ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 8 January 2011

ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம் 2010

ஈரோட்டினைச் சார்ந்த பதிவர்கள் குழுமம் சென்ற டிசம்பர் 26ம் நாள் ஞாயிறன்று - பதிவர்கள் வாசகர்கள் சங்கமம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்று ஏறத்தாழ நூறு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் வந்து கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் விருந்தினர்களை நன்கு கவனித்து, விருந்தோம்புதலை வெளிப்படுத்தினர். மதிய உணவு ஒன்றே போதும் அவர்களது விருந்தோம்புதுலக்கு. விழா நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு பார்வை :

ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம் ஒரு கலைப் பதிவாய்த் திகழ்ந்தது. கலை என்பது அறிவு - கலை என்பது ஆற்றல் - கலை என்பது கதை - க்லை என்பது காவியம் - கலை என்பது படைப்பு. அதுவும் அறிவாற்றலை வெளிப்படுத்தும் நுட்பம் என்றார்ப் போல் சிறுகதைகளை உருவாக்க எப்படிச் சிந்திக்க வேண்டும் - அந்த சிந்தனைக்கு ஏற்ற பயிற்சிகள் - அச்சிந்தனைத் துளிகள் எவ்வாறு கதை வடிவுக்குள் வரும் என்பதைத் தன் பயிற்சி வழிமுறைகளால் உரையில் வடித்தார் எழுத்தாளர் பெருமாள் முருகன். கேட்டவர்களுக்கு நிச்சயம் வலைப்பதிவில் சிறுகதைகள் படைக்கும் ஆர்வம் சற்றே எட்டிப் பார்த்திருக்கும்.

மொக்கைப்பதிவுகள் சிந்தனையின் சிகரத்தில் தோன்றுபவை. இயல்பான ஒன்றை அதன் நிலையிலேயே எடுத்துரைப்பது எல்லாராலும் இயலும். ஆனால் அதனைச் சற்று நகைச் சுவையோடு நற்கலைப்படுத்துவது என்பது சிறந்த முயற்சி உடையாருக்கே இயலும் என்பதை பாமரன் தன் கருத்தோட்டமாகப் பதிந்தார். செவி மடுத்தவர்கள் இதனைப் பற்றி சற்றே சிந்தித்திருப்பர்.

குறும்படங்கள் பற்றி அருணும் - திரைப்படங்கள் பற்றி சிதம்பரனும் - புகைப்படக் கலை பற்றி சுரேஷ்பாபுவும் - இன்றைக்கு நம் எல்லார் மனங்களிலும் இடம் பிடித்திருக்கும் இப்படக்கலை நுணுக்கங்களை எடுத்துரைக்கும் பொழுது வியப்பாய் இருந்தது. ஏதோ பொழுது போக்கு - அவர்களூக்குத் தெரிந்ததை தெரியாத நம்மிடம் கூறுகிறார்கள் என்ற எண்ணமே இன்றி படம் எடுத்துக் கொண்டிருப்பவர் களுக்கு வெளிச்சம் - தொலைவு - பொருள் - வடிவு என்ற எல்லைகளை எப்படி எப்படி எல்லாம் அமைத்தால் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியும் என்பதை இவர்கள் மிக நீளமாக, விளக்கமாக எடுத்துரைத்தார்கள் ! . ஏனென்றால் அவர்கள் `கூற வந்த எதையும் சுருக்க முடியாது. அதுவும் தொழில் நுட்ப விளக்கங்களோடு உரைத்தது படங்களை எடுக்க விரும்புபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.

இணையமும் வலைப் பூக்களும், நிழற்படங்கள் வழி ஆவணப்படுத்துதல் என்று மாலைப் பொழுதில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இக்காலை நிகழ்ச்சிகள் பக்க பலமாய் இருந்தன.

இறுதியாக ஒரு கல்ந்துரையாடல் - நோக்கம் நன்று - ஆனால் இடம் பெற்ற காலம் அதன் பயனை அவ்வளவாய்த் தரவில்லை. நடத்தியவர் சிறப்பாக்த் துவங்கினார். நேரமின்மை அதன் விளைவினை விளைவிக்க வில்லை.

பதிவுகளையே பார்த்த நமக்கு அதன் படைப்பாளிகளை நேரிலே பார்த்த போது மகிழ்வாய் இருந்தது. உண்மையில் படைப்பாளி ஆற்றல் மிக்கவன் தான் என்பது மனது பெறும் ஆறுதல் ! அதை அமைதியாய் நேரில் கண்ட போது கருத்தும் மகிழ்ந்தது - கண்களோடு !

விழாப் பொறுப்பாளர்களுக்கு - நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றி உரித்தாகுக.

நட்புடன் சீனா

33 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

பகிர்வுக்கு நன்றிங்க ஐயா

cheena (சீனா) said...

அன்பின் ஆரூரன்

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

arasan said...

நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றிங்க அய்யா ...
இதுபோல் நிறைய சந்திப்புகள் நடந்திட வாழ்த்துகள் ...
உங்களின் அசத்தலான பதிவும் அருமை

ஸ்வர்ணரேக்கா said...

//இறுதியாக ஒரு கல்ந்துரையாடல் -------------------- விளைவினை விளைவிக்க வில்லை.//

-- யார் மனதையும் புண்படுத்தாமல், கருத்தினை சொன்னதற்கு ஒரு சபாஷ்...

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அரசன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்வர்ணரேகா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

க.பாலாசி said...

மிக்க நன்றிங்க அய்யா... தங்களின் வருகையும் எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது.. நல்ல பகிர்வு

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி - நல்வாழ்த்துகள் - ஆமாம் சங்கமத்தில் சந்தித்த போது பேச்வே இல்லையே - பிஸியா இல்லை யாரெனத் தெரிய வில்லையா ?

manjoorraja said...

பகிர்வுக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் மஞ்சூர் ராஜா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

எஸ்.கே said...

சந்திப்பிற்கு நல்வாழ்த்துக்கள்! இதுபோல் பல சந்திப்புகள் இனிமையாக நடக்கட்டும்!

cheena (சீனா) said...

அன்பின் எஸ் கே - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ் கே. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் எஸ் கே - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ் கே. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

க.பாலாசி said...

//அன்பின் பாலாசி - நல்வாழ்த்துகள் - ஆமாம் சங்கமத்தில் சந்தித்த போது பேச்வே இல்லையே - பிஸியா இல்லை யாரெனத் தெரிய வில்லையா ? //

அய்யா.. தாங்கள் முதல்தளத்தில் மகி கிரானி மேடத்துடன் நிற்கும்போது முருங்கைக்காயுடன் வந்து உங்களையும் அம்மாவையும் சந்தித்தேன்.. மறந்துவிட்டீர்களோ!!! பிறகு உங்களுக்கு உணவும் பறிமாறினேன், மற்ற நேரத்தில் அலவலாவ முடியாமல் போனது.. பிற பதிவர்களை வரவேற்பதிலும் மற்ற செயல்களிலும் ஈடுபட்டிருந்தமையால் இருக்கலாம்.. உங்களை அடையாளம் தெரியாமல் போகுமா?!!!

VELU.G said...

தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ஐயா

லதானந்த் said...

நல்ல பகிர்வு. நானும் கலந்துகொள்வதாய் இருந்தேன். சிலபல காரணங்களால் கலந்துகொள்ள இயலவில்லை. வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் வேலு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் லதானந்த் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

cheena (சீனா) said...

அன்பின் ராமலக்ஷ்மி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

'பரிவை' சே.குமார் said...

யார் மனதையும் புண்படுத்தாமல், கருத்தினை சொன்னதற்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தாங்களையும் ஆச்சியையும்
நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைந்தேன் ஐயா.

cheena (சீனா) said...

அன்பின் குமார் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

சங்கமத்தில் சந்தித்ததில் எங்களுக்கும் மெத்த மகிழ்ச்சி நண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பகிர்வு.:-))))

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி,

கொண்டு வந்த முருங்கைக் காயினை என்ன செய்தாய் - சைவ சாப்பாட்டு மேசைக்கு வரவே இல்லையே !

Unknown said...

kindly contact early to this e mail rssairam99@gmail.com
rssairam.blogspot.com

பழமைபேசி said...

நன்றி

Anonymous said...

பொங்கல் கொண்டாடி களைப்பாய் இருப்பீங்க...
குக்கர் பொங்கல் வைத்திருந்தால் நம்ம வீட்டு பக்கமா வாங்க...

கோநா said...

sirappana pathivu , valththukkal.

Anonymous said...

கோவையில் எப்போது வலைபதிவர் சங்கமம் தெரிவியுங்கள் அன்பரே.

r.v.saravanan said...

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி