்சி" என்பது தான்.

முயற்சி அமைப்பின் புதுமையான முயற்சி தான் - ஒரு முறை இரத்த தானம் செய்தால் 1.5 இலட்சத்திற்கு ஆயூள் காப்பீடு இலவசமாக வழங்கும் திட்டம்.
திருப்பூர் அரசு மருத்துவ மனையில் குழந்தை திருட்டைத் தடுக்க மருத்துவ மனையில் , இவ்வமைப்பு சி சி டி வி பொருத்தியிருக்கிறது. தொடர்ந்து 1.5 இலட்சத்தில் அரசு மருத்துவ மனையினைச் சுத்தம் செய்திருக்கிறது.

இரத்தம் பற்றாற்குறையினால் சில அறுவைச் சிகிச்சைகள் தள்ளிப் போடுவது அறிந்து இவ்வமைப்பு இரத்த தான முகாம் நடத்தி இரத்தம் தங்கு தடையின்றி கிடைக்க வழி செய்திருக்கிறது.

இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் 640 பேரினை உறுப்பினராக்கி - முகாம்கள் நடத்தி, 500க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு உள்ளது. இப்பொழுது இரத்த தானம் செய்பவர்களீன் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

இரத்த தானம் செய்பவர்களுக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமென எண்ணி, பணமோ பொருளோ கொடுத்தால் தானம் செய்பவர்களை அவமதிப்பது போல ஆகிவிடுமே என நினைத்து அவர்களுக்கு ஒரு ஆண்டிற்கான இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான பாலிசி வழங்க முன்வந்தனர் முயற்சி அமைப்பின் நிர்வாகிகள்.

இரத்த தானம் செய்பவர்கள் ச்மூகத்தில் மிகவும் குறைவு. அதே நேரத்தில் தானம் செய்பவர்கள் விபத்துகளில் பாதிக்கப்பட்டால் வறுமை காரணமாக உயிர் இழக்கும் சூழல் ஏற்படுகிறது. அதே போல் சிலர் நோயின் கொடுமையாலும் துயரப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு 1.25 இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு பாலிசியும் 25 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு பாலிசியும் இவ்வமைப்பினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

ஒரு முறை இரத்த தானம் செய்தாலே போதும். இந்தக் காப்பீடு வசதி அளிக்கப்படும். மருத்துவ மனைகளில் 24 மனி நேரம் தங்கி செஇகிசை பெறும் நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு பாலிசி கை கொடுக்கும். இரத்த தானம் செய்யும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு "முயற்சி" அமைப்பு தோண்றினால் போதும் - இரத்த தானத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்து விடும்.


நண்பர்களே ! இரத்த தானம் செய்யுங்கள் !

நல்வழ்த்துகள்

நட்புடன் சீனா