ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday, 22 January 2013

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா 

அன்பின் நண்பர்களே 


வருகிற 27 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்,பிரபல எழுத்தாளர்கள்வலைபதிவர்கள்தொழில் அதிபர்கள்,சுற்றுப்புறச் சூழல் சார்ந்து செயல்படும் சமூக அக்கறை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் டாலர் நகரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் தங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இந்த நூல் ஸ்விஸ் ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4 தமிழ்மீடியா குழுமத்தின் ஒரு அங்கமான 4 தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) மூலம் வெளிவருகின்றது.

திருப்பூரில் உள்ள தமிழ்வழிக்கல்வியை சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமளிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ் இணையம்திரட்டிகள் பற்றிய முழுமையான விபரங்கள்வலைப்பதிவுகளின் வளர்ச்சிமாற்று ஊடகம் குறித்த எண்ணங்கள்திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை வலைபதிவுகளைப் பற்றிய அறிமுகத்தோடுஅவர்களின் தளம் குறித்த விபரங்களை விழா சிறப்பு மலராக வெளிவர உள்ளது.

அருகில் உள்ள கோவை மற்றும் இதனைச் சார்ந்த மற்ற பகுதிகளின் நண்பர்களின் வேண்டுகோள்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருப்பூரில் உள்ள பிரபல தொழிலதிபர் சமூக சேவகர், அமெரிக்கா பெட்னா சங்கத்தில் இருக்கும் கேபிகே செல்வா அவர்களின் அறக்கட்டளை மூலம் இந்த விழா நடத்தப்படுகின்றது.இவர் இங்குள்ள பல்வேறு சங்கத்தின் பொறுப்பாளர். கல்விக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டு வருபவர்.

விழாவுக்காக தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் தமிழ்ச்செடிசேர்தளம்தொழிற்களம்கனவு இதழ் பத்திரிக்கை போன்றவர்கள் மூலம் இந்த விழா நடக்க இருக்கின்றது. இந்த விழாவில் வேறு சில நிறுவனங்களும் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.

விழாவிற்கான அழைப்பு இணைக்கப்பட்டுள்ள்து.

அனைத்து நண்பர்களையும் விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். 







நண்பர்களே !  

இந்த விழாவிற்கு வருகை தர விரும்புவர்கள் நிகழ்காலத்தில் சிவா அவர்களை தொடர்பு கொள்ளவும். அவரின் அலைபேசி எண் : 97900 36233

திருப்பூரில் சந்திப்போம் நண்பர்களே ! 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா

Wednesday, 12 December 2012

டெங்கு ஒழிப்பு - விழிப்புணர்வுக் கூட்டம் - தெருமுனைக் கூட்டம்

அன்பின் நண்பர்களே !

மதுரை மாநகரில் சந்தைப் பேட்டையில் உள்ள டாக்டர் T.திருஞானம் துவக்கப் பள்ளியைச் சார்ந்த மழலைச் செல்வங்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சரவணன் அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்  தெரு முனைக் கூட்டமாக தினந்தோறும் மாலையில் நடத்துகின்றனர். அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மகிழ்ந்தோம். அக்கூட்டங்களைப் பற்றிய ஒரு பார்வை.



இன்னும் நம் நாட்டில் தெருமுனைக் கூட்டங்கள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்திகள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. அதில் இப்பொழுது நம்மை எல்லாம் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது டெங்குக் கொசு. அதை நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை. என்ன செய்தாலும் அது நம்மைப் பாதித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி இந்தப் பாதிப்பை பாலம் போட்டுத் தாண்டலாம் என பள்ளிப் பருவத்து பச்சிளம் குழந்தைகள் பால் மனம் மாறா மொழிகளில் வடித்தெடுப்பது நம் நெஞ்சத்தை எல்லாம் தொட்டுச் செல்கிறது.




ஒருஏழைக்குத் தான் தெரியும் அந்த வறுமையின் வலி. அதைப் போல் வளர்கின்ற பிஞ்சுகள் வானத்தை வில்லாய் வளைக்க வட்டமிட்டு, கை கொட்டி, கால் தட்டி, கண்கள் சுழற்றி, தம் சின்னஞ்சிறு பாதங்கள் மண்ணிலும் புழுதியிலும் பதித்து, புதிய பாடமெழுதப் பாடுகின்ற பாடல்கள் நம் பாட்டை எல்லாம் போக்கி விடும் !.

மெலிந்த உருவமும் துள்ளுகின்ற கண்களும் துடிக்கின்ற பார்வையுமாய் பாட்டெழுதிப் பாடமாய்ப் படிக்கின்ற போது சந்தத் தமிழும் துள்ளி விளையாடுகின்றது.

குப்பையைக் கொட்டாதே ! நீரினைத் தேக்காதே ! மக்கும் குப்பையைத் தனியே போட்டு வை ! மக்காக் குப்பையை ஒதுக்கி வை ! சுற்றுப் புறத்தைத் தூயமையாய் வை ! மறந்தும் மண் வளத்தைக் கெடுக்கும் குப்பைகளைக் கொட்டித் திரியாதே ! நீர் தேக்கும் தொட்டிகளை மூடி வை ! கழுவி வை ! காலத்தே அவற்றைத் தூய்மை செய் !

இவ்வாறு சின்ன்ஞ் சிறு செல்வங்கள் தெருவெல்லாம் பாடி முழக்கமிடும் அவர்களின் முனைவை என்னென்று சொல்வது ?!. எண்ணத்தால் எப்படி வடிப்பது ?!. எங்கெல்லாம் பரப்புவது ?!. ஓடி விளையாடும் பாப்பாக்கள் ஓடி ஓடி உண்மையை உரைக்கின்றனர்.! உங்களைக் காக்க, டெங்குவை ஒழிக்க கொசுக்களை ஒழிப்போம் ! சுற்றுச் சூழல் காப்போம் ! என்று சூளுரைக்கின்றனர்.

ஏழெட்டு வயதுச் சிறுவர் சிறுமியர் ஏற்றமுடன் ஆடிப் பாடி அனைவரையும் தன் வயப்படுத்துகின்றனர்.! தெருக்களில் செல்வோர் சிறிது நேரத்தில் கூடி விடுகின்றனர்.! குழந்தைகளீன் குரல் ஒசையில் ஏதோ உள்ளதென்று ஏக்கத்துடன் நின்று உன்னிப்பாய்க் கவனித்துச் செல்கின்றனர். நினைத்ததை நடத்தியே முடிக்கும் இளம் சிட்டுக்கள் டெங்கு இல்லா சுற்றுப்புறத்தை படைத்துக் காட்டுகின்றனர்.! நாமும் நயமாய்ப் பயமாய் சொல்லிப் பார்த்தால் நாடே நோயின்றி வளம் பெறுமென்று எண்ணுகின்றனர். இயங்கட்டும் இவர்களின் எண்ணங்கள். எல்லாரும் டெங்கின்றி வாழட்டும் வளமுடன் !

செல்வி ஷங்கர் ( திருமதி சீனா ) 

Thursday, 9 August 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

அன்பின் நண்பர்களே

சென்னை வாழ் பதிவர்கள் ஒன்று கூடி - சிந்தித்து - பல ஆலோசனக் கூட்டங்கள் நடத்தி - வருகிற 26ம் நாள் - ஞாயிறன்று - சென்னையில் திரு விழா கொண்டாடுவதெனத் தீர்மானித்து - அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

அருமை நண்பர் மது மதி அழைப்பிதழகளை அனைவருக்கும் அனுப்பி வருகிறார்.


அழைப்பு கிடைத்த நண்பர்களும் மற்ற நண்பர்களும் திரு விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள் :


சென்னையில் சந்திப்போம் நண்பர்களே

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா