ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 1 March 2010

ஊமை நெஞ்சங்கள் !!!!!

தமிழ் அரசி - 22.11.1992 வார இதழில் அறிமுக எழுத்தாளர் வரிசை எண் : 3ல் - எனது செல்ல மகள் - இளைய மகள் எழுதிய கதை ஒன்று பிரசுரமானது. அவ்வறிமுகத்தையும் அக்கதையையும் இங்கு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அறிமுகம் :

சென்னை சௌகார்பேட்டையில், மூங்கிபாய் கோயங்கா பெண்கள் மேல்நிலைப்பள்ளீயில் '+2' முதலாண்டு பயிலும் செல்வி பிரியா, கடந்த 1992 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்வில், பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றதுடன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பல பெற்றதும் உண்டு.

பிரியாவின் தந்தை வங்கிப் பணியாளர் - தாய் தமிழாசிரியை.

பிரியாவின் முதல் கதை "ஊமை நெஞசங்கள்" மனித மனங்களை நன்றாகப் படித்து, உணர்ந்து, தந்தையையும் மகளையும் வெகு இயல்பாகவே பேச விட்டிருக்கிறார்.

வாழ்த்துகள் !

இனி கதை :

பாரதி :

அலாரம் அடித்தது.

சே ... ! அதுக்குள்ளெ விடிஞ்சிடுச்சா ? இனிமே எழுந்து, குளிச்சு, சமைச்சு, டிபன் பாக்ஸில் கட்டி, காலேஜுக்குக் கிளம்பி ..... ?

அலாரம் கடிகாரத்தைக் கண்டு பிடித்தவன் மேல் கோபம் கோபமாய் வந்தது. வேறு வழி இல்லாமல், படுக்கையிலிருந்து எழுந்தேன்.

எதிர்ச் சுவர்ப் படத்தில் அம்மா சிரித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு மட்டும் ஏம்மா சிரிப்பே வரமாட்டேங்குது ? எப்படி வரும் ? காலையிலே எழுந்தப்புறம் இந்த வீட்டுக்குள்ளே நான் பார்க்கிற ஒரே முகம் அப்பா முகம்தான். அதைப்பார்த்தாலே கோபம் பொத்துக்கிட்டு வருது. அப்புறம் எங்கேயிருந்து சிரிப்பு வரும் ? சலிப்புடன் திரும்பினேன்.

அழகிய சூரியன் மறையும் காட்சி சுவரில் ஓவியமாய்த் தொங்கியது.

சூரியன் மறைந்ததனால் கறுத்த ... சே ! எதைப் பார்த்தாலும் இந்தக் கவிதை மட்டும் தோணிருமே ....

எனக்குக் கவிதை என்றாலே பிடிப்பதில்லை. அப்பா எழுத ஆரம்பித்ததிலிருந்து ! மூன்று வருஷங்களுக்கு முன் அம்மா போன பின், எழுத ஆரம்பித்தவர்தான் ... இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுத ஆரம்பித்தால் சகல*மும் மறந்து சோகம் அவரைச் சூழ்ந்து விடும்.

சுந்தரேசன் :

கட்டிலில் படுத்திருந்த எனக்கு மனம் ஏனோ கனத்தது. ஜானகி ! ... மனம் பூரா ஜானகி சூழ்ந்திருந்தா, கனக்காம என்ன செய்யும் ?

"சீக்கிரம் எழுந்திருங்க. நேரமாச்சு. காபி போட்டு வெச்சுருக்கேன். ஆறிடப் போவுது. " என்று எழுப்புவதிலிருந்து, "இவ்வளவு நேரம் ஆஃபீஸிலே என்ன பண்ணிட்டிருந்தீங்க ? இப்ப வந்து லைட்டப் போட்டுக்கிட்டு, கொட்டக் கொட்ட முழிச்சிக்கிட்டு ஆஃபீஸ் ஃபைலப் பாத்துக்கிட்டு இருக்கீங்களே? "என்று செல்லமாய்த் திட்டி, இரவு தூங்கும் வரை என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்த அவளுக்கு,எப்படி என்னை விட்டுப் போக மனசு வந்தது ?

மூணு வருஷம் ஆச்சு ! அவள் போய் ! ஆனா எனக்குமட்டும் இன்றும் வாழ்ந்து க்கிட்டுருக்கா ! .... கவிதையாய் .... ? வேகமாய் எழுந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்தேன் !

பாரதி :

அப்பாவைத் தவிர்த்து ரூமை விட்டு வெளியே வந்தேன். தேதிப் படம் கிழிக்காமலிருந்தது. கிழித்தேன். எனக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது. இன்று ஞாயிற்றுக் கிழமை. காலேஜ் லீவ். இந்த மூன்று அறை வீட்டுக்குள்ளேயே , அப்பா முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். வாச்ற்கதவைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தேன். வரும்போது பார்த்தேன். ரூம் கதவு மூடி இருந்தது. அப்பா இன்னும் எழுந்திருக்க வில்லை போலிருக்கிறது. பாக்கெட்டையும் துடைப்பத்தையும் எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றேன். ஒரு கோலத்தைப் போட்டு விட்டு உள்ளே வந்தேன். ரூம் கதவு திறந்திருந்தது. அப்பா சோஃபாவில் அமர்ந்திருந்தார். ஹூம். - இதுல ஒண்ணும் கொறச்சலில்ல - எழுந்த உடன் காஃபி வந்துடணும் - அதில் அவர் உடகார்ந்திருந்தார் என்றால் காஃபி வேணும்னு அர்த்தம். நானாக அர்த்தம் பண்ணிக் கொண்டதுதான் அதுவும் !

எனக்குப் பத்திக் கொண்டு வந்தது. ஒரு நாளாவது, என்னம்மா ? - காலேஜா ? - லீவு போடேன் - வெளியில போலாம் - சாப்பிட்டியா ? - ரொம்ப நேரம் கண் விழிக்காதெ ! - உடம்பு கெட்டுடும். நோட்ஸ் கேட்டியே - இந்தா - முப்பது சொன்னான் - 27க்கு வாங்கினேன் - இப்படி ஏதாவது சொல்ல மாட்டாரா ? - சரி. அதுவும் வேண்டாம். வீட்டுல ஒருத்தி இருப்பதாவது நினைவிருக்க வேண்டாமா ? பேசி மூணு வருஷம் ஆச்சு ! என்னதான் நினைச்சிக் கிட்டு இருக்காருன்னு தெரில ! இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திரணும். மனம் தவித்தது !

சுந்தரேசன் :

காஃபி வந்தது. குடித்து விட்டுக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.

என மகள் பாரதியை நினைக்கும் போது பெருமையா இருக்கும். ஜானகி போனதிலிருந்து என்னிடம் எதையும் எதிர்பார்க்காதவள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காதவள். தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்பவள்.

அவளுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது. எப்போதும் படித்துக் கொண்டிருப்பாள். இரவு பகலென்று பார்க்க மாட்டாள். தனக்கு வேண்டிய புத்தகங்களைக் கூட தானே வாங்கிக் கொள்வாள். என்னைத் தொந்தரவு செய்யக்கூடதென்ற நினைப்போ என்னவோ ?. நான் அவள் போக்கில் அவளை விட்டு விட்டேன். பாவம்.. தாயில்லாப் பெண். அவள் சுதந்திரத்தை ஏன் பறிக்க வேண்டும் ?.

பாரதி :

முடிவு செய்து விட்டேன். இன்றிரவு பேசித் தீர்த்துவிடுவதென்று. ந்றுக்கிக் கொண்டிருந்த கத்தரிக் காயை அப்படியே விட்டு விட்டு, அவர் எதிரில் போய் நின்றேன். கவனிக்க வில்லை "அப்பா ! ".

சுந்தரேசன் :

நிமிர்ந்த எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் இருந்தது. என் மகள் என்னை "அப்பா ! " என்று மூணு வருஷத்துக்கு அப்புறமாய்க் கூப்பிடுகிறாள் . என்னம்மா ? சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று கேட்டேன் !

பாரதி :

இவரென்ன - தன் பெண் ஊமை என்று நினைத்துக் கொண்டாரா ? ஒரு வார்த்தை பேசியதற்கே இப்படி ஆச்சரியமாய்ப் பார்க்கிறாரே !

"உங்க கிட்டே கொஞ்சம் பேசணும் அப்பா ! "

"தாரளமா ! என்னம்மா வேணும் ? "

இந்தக் கேள்வியக் கேட்க இப்பொழுதுதான் தோன்றியதா ? இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்ததைக் கொட்டி விட்டேன் :

"இதைக் கேட்க இப்பவாவது தோணிச்சே அப்பா ! : ஒரு நாளாவது என் கிட்டே பேசி இருப்பீங்களா ? அம்மா போய்ட்டான்னா - அவ கூட சேந்து நானுமா போய்ட்டேன் ? போனவங்களுக்கு வருத்தப் படறீங்களே - இருக்கறவங்களுக்கு கவலைப்பட்டீங்களா ? உங்க மக என்ன பெரிய ஞானின்னு மனசில நினைப்பா ? எதையுமே உங்க கிட்டே கேக்காம, பேசாம, ஊமையா எல்லாத்தயும் செஞ்சிகிட்டு இருக்க ? அப்படி இருந்தா, பைத்தியம் தான் பிடிக்கும் ! அதனாலே தான் இன்னைக்குக் கேக்கறேன் - ஏன் பேசமாட்டேங்கறீங்க ?

சுந்தரேசன் :

எனக்குத் துக்கம் தொண்டைய அடச்சிது .

பாரதி :

உங்க மனைவிய நாந்தான் அனுபிச்சுட்டேன்னு நினைக்கிறீங்களா ? நான் என்னப்பா பண்ண முடியும் ? அமமாவுக்கு ஹார்ட் அட்டாக் - போதிய வசதி இல்ல . ஆப்பரேஷனுக்கு. அதுக்காகத் தெனந்தெனம் நான் சாகனூமா ? பிளீஸ் அப்பா ! என்னச் சித்திரவத பண்ணாதீங்க ! அழுதே விட்டேன் !

சுந்தரேசன் :

காலடியிலே பூமி நழுவியது. இவ்வளவு உணர்ச்சிகளா பாரதி மனசில ! சே ... ! எப்படி அரக்கத்தனமா நடந்து கிட்டு இருந்திருக்கேன் ! எம்பொண்ணய புரிஞ்சிக்க முடியலியே என்னால..... ! எனன் அப்பா நான் ? அழுது கொண்டிருந்த மகளை ஆதரவாய் அணைத்துக் கொண்டேன்.

பாரதி ! இத்தன வருஷம் நாம ரெண்டு பேரும் நடக்கிறது என்னன்னு தெரிஞ்சிக்காம இருந்திட்டோம். சத்தியமா சொல்றேம்மா ! நான், நீ நெனெக்கிற மாதிரி இல்ல ! நீ எதயும் எதிர்பாக்காதவன்னு நெனெச்சது தப்புதான். ஆனா ஒண்ணு - இந்த ஊமை நாடகம் தொடர - இனி - நிச்சயமா நான் விட மாட்டேன். - என்ன நம்பும்மா - என்ன நம்பு !

பாரதி :

எனக்கு ஏதோ புரிந்தது - ஏதோ புரியவில்லை - ஆனால், என் அப்பா எனக்குக் கிடைத்து விட்டார் என்பது மட்டும் தெளிவாகவே புரிந்தது !

----------------------------

நட்புடன் சீனா .


73 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

Thekkikattan|தெகா said...

சீனா, டச்சிங்கான முறையில கதையை நகர்த்தி இருக்காங்க. இத்தனை சின்ன வயசில இவ்வளவு நுணுக்கங்களை கவனிச்சு ... ம்ம் அருமை. இப்போ இங்க பகிர்ந்துகிட்டதுக்கு உங்களுக்கும் ஒரு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் பிரபா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

*இயற்கை ராஜி* said...

nalla irukku kathai

cheena (சீனா) said...

அருமை நண்பர் ருத்ரா எழுதிய வாழ்த்துக் கவிதை

"ஊமை நெஞ்சங்கள்"


அன்பு நண்பர் சீனா அவர்களே

உங்கள்
அன்புமகள் செல்வி.பிரியாவின்
முதல் சிறுகதை......
அல்ல அல்ல‌
குறும்படம் பார்த்தேன்.
ஒரு சோகத்தினால்
மூட்டம் போட்டிருந்த வானம்
திடீரென்று
பாசம் எனும்
பளிங்கு மழையை
இரு உள்ளங்களின்
கோடி சூரியனைப் பிழிந்து
ஜூஸ் ஆக்கி தருவதுபோல்
இருந்த அந்த கடைசிக்காட்சி
மிகவும் அற்புதம்.
சிறுகதையில்
விதைத்திருக்கும் சிறு பொறி
நின‌க்கும் தோறும்
நினைக்கும் தோறும்
இதயத்துள் தேங்கியிருந்த
வெளிச்சத்தை
பிரம்மாண்டமாய் வெளிப்படுத்திவிட்டது.
க‌ற்பாறையாய் இருந்த‌ பாச‌த்தினை
அன்பின் "சிப்" விலக்கி
வாச‌ல் திற‌ந்து வைத்திருக்கிற‌து.
முத‌ல் க‌தை என்று நீங்க‌ள்
முன்னுரை த‌ந்த‌தால் தான்
அறிந்து கொண்டோம்.

செல்வி.பிரியா
மேன் மேலும் வெற்றிக‌ள் குவிக்க
வாழ்த்துக்க‌ள்

இப்ப‌டிக்கு
அன்புட‌ன்
ருத்ரா

கோவி.கண்ணன் said...

பேசி தீர்க்கச் சொல்லும் கதை. சிறப்பாக இருக்கிறது.

மனம் விட்டுப் பேசினால் உறவு விட்டுப் போகாதுன்னு உணர்த்தும் கதை.

கதை எழுதியவருக்கும் அவருடைய அப்பாவிற்கும் நல் வாழ்த்துகள்.

:)

துளசி கோபால் said...

பேசாம இருப்பது போல பெரிய கொடுமை வேறில்லை!

நல்லா இருக்கு 'கதை'

பாராட்டுகள்.

cheena (சீனா) said...

கோவி

மனம் விட்டுப் பேசணும் - பேசுறோமா

ந்ன்று நன்று கோவி

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இயறகை - ராஜி

cheena (சீனா) said...

ஆமா துளசி - பேசாம இருப்பது பெரிய கொடுமை

Thenammai Lakshmanan said...

உங்கள் செல்ல மகள் பிரியா எழுதியகதை அருமை சீனா சார் சின்ன வயசிலேயே இவ்வளவு அருமையா எழுதி இருக்காங்களே பராட்டுக்கள்

Jerry Eshananda said...

பெயர் சொல்லும் கதை..

cheena (சீனா) said...

அன்பின் தேனு

வருகைக்கும் கருத்துகும் நன்றி தேனு

நல்வாழ்த்துகள் தேனு

cheena (சீனா) said...

அன்பின் ஜெரி

கருத்துக்கு நன்றி ஜெரி

நல்வாழ்த்துகள் ஜெரி

Thamiz Priyan said...

கதை நன்று! அப்பமே அக்கா ஸ்மார்ட்டு தான்.. :-)
இப்ப ஒன்னும் எழுதுவது இல்லியே... ஓய்வு நேரத்தில் எழுத ஊக்கப்படுத்துங்கள்.

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

அக்கா அப்பவும் இப்பவும் எப்பவுமே ஸ்மார்ட்டுதான் - ஆனா எழுதற மனநிலை - மூடு வரதுங்கறது ரொம்பக் கஷடம் அக்காக்கு - என்ன பண்றது - பாப்போம் - எழுத வைப்போம்

☀நான் ஆதவன்☀ said...

சீனா ஐயா கதை அருமை. அக்காவுக்கு பாராட்டுகளை சொல்லிடுங்க.

மாதேவி said...

மனத்திற்குள் வைத்துக் குழம்புவதைவிட்டு மனம்விட்டு பேசுவதால் வாழ்க்கை சுமூகமாகும் என்பதை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

பாராட்டுக்கள்.

Balakumar Vijayaraman said...

அருமையான கதை, வாழ்த்துகள். இன்னும் எழுதுறாங்களா ஐயா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

கதை சிறப்பாக இருக்கிறது.நல் வாழ்த்துகள்.

Karthick said...

Hello Sir -

It is an awesome story. I doubt is it her first story. A Nice way of story telling. I think she has great potential to be novel writer. I would like her to start bloggig once she join college - not affecting the study. Convey my greetings to her.

eluthuvathu Kathick.

லோகு said...

நல்ல கதை. சிறப்பான எழுத்து நடையோடு, மனதை கவரும் வகையில் எழுதியுள்ளார். மென்மேலும் எழுதி தமிழ் வளர்க்க அவருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

தேவன் மாயம் said...

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

தேவன் மாயம் said...

கதை நல்லா எழுதியிருக்காங்க!! வாழ்த்தைச் சொல்லவும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்காங்க..

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

தமிழ் சொல்றமாதிரி அப்பப்ப எழுத வைங்க.. அவங்களை எல்லாம்.

லதானந்த் said...

கதை சூப்ப்பருங்க. பின்ன சீனா வாரிசு ஏனோ தானோனா இருக்கும்? வாழ்த்துக்கள்.
ஓட்டும் போட்டுட்டேன் எசமான்!

அன்புடன் அருணா said...

அட!பூங்கொத்தும் வாழ்த்தும் !

அகல்விளக்கு said...

வாவ்....

அருமை அண்ணா....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கதை சிறப்பாக வந்திருக்கிறது!

உரையாடல் முறைப்பும் நன்று!!

வாழ்த்துகள்!!!

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவன்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா
இப்பவும் எழுதுகிறார்கள் - வலைப்பூ வைத்திருக்கிறார்கள்

naanpudhuvandu.blogspot.com

நல்வாழ்த்துகள் பாலா

cheena (சீனா) said...

அன்பின் டிவீஆர்

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே

cheena (சீனா) said...

Hi Karthick

Thanks for visiting my blog

Regards
Cheena

cheena (சீனா) said...

அன்பின் லோகு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லோகு

cheena (சீனா) said...

நன்றி தேவன்மாயம்

cheena (சீனா) said...

அன்பின் முத்துலட்சுமி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் லதானந்த்

ஓட்டுக்கு நன்றி - சீனா வாரிசு சீனாவ மிஞ்சும் - நன்றி நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகல் விளக்கு

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அத்தி வெட்டி ஜோதி பாரதி

வெற்றி said...

அட! அப்பவே என்னமா எழுதிருக்காங்க..இப்போ என்ன பண்றாங்க..அவங்களையும் பதிவுலகுக்கு கூட்டி வாருங்கள் !

வெண்பூ said...

அருமையான கதை ஐயா... எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கதை ஆசிரியருக்கு தெரிவித்து விடுங்கள்....

PPattian said...

+1 படிக்கும் ஒருவர் எழுதிய கதை என்று நம்பவே முடியல்லை. பிரமிக்க வைக்கிறது கதையின் நடை. வாழ்த்துகள்.

இப்பொது என்ன செய்கிறார்?

cheena (சீனா) said...

அன்பின் வெற்றி

இப்ப அயலகத்துலே இருக்காங்க - பிளாக் வச்சிருக்காங்க - எழுதறது குறைஞ்சி போச்சு - குடும்பம் மகன் மகள் வேலை அதிகம் - எழுத வ்ச்சிடுவோம்

cheena (சீனா) said...

அன்பின் வெண்பூ

கருத்துக்கு நன்றி வெண்பூ - பாராட்டுகள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன

cheena (சீனா) said...

அன்பின் புபட்டியன்

வருகைக்கு நன்றி - இப்பொழுது அயலகத்தில் குடும்பம் ந்டத்துகிறார்

பிளாக் வைத்திருக்கிறார்

கண்மணி/kanmani said...

அருமையான கதை.புதுமையான நடை.
சார் எழுத்துக்களை சாய்வு நிலையிலிருந்து [italic] மாற்றியிருக்கலாம்.உறுத்தலாக உள்ளது

சிநேகிதன் அக்பர் said...

கதை அருமை சீனா சார்.

எனது பாராட்டுக்களும்.

priyamudanprabu said...

அருமையா இருக்கு
சொல்லவந்த விடயமும் சொல்லிய விதமும்

//
22.11.1992
///

ஓ அப்பவேவா??
அது சரி

priyamudanprabu said...

பேசாம இருப்பது போல பெரிய கொடுமை வேறில்லை!
ஆமாம்

cheena (சீனா) said...

கண்மணி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - சாய்வு நிலையில் இருந்து மாற்றுகிறேன் - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் அக்பர் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் பிரபு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு - நல்வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன்

வாழ்த்துகள்.

Anbu said...

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

அருமையான கதை சார்..ரொம்ப நல்லா இருக்கு

duraian said...

உள்ளத்தின் முதிர்ச்சி எழுத்தில் தெரிகிறது .

வாழ்த்துகள் ஆசிரியருக்கு

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜமால்

cheena (சீனா) said...

அன்பின் அன்பு - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் துரை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை

நல்வாழ்த்துகள் துரை

ஜோதிஜி said...

குட்டி 16 அடி. மாற்றம் இல்லை. நல்வாழ்த்துகள்.....ம்ம்ம். (உங்களிடமே கடன் வாங்கியது)

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

மிகவும் நேர்த்தியான எழுத்து நடை அருமை !

cheena (சீனா) said...

அன்பின் ஆர்டிஎக்ஸ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் சங்கர்

பிரபாகர் said...

மனித உணர்வின் நிகழ்வுகளை மிக அழகாய் எழுதியிருக்கிறார்கள். புலிக்கு பிறந்தது...

அருமை அய்யா!

அவர்களுக்கும், பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

பிரபாகர்.

நானானி said...

கனத்த சோகத்தை சுமந்து கொண்டு ஆரம்பித்த உரையாடல், கனமும் சோகமும் இழந்து இறகு போல் இயல்பாக தவழ்ந்து தரையிறங்கியது.

அருமையான கதை சீனா!
மகளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபாகர்

நல்வாழ்த்துகள் பிரபாகர்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் நானானி - இது செல்ல மகளின் முதல் கதை - சிறந்த கதை - குடும்பத்தில் அனைவரும் இரசித்த கதை - அவரவர்கள் மனதில் ஆயிரம் மாற்றங்கள் செய்த கதை - எதிர்பாரா இடத்தில் இருந்து வந்த கதை - செய்தி

ஆம் நானானி

பாச மலர் / Paasa Malar said...

நிறைய நேரம் வாழ்க்கையில் பேசாமல்தான் இப்படியாகி விடுகிறது..கதை அருமை..

cheena (சீனா) said...

அன்பின் பாசமலர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர்

நல்வாழ்த்துகள் மலர்

நட்புடன் சீனா

கொல்லான் said...

அருமை. அருமை.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கொல்லான்

Thenammai Lakshmanan said...

மிக அருமையான கதை . வாழ்த்துகள் பிரியா.

முன்பே படித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது.