ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
Showing posts with label லதானந்த். Show all posts
Showing posts with label லதானந்த். Show all posts

Sunday, 27 June 2010

செம்மொழி மாநாடு


கோவையில் நடக்கும் செம்மொழி மாநாடு இன்றைய தினத்துடன் நிறைவு பெறுகிறது. இம்மாநாட்டில் தமிழ் இணைய மாநாடும் ஒரு பகுதியாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நமது பதிவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்களில் நமது அருமை நண்பர் லதானந்தும் ஒருவர். அவர் முரசொலி மாறன் அரங்கில், நடந்த வலைப்பூக்கள் பற்றிய அமர்வினில்
வலைப்பூக்கள் பற்றிப் பேசி இருக்கிறார். அதனைப் பற்றிய இடுகை, அவரது பதிவினில் இன்னும் ஓரிரு நாட்களில் வெளி வரும்.

நட்புடன் சீனா


Thursday, 22 April 2010

லதான்ந்தின் கேள்விக்குப் பதில்

நண்பர் லதானந்த் விஜய கோபால் சாமியிடம் கேள்விகள் கேட்டு, பதில்கள் பெற்று, இவரது கருத்தினையும் கூறி ஒரு இடுகை இட்டிருக்கிறார். அதே கேள்விகளுக்கு என்னைப் பதில் எழுதச் சொல்லிக் கேட்டார். இதோ பதில்கள்

லதானந்தின் கேள்வி சிவப்பு வண்ணத்தில்


எனது பதில் நீல வண்ணத்தில்

1. அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?

ஓஒ ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள் உண்டு - பேருந்தில் பயணம் போகும் போது = கண்டதையும் வாங்கித் திண்ணுட்டு - க்டமுடா க்டமுடா கலக்கி - பஸ்ஸூ எப்ப்டா நிக்கும்னு பாத்து இறங்கி ஓடிணா - ஒரு அறை கூட கிடைக்கல - ஒரு மரத்துக்குப் பின்னாலே போயி .... சரி சரி வேணாம் - நல்லாருக்காது ( இதெல்லாம் நடந்து ரொம்ப ரொம்ப வருசம் ஆயிடுச்சு )

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?

லதானந்தைப் பார்த்து - அவரின் இளமை ததும்பும் மனது - இடுகை இடுகின்ற வேகம் - பல்வேறு தமிழில் எழுதும் திறமை - குசும்பு - பெத்த பசங்க கிட்டே ஃப்ரெண்ட்லியாப் பழகறது - இன்னும் என்ன என்னவோ

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?

அந்தரங்கம் புனிதமானது - 20 வயசில பஸ்லே - சென்னை மதுரை - ஸ்டேட் எக்ஸ்பிரஸ் - நான் ரெண்டு பேரு உக்கார்ர சீட்ல தனியா உக்காந்து வந்தேன் - விழுப்புரம் வரைக்கும் யாருமே ஏறல - விழுப்புரம் தாண்டிப் பாத்தா - பக்கத்து சீட்ல ஒரு பாப்பா - காலேஜ் படிக்கற பாப்பா - என்ன பண்றதுன்னு தெரில - நல்ல தூக்கம் டாம் டயர்டு ரெண்டு பேருமே - அப்பப்ப தொடைகள் வெளிப்பக்க உராய்வு - கால்கள் இடிப்பு - தோள்களில் தலை சாய்வு - இப்படியே போச்சு - மதுர வந்துடுச்சி - அவ்ளோதான் - உண்மை உண்மை உண்மை

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

எப்பவுமே நடக்கறது தானே ! ஒண்ணா இரண்டா எடுத்துச் சொல்ல !

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறதே ! சொல்ல இயலாதே !

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?

முக்கா வாசி அப்படித்தான் - பிளாக்ல தான் வாங்கறது -

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?

சைக்கிள் டபுள்ஸ் - அவ்ளோ தான்

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?

அந்த வழக்கமெல்லாம் இல்ல


9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.

ச.தே அதிகம் படித்திருக்கிறேன் -
ம.ம நான் படிச்ச காலத்துல கேள்விப்பட்டதே இல்லையே

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?

எனக்கொன்றும் ஆட்சபனை இல்லையே

நல்வாழ்த்துகள் லதானந்த்
நட்புடன் சீனா