சில காரணங்களினால் இப்பதிவு மதுரைக் குழுப் பதிவிலிருந்து இத்தனிப் பதிவிற்கு மாற்றப் பட்டிருக்கிறது
-----------------------------------------------------------------------------------------------
அருமை நன்பர் ரசிகன் என்னை TAG செய்து விட்டார். ஏதெனும் எழுத வேண்டுமாம். என்ன எழுதுவது. மொக்கையாக இருக்க வேண்டுமாம். மொக்கன்னா என்னா ? தெரியாதே ? பாக்கலாம். (மொக்கச்சாமி ன்னு பேரு வைக்கணுமாம் பதிவுலே யாருக்காச்சும் )
பொதுவா நான் ஒரு கொள்கை ( அப்டின்னா என்னன்னு தெரியாதவங்க தனி மடல்லே வாங்க - அருமையா விளக்கம் தரேன்) வச்சிருக்கேங்க. அதாவது இணைய நண்பர்கள் யாராச்சும் மதுரைக்கு வந்தா அவங்களெ தம்பதி சமேதரா சந்திச்சுடறதுன்னு.
நான் மொத மொத பதிவு ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ளேயே நண்பர் தருமியைச் சந்தித்தேனுங்க. அலுவலகம் வந்திருந்தார். பார்த்தோம் - பேசினோம் - அடிக்கடி சந்திக்கலாம்னு சொல்லி விடை பெற்றார். அப்புறம் சில முறைகள் அலை பேசியில் பேசினேன் / பேசினார். ஆ.வி யிலே வந்த அவரது வலைப்பூவினைப் பற்றிய செய்தியெ நான் தான் மொத மொதல்லே அவருக்குச் சொன்னேன். ( மீ த பர்ஸ்டு). அப்புறம் சந்திக்கும் வாய்ப்பு வரலே. ஒரே ஊர்லே தாங்க இருக்கோம்.
அருமை நண்பர் தருமிக்கு இதுமூலமா வாழ்த்து சொல்லலாமில்லையா.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
ம்ம்ம் அப்புறம் நண்பர் ஓசை செல்லா இடுகையைப் பாத்துட்டு சகோதரி அனுராதாவை ம.பா வோடு சென்று பார்த்தேன். பேசிக்கிட்டு இருந்துட்டு நலம் விசாரித்து விட்டு வந்தோம். நாளை சண்டே தானே - போய்ப் பார்க்கலாமான்னு ம.பா கிட்டே கேட்டேன். நீங்க சொன்னா அப்பீல் உண்டான்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு அலுவல் நிமித்தம் தடை ஏதும் இல்லையெனில் நிச்சயம் சந்திப்போம். ( அதென்ன அலுவல் நிமித்தம் தடைன்னு உடனே யாராச்சும் கேக்குறீங்களா - அது ஒண்ணும் இல்லீங்க - எங்கேயாச்சும் ஏதேனும் நடக்கும் - நான் பாத்து ஒழுங்கு பண்ணணும் - இதான். நடக்குறதெ ஒழுங்கு பண்ற டிராபிக் கான்ஸ்டபிள் இல்லீங்கோ)
பாத்துட்டு வந்து பதிவு போடுறேன்.
ம்ம்ம் அடுத்து யாருங்க வரிசையிலே ? அடடா நம்ம களவாணிப் பொண்ணு - மதுரை வழியா பெரியகுளம் போகுது - பாத்துடலாம்னா என்ன காரணமோ சொல்லாம போய்டிச்சி பெரியகுளத்துக்கு - ம்ம்ம் வெய்ட்டீஸிங்க் To see her.......
சன் டிவீலே அசத்தப் போறது யாருலே மதன் பாப் இப்போ இப்போ சொல்றாரு. OPPERTUNITY and PREPARATION தான் லக்குண்றதுன்னு. இது சும்மா இங்கே தேமேன்னு எழுதிக்கிட்டு இருக்கும் போது காதுலே லேசா விழுந்தது.
ம்ம்ம் அப்புறம் நம்ம பாசமலர் மலர் சபாபதி. அயல் நாட்டுலேந்து ஒரு வாரம் வந்துட்டுப் போனாங்க - குடும்ப சகிதமா. திருநகர்லே அவங்க வூட்லே நானும் வழக்கம் போல குடும்ப சகிதமா போய் பாத்துட்டு வந்தேனுங்க. ஒரு 45 நிமிடம் பேசிட்டு வந்தோம். நல்லா பேசினாங்க - நல்லா பழகினாங்க - ரொம்ப நாளா நண்பர்கள் போல பேசினோமுங்க. அவரது கணவர் சபாபதி, மகள், மாமனார், மாமியார், மச்சினப் புள்ளே எல்லோரெயும் அறிமுகப் படுத்தி வைச்சாங்க. ஆங்கிலத் துறையில் புகழ் பெற்ற கல்லூரியில் ஆசிரியராக வேலை செஞ்சிட்டு இப்ப தமிழ்லே இணையத்துலே கலக்கிகிட்டு இருக்காங்க.
ம்ம்ம்ம்ம் - அப்புறம் - வரிசையிலே சந்திரமௌளி கணபதி நிக்குறாரு. யாருங்க இது - யாருக்காச்சும் தெரியுமா - அட நம்ம மதுரையம்பதிங்க. இப்ப நேரம் சரியில்ல - பொங்கல் வரைக்கும் இருக்கார். சந்திச்சுடுவோம்ல.
அப்புறம் நம்ம சிவாங்க - மதுரைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு. சனவரி 27ம் தேதி சந்திக்க அனுமதி கொடுத்துருக்காரு. ( கொடுத்தாரா - கொடுத்தேனா - தெரில). சந்திச்சுருவோம்.
இன்னும் யாரெல்லாம் மதுரைக்கு வரீங்க - சொல்லுங்க - சிவப்புக் கம்பளமெல்லாம் ஆர்டர் பண்ணணும் - சொல்லிட்டு வாங்க. சந்திக்கலாம். பழகிப் பாக்கலாம். என்ன நான் சொல்றது.
நம்ம கீதா சாம்பு மாமாவோட மதுரைக்கு வந்துட்டுப் போய் இருக்காங்க - தெரியாமப் போச்சுங்க - பாக்க முடிலே - அதனால் என்ன - சென்னைலே போய் பாத்துடுவோம். அவ்ளோ தான்
ஆமா இடுகைன்னா நீள, அகல, உயர, கன பரிமான அளவுகள் எல்லாம் இருக்கா - தெரியாதுங்க - சரக்கு இருக்கற வரைக்கும் எழுதலாம். இடுகை சைஸ் எல்லாம் தெரிஞ்சுக்கணுமா என்ன. ( சிவா சைஸ் எல்லாம் நான் சொல்றென் நான் சொல்றேன்னு குதிக்கிறாரு)
aamaa நானு நாலு பேர மாட்டி வுடணுமாமே - யாரெ மாட்டலாம்
1. தருமி
2. துளசி கோபால்
3. கேயாரெஸ்
4. பாசமலர்
ரசிகன் போதுமா - இன்னும் வேணுமா
அன்புடன் சீனா
தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! ..........................
Tuesday, 8 January 2008
Monday, 7 January 2008
இம்சையின் இம்சை தாங்க முடியாமல் இப்பதிவு
அன்பர்களே!
நண்பர்களே!
வலை உலக மொக்கையர்களே!
கும்மி அடிக்கும் கும்மியர்களே!
மொக்கை போடாத மொக்கையர்களே!
பெண் பதிவர்களே!
குழந்தைகளே!
வேற யாராச்சும் விட்டுப் போயிருந்தா பின்னூட்டத்திலாவது அல்லது தனி மடலிலாவது அல்லது தொலை பேசியிலாவது அல்லது சாட்டிங்கிலாவது நினைவுறுத்தினால் அவர்களது கோரிக்கை கனிவுடன் கன்சிடர் செய்யப் படும்.
என்னா இந்த பில்டப்பு ?? எதுக்கு இதெல்லாம் ?? யாருக்குத் தெரியும். இதெல்லாம் இப்படிச் சொன்னாத்தான் இதெ மொக்கன்னு ஒத்துக்குவாங்களாம் - சிவா, கேயாரெஸ், ரசிகன் எல்லாம்.
இவங்க எல்லாம் ஒத்துக்கலேன்னு யார் அழுதாங்களாம். இதென்ன ISO 9999 certificate - aaaa ????? ம்ம்ம்ம் - இவங்க தான் இதெக் கொடுக்குறதுக்கு அத்தாரிட்டீயா ?? என்ன கொடும இது சரவணன் ??
ஆமா என்னன்னவோ எழுதுறோமே - இதே எழுத மாட்டோமா ?
ஒரு கவுதெ ஞாபகத்துக்கு வந்துச்சி
நீயும் நானும் ஒண்ணு !
காந்தி பொறந்த மண்ணு !
டீக்கடையிலே நின்னு !
தின்னு பாரு பன்னு !
என்னெ அருமையா எழுதி இருக்கான்யா - சும்மாவா சொன்னாங்க யார் வேணா கவுத எழுதலாம்னு ! மரபுக் கவிதை - புதுக் கவிதை - வரிக்கவிதை - எழுத்துக் கவிதை -தூள் கெளப்புறாய்ங்கய்யா நம்ம ஆளுங்க!
ஒருத்தன் எஸெமெஸ் அனுப்புறான் - கீழே பாருங்கய்யா
: quote
ரஜனியே புரிஞ்சுக்கவே முடிலே
பாட்ஷாவிலே சொல்றாரு : எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு
சிவாஜிலே சொல்றாரு : பன்னிங்க தான் கூட்டமா வரும்
: Un quote
நான் சொல்லலெப்பா - யாராச்சும் ஆட்டோவுக்கு அட்வான்ஸ் கொடுக்காதீங்க - ஆமா சொல்லிப்புட்டேன்
என்ன கொடுமை சரவணன் இது
one more SMS :
Hai ! I am puppuk kutty - studying LKG "B" in dubakur school. I lost my "Rubber vaichcha pencil" - The pencil costs Rs 3/- I dont know who you are; But if you forward this message, i will get one paise from the world bank. If you have heart or lungs or kidney or whatever, Please FORWARD this mail to atleast TEN people .... Do not break this chain ... Do not send this to me .. Do not try to contact world bank ....
சேம் பிளட்
ம்ம்ம் வங்கிக்கு ஓரு கஸ்டமர் கிட்டே இருந்து ஒரு லெட்டர் வந்துச்சாம் - டேமேஜர் படிச்சிட்டு கமெண்டு ( மறுமொழி ன்னு சொல்லலாமா) எழுதுனாராம் அந்த லெட்டர்லே
"ரசிகா - பிளீஸ் ஃபாலோ அப் வெரி குலோஸ்லி"
மறு நாளிலேந்து ரசிகன் அவர் பின்னாலேயே போனாராம் - அவர் எங்கே போனாலும் - ஏன்னு இன்னிக்கு வரை யாருக்குமே தெரில.
ம்ம்ம்ம்
போரடிக்குதாய்யா !! நிறுத்திடலாமா !! வேணாம் - மத்த மொக்கை யரெல்லாம் நிறுத்தச் சொல்லு - நானும் நிறுத்திடறேன்.
இது http://iimsai.blogspot.com/2008/01/2000.html லே இம்சை என்ன எழுதச் சொன்ன பதிவு.
வர்ட்டா ......
நண்பர்களே!
வலை உலக மொக்கையர்களே!
கும்மி அடிக்கும் கும்மியர்களே!
மொக்கை போடாத மொக்கையர்களே!
பெண் பதிவர்களே!
குழந்தைகளே!
வேற யாராச்சும் விட்டுப் போயிருந்தா பின்னூட்டத்திலாவது அல்லது தனி மடலிலாவது அல்லது தொலை பேசியிலாவது அல்லது சாட்டிங்கிலாவது நினைவுறுத்தினால் அவர்களது கோரிக்கை கனிவுடன் கன்சிடர் செய்யப் படும்.
என்னா இந்த பில்டப்பு ?? எதுக்கு இதெல்லாம் ?? யாருக்குத் தெரியும். இதெல்லாம் இப்படிச் சொன்னாத்தான் இதெ மொக்கன்னு ஒத்துக்குவாங்களாம் - சிவா, கேயாரெஸ், ரசிகன் எல்லாம்.
இவங்க எல்லாம் ஒத்துக்கலேன்னு யார் அழுதாங்களாம். இதென்ன ISO 9999 certificate - aaaa ????? ம்ம்ம்ம் - இவங்க தான் இதெக் கொடுக்குறதுக்கு அத்தாரிட்டீயா ?? என்ன கொடும இது சரவணன் ??
ஆமா என்னன்னவோ எழுதுறோமே - இதே எழுத மாட்டோமா ?
ஒரு கவுதெ ஞாபகத்துக்கு வந்துச்சி
நீயும் நானும் ஒண்ணு !
காந்தி பொறந்த மண்ணு !
டீக்கடையிலே நின்னு !
தின்னு பாரு பன்னு !
என்னெ அருமையா எழுதி இருக்கான்யா - சும்மாவா சொன்னாங்க யார் வேணா கவுத எழுதலாம்னு ! மரபுக் கவிதை - புதுக் கவிதை - வரிக்கவிதை - எழுத்துக் கவிதை -தூள் கெளப்புறாய்ங்கய்யா நம்ம ஆளுங்க!
ஒருத்தன் எஸெமெஸ் அனுப்புறான் - கீழே பாருங்கய்யா
: quote
ரஜனியே புரிஞ்சுக்கவே முடிலே
பாட்ஷாவிலே சொல்றாரு : எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு
சிவாஜிலே சொல்றாரு : பன்னிங்க தான் கூட்டமா வரும்
: Un quote
நான் சொல்லலெப்பா - யாராச்சும் ஆட்டோவுக்கு அட்வான்ஸ் கொடுக்காதீங்க - ஆமா சொல்லிப்புட்டேன்
என்ன கொடுமை சரவணன் இது
one more SMS :
Hai ! I am puppuk kutty - studying LKG "B" in dubakur school. I lost my "Rubber vaichcha pencil" - The pencil costs Rs 3/- I dont know who you are; But if you forward this message, i will get one paise from the world bank. If you have heart or lungs or kidney or whatever, Please FORWARD this mail to atleast TEN people .... Do not break this chain ... Do not send this to me .. Do not try to contact world bank ....
சேம் பிளட்
ம்ம்ம் வங்கிக்கு ஓரு கஸ்டமர் கிட்டே இருந்து ஒரு லெட்டர் வந்துச்சாம் - டேமேஜர் படிச்சிட்டு கமெண்டு ( மறுமொழி ன்னு சொல்லலாமா) எழுதுனாராம் அந்த லெட்டர்லே
"ரசிகா - பிளீஸ் ஃபாலோ அப் வெரி குலோஸ்லி"
மறு நாளிலேந்து ரசிகன் அவர் பின்னாலேயே போனாராம் - அவர் எங்கே போனாலும் - ஏன்னு இன்னிக்கு வரை யாருக்குமே தெரில.
ம்ம்ம்ம்
போரடிக்குதாய்யா !! நிறுத்திடலாமா !! வேணாம் - மத்த மொக்கை யரெல்லாம் நிறுத்தச் சொல்லு - நானும் நிறுத்திடறேன்.
இது http://iimsai.blogspot.com/2008/01/2000.html லே இம்சை என்ன எழுதச் சொன்ன பதிவு.
வர்ட்டா ......
Tuesday, 27 November 2007
மதுரைப் பதிவர்களின் கவனத்திற்கு
சகோதரி அனுராதாவுடன் ஒரு சந்திப்பு
அன்பார்ந்த சக வலைப் பதிவர்களே!!
அன்பர் ஓசை செல்லாவின் பதிவின் மூலமாக சகோதரி அனுராதா சென்னையிலிருந்து மதுரை வந்து விட்டதாகவும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்ந்திருப்பதாகவும் அறிந்தேன்.
இடுகையைப் படித்த உடன் அவரது அலை பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அன்புக் கணவர் அலை பேசியில் அழைத்து விபரங்கள் கூறினார். அறை எண் 313ல் இருப்பதாகவும் கூறினார்.
26ம் தேதி, திங்கட்கிழமை காலை மருத்துவ மனைக்குச் சென்று நானும் எனது மனைவியும் சகோதரி அனுராதாவைச் சந்தித்தோம்.
சமீப காலப் பின்னடைவுக்குப் பின்னர் சற்றே தேறியுள்ளார். சர்க்கரை பாடாய்ப் படுத்துகிறது. தற்போது நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது என்றும் அறிந்தோம். இங்கு ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
சகோதரி இப்போது நடக்கவும் கை கால்கள் அசைக்கவும் பேசவும் செய்கிறார். உடல் நலம் தேறி இருக்கிறார். மன வலிமை கூடி இருக்கிறது.
அன்புக் கணவர் அருகிலேயே இருந்து கவனமுடன் கவனித்துக் கொள்கிறார். ஒரு மகள் சென்னையிலும், மற்றொரு மகளும், மகனும் சிங்கப்பூரிலும் வசிக்கிறார்கள் என அறிந்தோம். சென்னையை விட்டு நிரந்தரமாக சொந்த ஊரான மதுரைக்கு வந்து விட்டதாகவும், வில்லாபுரம் பகுதியில் குடியேறப் போவதாகவும் கூறினார்கள்.
கடந்த 4/5 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் சகோதரி, அதனைப் பற்றியும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும் விரிவாக அவரது பதிவினில் எளிமையாக எழுதி உள்ளார். படித்தது பள்ளிப் படிப்பு மட்டும் தான் என்றாலும், எண்ணங்கள், கருத்துகள், மொழி நடை அனைத்தும் எளிமையாக எல்லா மகளிருக்கும், ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதாக அமையும் வண்ணம் எழுதி இருக்கிறார்.
மகளிர் மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மகளிரிடம் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் அவரிடம் மேலோங்கி நிற்கிறது. படித்த மக்களிடம் கூட இவ்வுணர்வு இல்லையே என்றும், அரசு இவ்வுணர்வைத் தூண்ட எவ்வித முயற்சியும் செய்ய வில்லையே என்றும் மனங்கலங்குகிறார்.
இக்கொடிய நோயைப் பற்றிய அத்தனை செய்திகளையும் அனைத்து மகளிரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் - அதற்கு ஏதாவது திட்ட வட்டமாகச் செய்ய வேண்டும் என ஒரு தீவிர சிந்தனையில் இருக்கிறார். அன்புக் கணவரும் அருமை மக்களும் அன்பு செலுத்தி பக்க பலமாக இருந்து அவரது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கின்றனர்.
சக வலைப் பதிவர்கள் காட்டும் அன்பினையும், அவருக்காகச் செய்யும் பிரார்த்தனைகளையும், மழலைச் செல்வங்களின் மாசற்ற ஆதரவினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மதுரைப் பதிவர்கள் அனைவரையும், ஒரு முறை அவரைச் சென்று சந்தித்து, உடல் நலம் விசாரித்து, நோயை எதிர்த்துப் போராடும் மனத் துணிவினைப் பாராட்டி, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த - தேவைப் படின், ஆலோசனைகள் கூறி, மன ஆறுதல் அளித்து வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவனை, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த, அவருக்குத் தேவையான கூடுதல் மனவலிமையையும், பூரண உடல் நலத்தையும் அளிக்க, மனங்கசிந்து வேண்டுகிறோம்.
அலை பேசி எண் : 98404 56066
அன்புடன் சீனா - செல்வி ஷங்கர்.
26.11.2007
அன்பார்ந்த சக வலைப் பதிவர்களே!!
அன்பர் ஓசை செல்லாவின் பதிவின் மூலமாக சகோதரி அனுராதா சென்னையிலிருந்து மதுரை வந்து விட்டதாகவும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்ந்திருப்பதாகவும் அறிந்தேன்.
இடுகையைப் படித்த உடன் அவரது அலை பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அன்புக் கணவர் அலை பேசியில் அழைத்து விபரங்கள் கூறினார். அறை எண் 313ல் இருப்பதாகவும் கூறினார்.
26ம் தேதி, திங்கட்கிழமை காலை மருத்துவ மனைக்குச் சென்று நானும் எனது மனைவியும் சகோதரி அனுராதாவைச் சந்தித்தோம்.
சமீப காலப் பின்னடைவுக்குப் பின்னர் சற்றே தேறியுள்ளார். சர்க்கரை பாடாய்ப் படுத்துகிறது. தற்போது நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது என்றும் அறிந்தோம். இங்கு ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
சகோதரி இப்போது நடக்கவும் கை கால்கள் அசைக்கவும் பேசவும் செய்கிறார். உடல் நலம் தேறி இருக்கிறார். மன வலிமை கூடி இருக்கிறது.
அன்புக் கணவர் அருகிலேயே இருந்து கவனமுடன் கவனித்துக் கொள்கிறார். ஒரு மகள் சென்னையிலும், மற்றொரு மகளும், மகனும் சிங்கப்பூரிலும் வசிக்கிறார்கள் என அறிந்தோம். சென்னையை விட்டு நிரந்தரமாக சொந்த ஊரான மதுரைக்கு வந்து விட்டதாகவும், வில்லாபுரம் பகுதியில் குடியேறப் போவதாகவும் கூறினார்கள்.
கடந்த 4/5 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் சகோதரி, அதனைப் பற்றியும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும் விரிவாக அவரது பதிவினில் எளிமையாக எழுதி உள்ளார். படித்தது பள்ளிப் படிப்பு மட்டும் தான் என்றாலும், எண்ணங்கள், கருத்துகள், மொழி நடை அனைத்தும் எளிமையாக எல்லா மகளிருக்கும், ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதாக அமையும் வண்ணம் எழுதி இருக்கிறார்.
மகளிர் மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மகளிரிடம் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் அவரிடம் மேலோங்கி நிற்கிறது. படித்த மக்களிடம் கூட இவ்வுணர்வு இல்லையே என்றும், அரசு இவ்வுணர்வைத் தூண்ட எவ்வித முயற்சியும் செய்ய வில்லையே என்றும் மனங்கலங்குகிறார்.
இக்கொடிய நோயைப் பற்றிய அத்தனை செய்திகளையும் அனைத்து மகளிரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் - அதற்கு ஏதாவது திட்ட வட்டமாகச் செய்ய வேண்டும் என ஒரு தீவிர சிந்தனையில் இருக்கிறார். அன்புக் கணவரும் அருமை மக்களும் அன்பு செலுத்தி பக்க பலமாக இருந்து அவரது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கின்றனர்.
சக வலைப் பதிவர்கள் காட்டும் அன்பினையும், அவருக்காகச் செய்யும் பிரார்த்தனைகளையும், மழலைச் செல்வங்களின் மாசற்ற ஆதரவினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மதுரைப் பதிவர்கள் அனைவரையும், ஒரு முறை அவரைச் சென்று சந்தித்து, உடல் நலம் விசாரித்து, நோயை எதிர்த்துப் போராடும் மனத் துணிவினைப் பாராட்டி, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த - தேவைப் படின், ஆலோசனைகள் கூறி, மன ஆறுதல் அளித்து வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவனை, அவரது எண்ணங்களைச் செயல் படுத்த, அவருக்குத் தேவையான கூடுதல் மனவலிமையையும், பூரண உடல் நலத்தையும் அளிக்க, மனங்கசிந்து வேண்டுகிறோம்.
அலை பேசி எண் : 98404 56066
அன்புடன் சீனா - செல்வி ஷங்கர்.
26.11.2007
Subscribe to:
Posts (Atom)