ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 27 May 2010

அப்பாவி முரு - திருமணம்


அருமை நண்பன் சிங்கையில் வசிக்கும் அப்பாவி முருவின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்தி வந்தேன். முதலில் முருகேசனைப் பார்த்தது அவனது புரொஃபைல் படத்தில் - பாவம் போல் அப்பாவியாக இருந்தான். அடுத்து மதுரை பதிவர் சந்திப்பில் ஒரிரு நிமிடங்கள் - ஒரிரு சொல் பரிமாற்றம் - அவ்வளவுதான் - மூன்றாவதாக எங்களின் இனிய இல்லத்திற்கு முரு வந்த போது நீண்ட சந்திப்பு - இப்பொழுது திருமணத்தில் அடுத்த சந்திப்பு - ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமான தோற்றம். தொடர்ச்சியாக சந்திக்காததால் புதுப் புது தோற்றமாகத் தோன்றும்.

சரி சரி - பில்டப் போதும் - விஷயத்துகு வரேன்

சின்னாளப்பட்டியில் நேற்று முருவுக்கு திருமணம் - காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து பேருந்தில் புறப்படுவதாக திட்டம் - பேருந்து நிலையத்தில் சென்று காத்திருந்து 08:30க்கு வந்த கா.பா வுடன் சின்னாளப்பட்டி சென்றோம் - அங்கு ரம்யா, கலை, சுரேஷ் ஆகியோர் முதல் நாளே வந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனர். திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு வந்தோம். இனிய அனுபவம்.

மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா