ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 7 January 2009

சமையல் குறிப்பு : அவல் கிண்டுவது எப்படி

சகோதரி நானானி அடுத்து என்ன கிண்டி, கிளறப் போறீங்கன்னு கேட்டிருந்தாங்க என்னோட மா உருண்டைப் பதிவுலே - அதன் தொடர்ச்சியா அவல் கிண்டப் போறேன்.

தேவையான பொருட்கள் :

அவல் : 200 கிராம்
வெல்லம் : 100 கிராம்
ஏலக்காய் : 3 அல்லது 4
முந்திரிப்பருப்பு : 5 அல்லது 6
திராட்சை : 7 அல்லது 8
நெய் : 2 ஸ்பூன்
தேங்காய் : அரை மூடி ( துருவி வச்சிக்கணூம்)


(அப்புறம் கேஸ், கேஸ் அடுப்பு, வாணலி, கரண்டி, மூடி கை துடைக்கத்துண்டு இதெல்லாம் எடுத்துக் கொடுக்க ஒரு ஆள் ( பொன்னா இருந்தா நல்லது) - இவ்வளவும் இருந்தா தான் அவல் நல்லா கிண்ட முடியும்)

முதலில் அவலை லேசா ஒரு கழுவு கழுவி ஒரு டம்ளர் தண்ணீலே ஊற வைக்கணும் ( 10 நிமிடம்). அப்புறம் எரியற அடுப்பிலே சட்டி வச்சி அதுலே முந்திரி, திராட்சையை நெய்யிலே நல்லா வறுத்துக்கணும். ரெண்டு டம்ளர் தன்ணியை அது மேலேயே ஊத்தி, வெல்லத்த தட்டி அதுல போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். நல்லா கொதிச்சதும் ஊற வச்ச அவலை அதுலே கொட்டி நன்றாகக் கிண்ட வேண்டும் - கிளற வேண்டும். அடிப்ப்டிக்க விட்டு விடக் கூடாது. நல்ல வாசனை வரும் போது கீழே இறக்கி வைத்து துருவிய தேங்காயை அதில் தூவி நன்றாகக் கிளறி ரெண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

அவ்ளோ தான் - இப்போ அவல் நல்லா சாப்பிடலாம் - ரெடி - உடம்புக்கும் நல்லது - ஆமா சொல்லிப்புட்டேன்.

நட்புடன் ...... சீனா

-----------------------

9 comments:

cheena (சீனா) said...

இதுலே அவல் சிவப்பு அவலா இருக்கணும் - அப்பத்தான் சாப்பிட நல்லா இருக்கும்

அப்புறம் யாரெல்லாம் சாப்பிடப் போறிங்க - நல்லாருக்கு - பரவா இல்ல - நல்லா இல்லே - சொல்லப்போறிங்க ?

நானானி said...

கேஸ், கேஸ் அடுப்பு. சரி....பத்தவைக்க தீப்பெட்டி? ஓ! ஆட்டோஇக்னீஷனா? அப்ப சரி.
//இதெல்லாம் எடுத்துக்குடுக்க ஓர் ஆள்//
அதுக்கு அந்த ஆளே அவலைக் கிண்டிரலாமே?
வெல்லத்தை வடிகட்டி கசடு எடுக்கணும்னு ஷொல்லலையா?
எப்படியோ கிண்டிய அவல் நல்லாத்தானிருக்கு!!!!!

கோவி.கண்ணன் said...

//நல்ல வாசனை வரும் போது கீழே இறக்கி வைத்து துருவிய தேங்காயை அதில் தூவி நன்றாகக் கிளறி ரெண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.//

ஆறிப்போனால் இறுகிடுமா ?

கார்திகைக்கு எங்க வீட்டில் (பெற்றோர்கள்) அவல் கிண்டுவாங்க, ஒருவாரம் வைத்து சாப்பிடலாம், மொறுமொறுப்பாக இருக்கும்.

cheena (சீனா) said...

அன்பின் நானானி

சின்னச் சின்ன விஷயங்கள் சொல்லணுமா - தெரியும்னு வுட்டுடறதா தெரில - அலுவலகத்திலே கூட மைனூட் டீடைல்ஸ் சொல்றதுல்ல - ஆன நான் நினைக்கற மாதிரியே உதவியாளர் நினைக்கறது இல்ல - சில சமயம் தப்பு நடந்துடுது.

அவல் தங்க்ஸ் தான் கிண்டுவாங்க - நான் அடுப்படிக்கே போறதுல்ல - ஆனாலும் தெரியும்

cheena (சீனா) said...

நண்ப கோவி,

ஆறினால் இறுகாது - ஒரு வாரத்துக்கு இருக்காது - பொங்கல் கிண்டற மாதிரித்தான் - அவல் அன்னிக்கே சாப்பிடணூம்

சதங்கா (Sathanga) said...

////இதெல்லாம் எடுத்துக்குடுக்க ஓர் ஆள்//
அதுக்கு அந்த ஆளே அவலைக் கிண்டிரலாமே?//

ஹாஹா. ரிப்பீட்டேய்ய்.

அடுத்த ஒரு பொறுப்பை எங்களுக்கு தந்துவிட்டீர்கள். நல்லா இருங்க :)))))

cheena (சீனா) said...

sathangkaa - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா - சும்மா ஆப்பீஸர் வேலை மட்டும் பாக்காம - அப்பப்ப வூட்ல கிச்ச்னலே ஹெல்ப் பண்ணூங்கப்பா

T.V.ராதாகிருஷ்ணன் said...

///(பொன்னா இருந்தா நல்லது)//

:-))))))

cheena (சீனா) said...

என்னது ராதாகிருஷ்னண், ராதா கூட இல்லையா ? இன்னொரு பொண்னு வேணுமா