மதுரையில் ஒரு பிரமாண்டமான வலைப் பதிவர் மாநாடு.
சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் 12 மற்றும் 13ம் நாட்களில் மதுரையில் ஆரப்பாளையம், டி.டி. சாலை, 69ம் எண்ணுள்ள சிவபாக்கியம் திருமண மகாலில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகள், மங்களூர் சிவாவின் தலைமையில், அவருடைய கடும் உழைப்பின் பேராலும், பெரும் முயற்சிகளாலும் அமர்க்களமாக, செய்யப்பட்டிருந்தன.
வலைப்பதிவர்கள் 5 பேர் ( 5000 பேருக்குச் சமம்) சந்தித்தனர். சீனா, அவரது மறு பாதி ( வேற யாருங்க என் துணைவி, மனைவி தானுங்க), மங்களூர் சிவா, நிலாக்குட்டி, நந்து ( இவரு நிலாக்குட்டியோட அப்பாங்க) சந்திச்சாங்க. முக்கிய பார்வையாளரா நிலா அம்மா, சசி வந்திருந்தாங்க. ( நந்துவுக்கு பாதுகாப்பு. அவரு மத்தவங்க ( அதாங்க பொண்ணுங்க) பின்னாடி ஜொள்ளு விட்டுட்டுப் போய்டாமெயும், அவரெ வேற யாரும் கடத்திட்டுப் போய்டாமெயும் பாத்துக்கறதுக்கு). டைட் செக்கூரிட்டிங்க. பாவம் நந்து.
முதல் நாள் மாலையில் நிலா, சசி மற்றும் நந்து வரலே. நாங்க மூணு பேரும் மாநாட்டை எப்படி வெற்றிகரமா நடத்தறதுன்னு ரூம் போட்டு, பேசித் தீர்மானிச்சோம். ராத்ரி ஹல்வா, வடை, கிச்சடி, காப்பியோட எல்லோருக்கும் அருமையான விருந்து.
இரண்டாம் நாள், வாண வேடிக்கைகளோடு, பாண்டு வாத்தியம் முழங்க மேள தாளத்துடன் மாநாடு தொடங்கியது. Full attendance ங்கோ! வாழை மரங்கள் வாசலிலே கட்டப் பட்டிருந்தன. திருமண மகால் முழுவதும் மாவிலைத் தோரணங்கள். பொதுவான வலைப் பதிவுகள், வலைப் பூக்கள், தமிழ் மணம், தேன்கூடு மற்றும் இணையம், இணையத்தில் பாதுகாப்பு பற்றி எல்லாம் விரிவாக விவாதித்தோம். சைடிலே, சிவா திருமணம் பற்றியும் பேசினோம். நாட்டிலே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே போவது பற்றி வருத்தத்துடன் விவாதித்தோம். பாவம் சிவா இல்ல, பொண்ணு கிடைக்கணுமே அதான்.
சக வலைப் பதிவர்கள் ( தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டுமே) பற்றியெல்லாம் கலாச்சிட்டு, கிண்டல் பண்ணிட்டு இருந்தோம். சிவாவோட வீக் எண்டு ஜொள்ளு பற்றி ரொம்ப நேரம் விவாதிச்சோம். நிலாக்குட்டியோட சிரிச்சி சிரிச்சிப் பேசினோம். தோழி அனுராதாவைச் சந்திக்கணும்னு முடிவு பண்ணினோம். சந்தர்ப்ப சூழ்நிலை சரியா வரலே.
அப்புறம் என்னங்க - காலை டிபன், மதிய சாப்பாடு. அவ்ளோ தான். எல்லாம் மங்களூர்க்காரரு ஏற்பாடு. காலைலே அல்வா, இட்லி, வடை, ஊத்தப்பம், பொங்கல் ( அபி அப்பா பொங்கள் இல்லீங்க), காப்பி மற்றும் குடிக்க தண்ணி. (மினரல் வாட்டர் தானுங்க). மதியம், சாப்பாடு - பாயசம், பூந்தி, தயிர் பச்சடி, ஃப்ரூட் சாலட், ( சூடா இருந்திச்சி), பருப்பு உசிலி, முட்டக்கோஸ் துவட்டல், மொச்சைக் குழம்பு, மலையாள அவியல், பருப்பு, நெய், வடை, சாதம், சாம்பார், மோர்க் குழம்பு, ரசம், தயிர் etc etc etc. எல்லா ஏற்படுகளும் சூப்பரு போங்க.
மாநாட்டைப் பயன்படுத்தி, சிவா அவங்க அண்ணணோட கல்யாணத்தேயும் இந்த நாட்களில், இதெ மண்டபத்தில் நடத்திக்கிட்டாருங்க. மாநாட்டு வேலயோட வேலயா, இருக்கற பிஸியிலே, அந்தக் கல்யாணத்திலேயும் கலந்து கிட்டோம். கல்யாணத்துலே கொடுத்த தாம்பூலப் பை கொடுத்தாங்க. அந்த செலவெ எல்லாம் மாநாட்டுச் செலவு கணக்குலே எழுதலீங்கோ!
மத்தபடி வேற ஒண்ணும் செய்திகள் இல்லங்க.
மாநாட்டை வெற்றி கரமா நடத்திக் காட்டிய எங்களுக்கு நாங்களே நன்றி தெரிவிச்சிக் கிட்டு கலஞ்சு போனோமுங்க.
அம்புட்டுத்தானுங்கோ!!
தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! ..........................
Sunday, 27 January 2008
Thursday, 24 January 2008
இது மொக்கையா - இல்லை
வாழ்க்கை :
------------
வாழ்க்கை ஒரு கடமை என்றால் அதை நீ நிறைவேற்று
வாழ்க்கை ஒரு விளையாட்டென்றால் அதை நீ விளையாடு
வாழ்க்கை ஒரு ஆனந்தம் என்றால் அதை நீ அனுபவி
வாழ்க்கை ஒரு சோதனை என்றால் அதை நீ சமாளி
வாழ்க்கை ஒரு சோகம் என்றால் அதை நீ எதிர்த்து நில்
வாழ்க்கை ஒரு புதிர் என்றால் அதை நீ விடுவி
வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால் அதனுடன் நீ போராடு
வாழ்க்கை ஒரு சவால் என்றால் அதை நீ சந்தி
வாழ்க்கை ஒரு அன்பு என்றால் அதில் நீ இன்பம் காண்
வாழ்க்கை ஒரு கனவென்றால் அதை நீ நனவாக்கு
வாழ்க்கை ஒரு அழகென்றால் அதை நீ ரசி
வாழ்க்கை ஒரு சத்தியம் என்றால் அதை நீ கடைப்பிடி
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் என்றால் அதை நீ பயன்படுத்து
வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருபதல்ல
வாழ்க்கை என்பது வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்
------------
வாழ்க்கை ஒரு கடமை என்றால் அதை நீ நிறைவேற்று
வாழ்க்கை ஒரு விளையாட்டென்றால் அதை நீ விளையாடு
வாழ்க்கை ஒரு ஆனந்தம் என்றால் அதை நீ அனுபவி
வாழ்க்கை ஒரு சோதனை என்றால் அதை நீ சமாளி
வாழ்க்கை ஒரு சோகம் என்றால் அதை நீ எதிர்த்து நில்
வாழ்க்கை ஒரு புதிர் என்றால் அதை நீ விடுவி
வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால் அதனுடன் நீ போராடு
வாழ்க்கை ஒரு சவால் என்றால் அதை நீ சந்தி
வாழ்க்கை ஒரு அன்பு என்றால் அதில் நீ இன்பம் காண்
வாழ்க்கை ஒரு கனவென்றால் அதை நீ நனவாக்கு
வாழ்க்கை ஒரு அழகென்றால் அதை நீ ரசி
வாழ்க்கை ஒரு சத்தியம் என்றால் அதை நீ கடைப்பிடி
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் என்றால் அதை நீ பயன்படுத்து
வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருபதல்ல
வாழ்க்கை என்பது வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்
Friday, 18 January 2008
எழுதுனதுலே பிடிச்சது (யாருக்கு)
எல்லோருக்கும் வணக்கம்.
நம்ம கண்மணி பெஸ்ட் கண்ணா பெஸ்ட் னு ஒரு பதிவுலே - எல்லாப் பதிவர்களையும் அழைச்சு எழுதுனதிலேயே சிறந்தது எதுன்னு கேட்டிருந்தாங்க. சர்வேசன் வேற அந்தப் பதிவெல்லாம் கட்டம் கட்டிப் போடப் போறாராம். இருக்கட்டும்.
நான் 2007 ஆகஸ்டு மாசம் தான் வலைப்பூக்கள் பக்கமே வந்தேன். என்னுடைய இளமைக்கால மலரும் நினைவுகளை அசைபோடுவது என்று ஆரம்பித்தேன். ஆரம்பித்ததில் இருந்த வேகம் பின்னர் இல்லை. இன்னும் எழுத நினைத்தது ஏராளம் இருக்கிறது.
அடுத்து படித்ததில் பிடித்தது என ஒரு பதிவு ஆரம்பித்து நான் படித்தவைகளில் என் மனதுக்குப் பிடித்தவைகளை அப்படியே எழுதி வந்தேன். அதிலும் படித்தவை ஏராளம் - பிடித்தவை ஏராளம். எழுதியதோ கொஞ்சம் தான்.
நண்பர் தருமியின் தயவால் நண்பர் ராம் தலைமையில் மதுரை மாநகரம் என்ற குழுப்பதிவிலும் எழுதி வந்தேன்.
ஏனோ தெரியவில்லை. எழுதுவதில் இருந்த விருப்பம் பதிவுகளைப் படித்து மறுமொழி இடுவதற்கு மாறியது. அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியலில் முதலில் எனது பெயர் தொடர்ந்து இருந்த வண்ணம் அதிகப் பதிவுகளைப் படித்தேன். அதிக மறுமொழிகள் இட்டேன். ஒரு சமயம் அனானிமஸ்ஸையும் தாண்டி எனது பெயர் முதலில் இருந்தது.
எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றென்.
இப்போது கண்மணி கேட்டதால், எழுதியதைத் திரும்பப் படித்தேன். எழுதியதே குறைவு. அதில் சிறந்தது எது ? தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்துத் தான் பழக்கம். இருப்பினும் ஒரு குழந்தையிடம் சற்றே அன்பு அதிகம் இருக்கத்தானெ செய்யும்.
அதைப்போல , நான் மதுரை மாநகரத்தில் எழுதிய " மலரும் தீபத் திருவிழா நினைவுகள் " என்ற பதிவு மனதுக்குப் பிடித்த பதிவும் அதிக மறுமொழிகள் பெற்ற பதிவுமாகும். எனவே அப்பதிவினையே எனக்குப் பிடித்த - நான் எழுதியதில் சிறந்த - பதிவாகத் தேர்ந்தெடுக்கிறென்.
அழைத்த கண்மணிக்கு நன்றி. சர்வேசனுக்கும் நன்றி.
நம்ம கண்மணி பெஸ்ட் கண்ணா பெஸ்ட் னு ஒரு பதிவுலே - எல்லாப் பதிவர்களையும் அழைச்சு எழுதுனதிலேயே சிறந்தது எதுன்னு கேட்டிருந்தாங்க. சர்வேசன் வேற அந்தப் பதிவெல்லாம் கட்டம் கட்டிப் போடப் போறாராம். இருக்கட்டும்.
நான் 2007 ஆகஸ்டு மாசம் தான் வலைப்பூக்கள் பக்கமே வந்தேன். என்னுடைய இளமைக்கால மலரும் நினைவுகளை அசைபோடுவது என்று ஆரம்பித்தேன். ஆரம்பித்ததில் இருந்த வேகம் பின்னர் இல்லை. இன்னும் எழுத நினைத்தது ஏராளம் இருக்கிறது.
அடுத்து படித்ததில் பிடித்தது என ஒரு பதிவு ஆரம்பித்து நான் படித்தவைகளில் என் மனதுக்குப் பிடித்தவைகளை அப்படியே எழுதி வந்தேன். அதிலும் படித்தவை ஏராளம் - பிடித்தவை ஏராளம். எழுதியதோ கொஞ்சம் தான்.
நண்பர் தருமியின் தயவால் நண்பர் ராம் தலைமையில் மதுரை மாநகரம் என்ற குழுப்பதிவிலும் எழுதி வந்தேன்.
ஏனோ தெரியவில்லை. எழுதுவதில் இருந்த விருப்பம் பதிவுகளைப் படித்து மறுமொழி இடுவதற்கு மாறியது. அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியலில் முதலில் எனது பெயர் தொடர்ந்து இருந்த வண்ணம் அதிகப் பதிவுகளைப் படித்தேன். அதிக மறுமொழிகள் இட்டேன். ஒரு சமயம் அனானிமஸ்ஸையும் தாண்டி எனது பெயர் முதலில் இருந்தது.
எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றென்.
இப்போது கண்மணி கேட்டதால், எழுதியதைத் திரும்பப் படித்தேன். எழுதியதே குறைவு. அதில் சிறந்தது எது ? தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்துத் தான் பழக்கம். இருப்பினும் ஒரு குழந்தையிடம் சற்றே அன்பு அதிகம் இருக்கத்தானெ செய்யும்.
அதைப்போல , நான் மதுரை மாநகரத்தில் எழுதிய " மலரும் தீபத் திருவிழா நினைவுகள் " என்ற பதிவு மனதுக்குப் பிடித்த பதிவும் அதிக மறுமொழிகள் பெற்ற பதிவுமாகும். எனவே அப்பதிவினையே எனக்குப் பிடித்த - நான் எழுதியதில் சிறந்த - பதிவாகத் தேர்ந்தெடுக்கிறென்.
அழைத்த கண்மணிக்கு நன்றி. சர்வேசனுக்கும் நன்றி.
Subscribe to:
Posts (Atom)