ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 22 October 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

அருமை நண்பர் சதங்கா இவ்வருடம் தீபாவளியினை முன்னிட்டு ஒரு சிறப்பு இடுகை இட்டு அதனைத் தொடர் இடுகையாகத் தொடர பலரை அழைத்திருக்கிறார். அத்தொடரில் என்னையும் அருமைச் சகோதரி நானானி அவர்கள் அழைத்திருக்கிறார். எழுத் வேண்டுமாம். இப்படி யாராவது அழைத்தால் தான் எழுதுவது என்பது வழக்கமாகி விட்டது. என்ன செய்வது ....


தொடரில் பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன

அவற்றிற்கு மனந்திறந்து பதிலளிக்க வேண்டுமாம் - பார்ப்போம் எப்படி மனம் திறக்கிறதென்று.

அதற்கு முன்னால் விதிமுறைகள் :

  1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

  2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

  3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

  4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

  5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.

சரி சரி கேள்வி பதிலுக்கு வருவோம்

பொதுவாக நானானி அளித்த பதில்கள் பெரும்பாலும் அப்படியே எனக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லிட்டு முடிச்சிடலாமா ? பரவால்ல - கொஞ்சம் எழுதுவோம்.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
    என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பா .... ஆகா ஆகா - தம்பட்டம் அடிக்குமளவிற்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை. பொறியியல் பயின்றவன் - வங்கியிலே பணி புரிபவன் -தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிப்பவன். தமிழ் கற்றவன். அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை. தமிழ் கற்றவன் அவ்வளவுதான்.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

அப்படி ஒன்றும் நடந்ததாக நினைவில் இல்லை. சிறுவயதுத் தீபாவளி - ஒரு இடுகை இட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு தீபாவளீயின் போது . மலரும் தீபத் திருநாள் நினைவுகளாக. நேரமிருப்பின் சென்று பார்த்து மகிழுங்களேன்.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

இனிய 2009 தீபாவளிக்கு எங்கும் செல்ல வில்லை. மதுரை
மாநகரத்திலேயே தான் இருந்தோம்.
Justify Full
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை. வழக்கம் போல் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, கங்காஸ்நானம் ஆச்சா - கேள்வி கேட்டு - கேட்டவர்களுக்குப் பதில் கூறி - கோவிலுக்குச் சென்று - வந்து நல்லா சாப்பிட்டு - தொலைக்காட்சி பார்த்து - இணையத்தில் பொழுது போக்கி ..........

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தைப்பதெல்லாம் என் பெற்றோர் காலத்தில் - படித்த காலத்தில் - பணியில் சேரும் முன்னர் - இருந்த பழக்கம். இப்பொழுதெல்லாம் ஆயத்த ஆடையகம் தான். தீபாவளிக்கென்று புத்தாடை வாங்குவது குறைந்து விட்டது. மனதிற்குத் தோன்றிய பொழுதெல்லாம் வாங்குவது வழக்கமாகி விட்டது. எப்பொழுதும் வீட்டில் சில புத்தாடைகள் இருக்கும். உள்ளாடைகளும் பிள்ளையார் துண்டும் சனீஸ்வரர் துண்டும் புதியதாக வாங்குவோம். குறிப்பிட்ட கடை என்று ஒரு கொள்கையும் கிடையாது.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

செய்வது வாங்குவதெல்லாம் என் வேலையல்ல. அதற்கென்றே வீட்டில் ஒரு துணைவி வைத்திருக்கிறேனே. அவர்கள் செய்வதைச் சாப்பிடுவேன். அவ்வளவுதான். என்ன சாப்பிட்டேன் - தெரில - கேக்கணும். பொதுவா ரெண்டே பேர் தான் இருக்கறதாலே அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. வீட்டிற்கு நெறெய பலகாரங்கள் வரும் - செல்லும்.

வந்த பலகாரங்கள் : தேன்குழல் - மாஉருண்டை - அதிரசம் - ரிப்பன் பகோடா - குலோப் ஜாமூன் - சீப்புச் சீடை - உலர்ந்த பழங்கள் - அல்வா - லட்டு - சோன் பப்டி - இன்னும் பலப்பல இனிப்புகள். இவை அனைத்தும் கண்ணால் பார்த்து விட்டு சாஸ்திரத்துக்கு ஒன்று இரண்டு சாப்பிட்டு விட்டு மீதம் பலருக்கும் சென்று விடும்.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

அலைபேசி தொலைபேசி மின்மடல் இணைய வாழ்த்து அட்டைகள் என நவீன முறைகள்

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

இரண்டும் இல்லை. கணினியில் மூழ்கி விட்டேன்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கோ / நிறுவனங்களுக்கோ உதவி செய்ய்யும் வழக்கம் இல்லை. ஆண்டு முழுவதும் - தேவைப்படுபவர்கள் அணுகும் போது - நிறுவனங்களும் சரி தனி நபர்களும் சரி - இறைவனின் கருணை இருக்கும் வரை உதவி செய்கிறோம் - செய்வோம்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

இதுதான் கடினமான கேள்வி - யாரை அழைப்பது - யாரை விடுவது - கடினமான செயல். இருப்பினும் மதுரைக்காரர்களை அழைத்து விடுகிறேன்.

01 : கார்த்திகைப் பாண்டியன் - http://ponniyinselvan-mkp.blogspot.com
02 : ஸ்ரீ - http://sridharrangaraj.blogspot.com
03 : பாலகுமார் - http://www.solaiazhagupuram.blogspot.com
04 : தேனி சுந்தர் -http://thenitamil.blogspot.com

அப்பாடா - ஒரு வழியா எழுதி முடிச்சாச்சு - மக்களே படிங்கப்பா

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

42 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

லதானந்த் said...

உங்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடின மாதிரி இருந்தது. வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் லதானந்த்

கொண்டாடிட்டாப் போச்சு

நல்வாழ்த்துகள்

பாலகுமார் said...

அழைப்பிற்கு நன்றி, ஐயா....
நேரம் கிடைக்கும் பொழுது எழுத முயற்சிக்கிறேன்.

வால்பையன் said...

உங்களுக்கு தான் இந்த வருட தீபாவளியே!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க ஐயா.. தொடர் இடுகைக்கு அழைத்ததற்கு நன்றி.. கூடிய சீக்கிரம் எழுதுறேன்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தொடர் பதிவா? சரி,தொடர்கிறேன். இதுதான் என்னுடைய முதல் தொடர் பதிவு.

பீர் | Peer said...

இனி உங்களை அடிக்கடி தொடர் எழுத அழைக்க வேண்டும்.

cheena (சீனா) said...

அன்பின் பாலகுமார்

மெதுவாக நேரம் கிடைக்கும் போது எழுதுக - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் வால்

நமக்கு அனைவருக்கும் தான் தீபாவளி

நல்வாழ்த்துகள் வாலு

cheena (சீனா) said...

அன்பின் காபா

விரைவினில் எழுதுக - காபா

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ

நல்வாழ்த்துகள்

எழுதுக - புதுமையாக தொடர் எழுதுக

cheena (சீனா) said...

அன்பின் பீர் - விருப்பத்திற்கு நன்றி பீர்

துளசி கோபால் said...

இப்படி உண்மையைப்போட்டு உடைக்கலாமா?

பலகாரத்தைச் சொன்னேன்:-)))))


எளிமை & அருமையான இடுகை.

வாழ்த்து(க்)கள்.

நானானி said...

இனிமேல் தொடர் பதிவுகளுக்கு சீனாவை முதலாக அழைத்து விடலாம் போல. நமக்கு நல்ல பதிவு கிடைக்குமே! அவருக்கும் எழுத்து மறக்காமலிருக்கும்.
அன்பு சீனா, ‘உன் கதைதான் என் கதையும் என் கதைதான் உன் கதையும்’னு நிங்க சொன்னது சரிதான்!!!

செல்விக்கும் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என் அன்பான
தீபாவளி வாழ்த்துக்கள்!!!!

cheena (சீனா) said...

அன்பின் துளசி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துளசி

cheena (சீனா) said...

அன்பின் நானானி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நானானி - முதியவர்கள் தனியாக வீட்டில் வசிப்பது என்பது ஒரு வகை நரகந்தானே !! இன்னும் ஓய்வு பெறவில்லை - பார்ப்போம்

KARTHIK said...

// தேன்குழல் - மாஉருண்டை - அதிரசம் - ரிப்பன் பகோடா - குலோப் ஜாமூன் - சீப்புச் சீடை - உலர்ந்த பழங்கள் - அல்வா - லட்டு - சோன் பப்டி - இன்னும் பலப்பல இனிப்புகள். இவை அனைத்தும் கண்ணால் பார்த்து விட்டு சாஸ்திரத்துக்கு ஒன்று இரண்டு சாப்பிட்டு விட்டு மீதம் பலருக்கும் சென்று விடும்.//

மாப்பி இதுல எதுனா மிச்சம் மீதி இருந்தா எடுத்துவைங்க இதுல பல ஐட்டம் நான் கேள்விப்படாதது.
நாங்க ஊருக்கு வரும்போது ஒரு கை பாக்கனும்
என்ன சொல்லுரீங்க மாப்பி

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

உனக்கில்லாததா மச்சி - கவலையே படாதே - மதுரைக்கு வா - அனைத்தும் தருவோம்ல - நல்வாழ்த்துகள் மச்சி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்தி

*இயற்கை ராஜி* said...

நல்ல இடுகை. தீபாவளி வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

/இரண்டும் இல்லை. கணினியில் மூழ்கி விட்டேன். /

நீங்களூமா?:-)

cheena (சீனா) said...

அன்பின் இயறகை மகளே

கணினியில் மூழ்குவது பிடித்த ஒன்று

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

Anbu said...

நல்லா சொல்லி இருக்கீங்க சார்..

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு

நல்வாழ்த்துகள்

Unknown said...

நீங்க அறிமுகப் படுத்தின இந்த தொடருல நானும் பாலாஜி மூலமாக.........

சதங்கா (Sathanga) said...

கொஞ்சம் லேட்டா வந்திட்டேன் போல இருக்கே !!! அடடா தீபாவளிப் பலகாரங்கள் போல, பதில்களிலும் தித்திப்பு, அதில் என் மனம் லயிப்பு, அடைந்தேன் பூரிப்பு .... :)))

cheena (சீனா) said...

வருகைக்குக் கருத்துக்கும் நன்றி சதங்கா

பாலகுமார் said...

என் பதிவு:
http://solaiazhagupuram.blogspot.com/2009/11/blog-post.html

cheena (சீனா) said...

அன்பின் பாலகுமார்

பதிவிற்கு நன்றி - வந்தவர் கருத்துச் சொல்லி இருக்கலாமே

suvaiyaana suvai said...

கலக்கல்!!!

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ருதி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

Thenammai Lakshmanan said...

நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்

உங்கள் தீபாவளி பற்றிய பதிவு அருமை

ஒரே நேரத்தில் 4 வேறு பட்ட பதிவுகள் நடத்துகிறீர்கள் பாராட்டுக்கள் சீனா ஸார்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனம்மை - நல்வாழ்த்துகள்

Thenammai Lakshmanan said...

enna sir appuram ondrumee ezuthalaiya

romba busy aa

Thenammai Lakshmanan said...

unga comments ikku nandri sir

sakotharar thirumanam nalla padiya mudinchutha sir

Chitra said...

பொங்கல் வரை தீபாவளி தானே............ சூப்பர்!

cheena (சீனா) said...

வருகைக்குக்ம் கருத்துக்கும் நன்றி சித்ரா

பத்மா said...

nice blog..
eppidi ithanai nanbargal?
keep it up
padma

Anonymous said...

நன்றி.....

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இக்பால் மற்றும் சித்ரா

நல்வாழ்த்துகள்

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல பதிலும் நல்ல பதிவும்
புது வருட வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிகே
புத்தாண்டு நல்வாழ்த்துகள்