அன்புச் சகோதரி அனுராதா சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததும், அவரது மன வலிமையும் , அவரது அன்பான கணவரின் கவனிப்பும், அருமையான மக்களின் அன்பும் அனைவரும் அறிந்ததே !
இச்சகோதரி இன்றைய தினம் ( 28.08.2008) வியாழக்கிழமை காலை 09:52 மணிக்கு நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார் என்பதனை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிரிவினால் வாடும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இறுதிச் சடங்குகள் நாளை காலை 8 மணி அளவில் நடைபெறும்.
தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! ..........................
Thursday, 28 August 2008
Tuesday, 12 August 2008
இறைவனின் குழந்தைக்கு நாற்காலி
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


அன்பின் சக பதிவர்களே !
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வலைச்சரத்தில் ஒரு பதிவு இட்டிருந்தேன். கடவுளின் குழந்தைக்கு கருணை காட்டுங்கள் என்று வேண்டி இருந்தேன். பிறகு சில திங்களாக பணிச்சுமை காரணமாக மனம் இதில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தாலும் அன்பர்களைத் தொடர்பு கொள்வதில் சற்றே தாமதம் ஏற்பட்டது.
சூலைத்திங்கள் தொடக்கத்தில் அருமை நண்பர் பாலாவிடம் கேட்ட பொழுது - ரூபாய் 20000 உதவி வந்துள்ளது எனவும் இன்னும் 45000 வேண்டுமெனக் கூறினார். நான்கு சக்கர, மின்சாரத்தினால் இயங்கும் நாற்காலியின் தற்போதைய விலை 65000 ஆகிறது எனவும் கூறினார்.
சூலைத்திங்கள் இறுதிக்குள் எப்படியும் வாங்கி விட வேண்டுமென்று இறைவனைத் தொழுது பணியினைத் துவக்கினேன். அன்பர்களைத் தொடர்பு கொண்டேன். வலைப்பதிவர்கள் மட்டுமின்றி அன்புடன் குழுமத்தின் உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டேன். முன் பின் பார்த்திராத, தொடர்பே இல்லாத அன்பர்கள் சிலரும் நேசக்கரம் நீட்டினர்.
வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரிய வேண்டாமென, அதிகம் விளம்பரம் வேண்டாமென விரும்பிய நண்பர்கள் அதிகம் கொடுத்தனர். தேவைக்கு அதிகமாகவே உதவிகள் குவிந்தன. கடைசி 24 மணி நேரத்தில் 50 விழுக்காடு உதவி பெறப்பட்டது.
ஏறத்தாழ ரூபாய் 36000 உதவி பெறப்பட்டு அருமை நண்பர் பாலாவிடம் சேர்க்கப்பட்டு, அந்தோணிக்கு ஆகஸ்டுத் திங்கள் 7ம் நாள் அன்று அந்தோணியின் கனவு நாற்காலி வழங்கப்பட்டது.
ஆகஸ்டுத் திங்கள் 10ம் நாள் இலண்டனில் வசிக்கும் அருமை நண்பர் சக்திதாசனும் அவரது மனைவியும் நானும் சென்னையில் உள்ள அந்தோணியின் இல்லம் சென்று நாற்காலியில் மகிழ்வுடன் உலா வரும் அந்தோணியைக் கண்டு மகிழ்ந்தோம். உரையாடினோம். மன மகிழ்வுடன் திரும்பினோம்.
அந்தோணியின் உடல்நிலையைக் கண்டு மனம் வருந்தினோம். இப்பொழுது மன மகிழ்வுடன் வீதிகளில் உலா வரும் அந்தோணியின் உதவி பெறுவதில் உள்ள வலியினையும், என்றாவது ஒருநாள் வாங்கியவற்றைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினையும், உறுதியினையும் கண்டு மனம் மகிழ்ந்தோம்.
அன்பர்களே ! இறைவன் மனது வைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஒரே திங்களில் தேவைக்கதிகமாகவே உதவி மழை பொழிந்தது இறைவனின் கருணையால் தான். சில பதிவர்களின் உதவிகளை, பிற்காலத்தில் தேவைப்படும் பொழுது வாங்கிக் கொள்கிறோம் என்று மென்மையாக மறுத்தோம்.
நண்பர்களே ! உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், இச்செயலினை முன் நின்று ஒருங்கிணைத்த நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாலாவிற்கும் உளங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். உதவிய நண்பர்களின் பெயர்கள் வெளியிட அனுமதி இல்லாத காரணத்தினால் வெளியிட இயலவில்லை.
மனம் மகிழ்கிறது நண்பர்களே !
மனமுவந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலனையும் அளிக்க வேண்டுதலுடன் கூடிய நல்வாழ்த்துகள்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Wednesday, 2 July 2008
நானானியிடம் தாமரையின் வேண்டுகோள் - பானைக்கதை

அன்பின் பதிவர்களே !
சகோதரி நானானி யானைக்கதை, பூனைக்கதை என எழுதினாலும் எழுதினார். தாமரை என்ற பதிவர் பானைக்கதை வேண்டுமென மறு மொழியில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராமலக்ஷ்மியோ நானானிக்குத் தெரியாத கதையா - எந்தப் பொருளைக் கொடுத்தாலும் கதை எழுதும் திறமை படைத்தவர் எனச் சான்றிதழ் வழங்கி உசுப்பேத்தி விட்டிருக்கிறார். நானானி எழுதும் முன்னர் நான் எழுதி விடலாம் என ஒரு விருப்பம்.
பானையைப் பற்றி கதை எழுத வேண்டுமெனில் - கதையில் பானை வர வேண்டுமா, பானையைப் பற்றி வரவேண்டுமா, பானையைப் பயன்படுத்தி எழுத வேண்டுமா, பானை தான் கதாநாயகனாக ( நாயகியாகவும் ??) இருக்க வேண்டுமா என பலப்பல ஐயப்பாடுகள் மனத்திலே வந்தன. தாமரை என்ன எதிர்பார்க்கிறார் - ராமலக்ஷ்மி என்ன பரிந்துரைக்கிறார் - நானானி என்ன எழுதப் போகீறார் - எனப் பலப்பல எண்ணங்கள்
அப்புறம் கதை எழுதுவதென்பது அவ்வளவு எளிதா என்ன ? இது வரை ஒரூ கதை கூட எழுதியதில்லையே ( கதை விட்டிருக்கிறேன்) - என்ன செய்வது ? மனம் தடுமாறுகையில், எனதருமைப் பெயர்த்திக்கு, அவள் உறங்கச் செல்லும் முன், நான் வழக்கமாகச் சொல்லும் கதையினை, அவளுக்கு மிகவும் பிடித்த, ரசித்த, திரும்பத் திரும்பக் கூறச் சொல்லி, நான் கூறிய கதையினை இங்கு அப்படியே எழுதி விடலாமென எழுதி விட்டேன்.
சொந்தக்கதையா - சொந்தக்கற்பனையா - படித்ததா - கேட்டதா - சுட்டதா - தெரியாது - நினைவில்லை. ( பரிசு கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா இதெல்லாம் நினைக்காதீங்க - எனக்கு, கதை சொன்ன எனக்கு பரிசு கொடுங்க).
அய்யா அய்யா கதெ சொல்லுங்க
அடப் போடி - தூக்கம் தூக்கமா வருது
அம்மம்மா கிட்டே சொல்லிடுவேன் - நீங்க கதெ சொல்ல மாட்டேங்கறீங்கன்னு !
அம்மம்மா கிட்டே எனக்கென்ன பயமா ? போய்ச் சொல்லேன் !
ஏங்க கதெ தானே கேக்குறா - சொல்லுங்களேன் ( தங்க்ஸின் அன்புக் கட்டளை)
ம்ம்ம்ம்ம் - வா வா - இங்கே உக்காரு இப்படி
நானும் நானும் ( அடுத்த பெயர்த்தி)
ஆக படுக்கையில் இரு பக்கமும் இருவரையும் அமர்த்தி கதை சொல்ல ஆரம்பிப்பேன்.
அந்தக் காலத்துலே கிருஷ்ண தேவ ராயர்னு ஒரு ராசா இருந்தாராம். அவர் கிட்டே தெனாலி ராமன்னு ஒரு விகடகவி இருந்தாராம். ஒரு நா அரசவையிலே தெனாலி ராமன் சோகமா இருந்தாராம். ராசா கேட்டாராம் - என்ன சோகம்னு ? - இவரு சொன்னாராம் - என் மக சின்னப்பொண்ணு- குழந்தை - அழுது கிட்டே இருக்கா ன்னாராம் - ராசா உடனே இங்கே அழச்சிட்டு வா - நான் அவளைச் சிரிக்க வைக்கிறேன் அப்படின்னாராம்.
மறு நாள், அரசவைக்கு தெனாலி ராமன் தன் சிறு குழந்தையை அழைத்து வந்தாராம்.
ராசாவிற்கும் குழந்தைக்கும் இடையே நடந்த உரையாடல் :
பாப்பா பாப்பா - ஏம்மா சோகமா இருக்கறே - இங்க பாரு - எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும் தெரியுமா
ராசா ராசா எனக்கு ஒண்ணு வேணும் அப்பா வாங்கித்தர மாட்டேங்குறார்.
அப்படியா - என்ன வேண்டும் சொல் - பொன்னா ? பொருளா ? நாடா ? நகரமா ? யானையா ? குதிரையா ? விளையாடும் பொருளா ? சொல் சொல்
ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல - எனக்கு எனக்கு எனக்கு
தயங்காமல் கேள் குழந்தாய்
ஒரே ஓரே ஒரு ஆனை வேணும் .....ம்ம்ம்ம்ம்ம்.......
ஹா ஹா ஹா ஹா இவ்வளவுதானா ? இதற்கென்ன மறுப்பு ? இதோ வருகிறது யானை. யாரங்கே !! ( கை தட்டி) உடனே பட்டத்து யானையை அழைத்து வா !
அய்யா அயயா - ஜாலி ஜாலி - ஆனை வந்துடுச்சி ஆனை வந்துடுச்சி -
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மறு படி ஏன் அழுகிறாய் குழந்தாய்
எனக்கு எனக்கு எனக்கு எனக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அழாமல் தயங்காமல் கேள் குழந்தாய்
எனக்கு எனக்கு ஒரு பானை வேணும் ....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹா ஹா ஹா ஹா இதென்ன கூத்து - யாரங்கே - உடனே உடனே உடனே ஒரு அழகான புதுப் பானை கொண்டு வா !!
பானையும் வந்தது
அய்யா அய்யா அய்யா ஜாலி ஜாலி ஜாலி பானை ஆனை ரெண்டும் வந்துடுச்சி - ஹெ ஹெ ஹெ ஹெ - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மறு படி ஏனம்மா அழுகிறாய்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சொல்லி விட்டு அழம்மா - என்ன வேண்டும் கேளம்மா !
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ( அழுகை பெரிதாகிறது)
யாரங்கே இக்குழந்தையின் அழுகையை நிறுத்துபவர்களுக்கு ஆயிரம் பொற்காசு பரிசாகத் தரப்படும்.
( திருவிளையாடல் - தருமி - எவ்வளவு ? ஆயிரமா ஆயிரமாச்சே ஆயிரமாச்சே - எனக்கு இல்லே - இல்லே - இலே - இனி உங்கள் கற்பனைக் குதிரையை இவ்விடத்தில் தட்டி விட்டு உங்கள் மகன் மகள் பேரன் பேத்திக்கு கதை சொல்லும் போது கதை விடுங்கள்)
கடைசியில் யாரும் முன் வராத காரணத்தினாலும், குழந்தை அழுகையை நிறுத்தாத காரணத்தினாலும், மன்னவனே மண்டியிட்டு, குழந்தாய் - கேளம்மா கேள் -என்ன வேண்டும் சொல்லம்மா சொல் எனக் கேட்க,
எனக்கு எனக்கு ----------------- எனக்கு எனக்கு
இப்பவே இப்பவே - இந்த ஆனையெ இந்தப் பானைக்குள்ளே போச்சொல்லு - போகணும் - ஆமா - பானைக்குள்ளே ஆனை வேணும் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - அழுகை தொடர - அனைவரும் அவையை விட்டு தப்பித்து ஓட, மன்னவனோ மயங்கி விழ ...........
சகோதரி நானானி யானைக்கதை, பூனைக்கதை என எழுதினாலும் எழுதினார். தாமரை என்ற பதிவர் பானைக்கதை வேண்டுமென மறு மொழியில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராமலக்ஷ்மியோ நானானிக்குத் தெரியாத கதையா - எந்தப் பொருளைக் கொடுத்தாலும் கதை எழுதும் திறமை படைத்தவர் எனச் சான்றிதழ் வழங்கி உசுப்பேத்தி விட்டிருக்கிறார். நானானி எழுதும் முன்னர் நான் எழுதி விடலாம் என ஒரு விருப்பம்.
பானையைப் பற்றி கதை எழுத வேண்டுமெனில் - கதையில் பானை வர வேண்டுமா, பானையைப் பற்றி வரவேண்டுமா, பானையைப் பயன்படுத்தி எழுத வேண்டுமா, பானை தான் கதாநாயகனாக ( நாயகியாகவும் ??) இருக்க வேண்டுமா என பலப்பல ஐயப்பாடுகள் மனத்திலே வந்தன. தாமரை என்ன எதிர்பார்க்கிறார் - ராமலக்ஷ்மி என்ன பரிந்துரைக்கிறார் - நானானி என்ன எழுதப் போகீறார் - எனப் பலப்பல எண்ணங்கள்
அப்புறம் கதை எழுதுவதென்பது அவ்வளவு எளிதா என்ன ? இது வரை ஒரூ கதை கூட எழுதியதில்லையே ( கதை விட்டிருக்கிறேன்) - என்ன செய்வது ? மனம் தடுமாறுகையில், எனதருமைப் பெயர்த்திக்கு, அவள் உறங்கச் செல்லும் முன், நான் வழக்கமாகச் சொல்லும் கதையினை, அவளுக்கு மிகவும் பிடித்த, ரசித்த, திரும்பத் திரும்பக் கூறச் சொல்லி, நான் கூறிய கதையினை இங்கு அப்படியே எழுதி விடலாமென எழுதி விட்டேன்.
சொந்தக்கதையா - சொந்தக்கற்பனையா - படித்ததா - கேட்டதா - சுட்டதா - தெரியாது - நினைவில்லை. ( பரிசு கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா இதெல்லாம் நினைக்காதீங்க - எனக்கு, கதை சொன்ன எனக்கு பரிசு கொடுங்க).
அய்யா அய்யா கதெ சொல்லுங்க
அடப் போடி - தூக்கம் தூக்கமா வருது
அம்மம்மா கிட்டே சொல்லிடுவேன் - நீங்க கதெ சொல்ல மாட்டேங்கறீங்கன்னு !
அம்மம்மா கிட்டே எனக்கென்ன பயமா ? போய்ச் சொல்லேன் !
ஏங்க கதெ தானே கேக்குறா - சொல்லுங்களேன் ( தங்க்ஸின் அன்புக் கட்டளை)
ம்ம்ம்ம்ம் - வா வா - இங்கே உக்காரு இப்படி
நானும் நானும் ( அடுத்த பெயர்த்தி)
ஆக படுக்கையில் இரு பக்கமும் இருவரையும் அமர்த்தி கதை சொல்ல ஆரம்பிப்பேன்.
அந்தக் காலத்துலே கிருஷ்ண தேவ ராயர்னு ஒரு ராசா இருந்தாராம். அவர் கிட்டே தெனாலி ராமன்னு ஒரு விகடகவி இருந்தாராம். ஒரு நா அரசவையிலே தெனாலி ராமன் சோகமா இருந்தாராம். ராசா கேட்டாராம் - என்ன சோகம்னு ? - இவரு சொன்னாராம் - என் மக சின்னப்பொண்ணு- குழந்தை - அழுது கிட்டே இருக்கா ன்னாராம் - ராசா உடனே இங்கே அழச்சிட்டு வா - நான் அவளைச் சிரிக்க வைக்கிறேன் அப்படின்னாராம்.
மறு நாள், அரசவைக்கு தெனாலி ராமன் தன் சிறு குழந்தையை அழைத்து வந்தாராம்.
ராசாவிற்கும் குழந்தைக்கும் இடையே நடந்த உரையாடல் :
பாப்பா பாப்பா - ஏம்மா சோகமா இருக்கறே - இங்க பாரு - எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும் தெரியுமா
ராசா ராசா எனக்கு ஒண்ணு வேணும் அப்பா வாங்கித்தர மாட்டேங்குறார்.
அப்படியா - என்ன வேண்டும் சொல் - பொன்னா ? பொருளா ? நாடா ? நகரமா ? யானையா ? குதிரையா ? விளையாடும் பொருளா ? சொல் சொல்
ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல - எனக்கு எனக்கு எனக்கு
தயங்காமல் கேள் குழந்தாய்
ஒரே ஓரே ஒரு ஆனை வேணும் .....ம்ம்ம்ம்ம்ம்.......
ஹா ஹா ஹா ஹா இவ்வளவுதானா ? இதற்கென்ன மறுப்பு ? இதோ வருகிறது யானை. யாரங்கே !! ( கை தட்டி) உடனே பட்டத்து யானையை அழைத்து வா !
அய்யா அயயா - ஜாலி ஜாலி - ஆனை வந்துடுச்சி ஆனை வந்துடுச்சி -
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மறு படி ஏன் அழுகிறாய் குழந்தாய்
எனக்கு எனக்கு எனக்கு எனக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அழாமல் தயங்காமல் கேள் குழந்தாய்
எனக்கு எனக்கு ஒரு பானை வேணும் ....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹா ஹா ஹா ஹா இதென்ன கூத்து - யாரங்கே - உடனே உடனே உடனே ஒரு அழகான புதுப் பானை கொண்டு வா !!
பானையும் வந்தது
அய்யா அய்யா அய்யா ஜாலி ஜாலி ஜாலி பானை ஆனை ரெண்டும் வந்துடுச்சி - ஹெ ஹெ ஹெ ஹெ - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மறு படி ஏனம்மா அழுகிறாய்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சொல்லி விட்டு அழம்மா - என்ன வேண்டும் கேளம்மா !
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ( அழுகை பெரிதாகிறது)
யாரங்கே இக்குழந்தையின் அழுகையை நிறுத்துபவர்களுக்கு ஆயிரம் பொற்காசு பரிசாகத் தரப்படும்.
( திருவிளையாடல் - தருமி - எவ்வளவு ? ஆயிரமா ஆயிரமாச்சே ஆயிரமாச்சே - எனக்கு இல்லே - இல்லே - இலே - இனி உங்கள் கற்பனைக் குதிரையை இவ்விடத்தில் தட்டி விட்டு உங்கள் மகன் மகள் பேரன் பேத்திக்கு கதை சொல்லும் போது கதை விடுங்கள்)
கடைசியில் யாரும் முன் வராத காரணத்தினாலும், குழந்தை அழுகையை நிறுத்தாத காரணத்தினாலும், மன்னவனே மண்டியிட்டு, குழந்தாய் - கேளம்மா கேள் -என்ன வேண்டும் சொல்லம்மா சொல் எனக் கேட்க,
எனக்கு எனக்கு ----------------- எனக்கு எனக்கு
இப்பவே இப்பவே - இந்த ஆனையெ இந்தப் பானைக்குள்ளே போச்சொல்லு - போகணும் - ஆமா - பானைக்குள்ளே ஆனை வேணும் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - அழுகை தொடர - அனைவரும் அவையை விட்டு தப்பித்து ஓட, மன்னவனோ மயங்கி விழ ...........
அப்புறமென்ன - கதெ முடிஞ்சிடுச்சி - எல்லோரும் வீட்டுக்குப் போங்க
அவ்ளோ தான் !
சீனா ... 02.07.2008
Subscribe to:
Posts (Atom)