அன்பு நண்பர்களே
நேற்றைய தினம் - 24-6-2009 புதன் கிழமை மதுரையில் அருமை நண்பர் - சக பதிவர் கார்த்திகைப் பாண்டியனின் தங்கை திருமணம் சிறப்பாக நடந்தது. நண்பரோ அனைத்து நண்பர்களையும் நேரிலும் தொலைபேசியிலும் மண விழாக் காண அன்புடன் அழைத்திருந்தார்.
திருமண மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம். அதில் சிறு தீவாக நமது பதிவர் வட்டம். நானும் எனது துணைவியும் ( அவர்களும் பதிவர் தான்) சென்றிருந்தோம். மண்டப வாசலிலேயே காரைக்குடியில் இருந்து வந்திருந்த மருத்துவர் தேவகுமாரும் சிவகாசியிலிருந்து வந்திருந்த அன்புமதியும் மதுரையில் இருக்கும் தேனி சுந்தரும் வரவேற்றனர்.
தேவன்மயம் எங்களை அன்புடன் அழைத்துச் சென்று காலை உணவு ஏற்பாடு செய்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்திலேயே நின்று அவரது வீட்டுத் திருமணம் போல் உபசரித்தார். நன்றி நல்ல உள்ளத்தினிற்கு.
திருப்பூரிலிருந்து ஆதவனும் சொல்லரசனும், மதுரையில் இருந்து ஸ்ரீதரும் தருமியும் பாலகுமாரும் ஜாலி ஜம்பரும் வந்திருந்தனர். களை கட்டியது சந்திப்பு.
மண விழா முடிந்ததும், என்னுடைய அலுவலக அவசர அலுவல் காரணமாக நாங்களூம் விடை பெற்றோம். நண்பர்களும் மாலை வரை இருந்து நீண்டதொரு சந்திப்பாக மாற்றி விடை பெற்றதாக அறிந்தேன்.
புகைப்படங்கள் - வீடியோ எல்லாம் மற்ற பதிவர்களீன் இடுகைகலில் பார்க்கலாம். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்த கா.பாவினிற்கு நன்றி
மண விழாவில் பதிவர் சந்திப்பு
Posted by cheena (சீனா) at 24 comments Links to this post
Labels: பதிவர்வட்டம்
மாட்டிக்கிட்டேனே
என்ன செய்யறது ..... பதில் சொல்வோமே
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் தாய்வழித் தாத்தாவின் பெயர் எனக்கு என் அம்மா ஆசையாக வைத்தார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என் தாய் இறந்த போது -
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ஆமாம்.. பிடிக்கும், ஆனா நான் எழுதற்தே இல்லையே - பேனா திறப்பதே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடத்தான்
4).பிடித்த மதிய உணவு என்ன?
வெஜிடேரியன் .. அதனால் தக்காளி சூப் - உருளைக் கிழங்கு அவியல் - பூசனிக்காய் சாம்பார் - தயிர் - சாதம்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஆமா யாராச்சும் பழக ஆரம்பிச்சா உடனே நட்பு தான்
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
தோற்றம் - கண்கள்
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் திறமை - என் முன் கோபம்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அதிக அன்பு- என்னைச் சோம்பேறியாக்கும் வகையில் என் வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்வது
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பெற்ற மக்கள் அயலகத்தில் - அவர்கள் இல்லாதது வருத்தத்தினை அளிக்கிறது
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
ஊதா - நீலம்
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணினியின் திரை பார்க்கிறேன் - ஒன்றும் கேட்கவில்லை
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்,
14.பிடித்த மணம்?
மல்லிகைப்பூ மற்றும் மலர்களின் மணம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அண்ணன் தருமி
நானானி
துளசி
இவர்கள் என் சம வயதினர்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
சின்னப்பையன் ரங்காவின் பதிவுகளில் - அவனது அப்பாவினைப் பற்றிய பதிவு எனக்குப் பிடிக்கும். நல்ல கவிதை
17. பிடித்த விளையாட்டு?
செஸ் - ரம்மி - ஃப்ரீசெல்
18.கண்ணாடி அணிபவரா?
ஆம்
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவை - த்ரில்லர் - புராணப்படங்கள்
20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க, - சூபர் படம்
21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்
ஏனெனில் அந்த மாதங்களில் நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்பொழுதா - இரா.முருகனின் சிறுகதைத் தொகுப்பு
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மாற்றுவதே இல்லை
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு
பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அயலகம் - இலண்டன்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ஓ.. இருக்கே!!
கணினியில் மென்பொருள் - கோபால் நிரலி - கை வந்த கலை
ஸ்கோயூனிக்ஸ் - எம் எப் கோபால் -
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என் செயல்களில் குற்றம் கண்டு பிடிப்பது
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அந்தரங்கம் புனிதமானது
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம். ஆக்ரா, மதுரா
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்.... ..
நாள் பூரா தூங்குவது - எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழு ! வாழ விடு !
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
தருமி, நானானி, துளசி
Posted by cheena (சீனா) at 45 comments Links to this post
Labels: உங்கள் ரங்கா, தொடர் இடுகை
பட்டாம் பூச்சி விருது - பகுதி 2
பட்டாம்பூச்சி விருது - இதனைப் படித்து விட்டு இங்கே வரவும் :
ஆமா - இதென்ன பெரிய இடுகையா - கருத்துள்ள கதையா கவிதையா கட்டுரையா இலக்கியமா - என்ன இது சின்னப்புள்ளத்தனமா பகுதி இரண்டாமில்ல - கேக்கறதுக்கு ஆளில்லப்பா
யார்யா இது - இங்கே வந்து கத்தறது ......
சரி சரி தொலைஞ்சு போ - யாரெல்லாம் விருது வாங்கறாங்கன்னு சொல்லித் தொலை
முதல்வர் : பதிவுலகின் செல்லப் பிள்ளை - அனைவராலும் ரசிக்கப்படுபவள் - படங்களாகவே மயக்குபவள் - எல்லோரையும் கவர்ந்தவள் - நேரில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - தேவதை - நிலா
இரண்டாமவர் : அருமை அண்ணனின் - தருமியின் - மதுரை என்றாலே நினைவுக்கு வரக்கூடிய மூத்த பதிவர் தருமியின் - அருமைப் பேத்தி ஜெசிகா
மூன்றாமவர் : பப்பு - சந்தன முல்லையின் செல்ல மகள் - குறும்புக்காரி - அம்மாவினை அதிகம் தொந்தரவு செய்யாதவள் - எனக்குப் பிடித்தவள்
நல்வாழ்த்துகளுடன் கூடிய விருது.
எப்பா அறிவிச்சாச்சுப்பா
அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்வாழ்த்துகள்
இப்ப விதி முறைகள்:
இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
அதனால மூணுபேருமே என்னைப்போல தாமதிக்காமல் பட்டாம்பூச்சி போல பறந்து பறந்து விருதைக் கொடுத்துடுங்க:)
வணக்கம்.
அன்புடன் .... நட்புடன் .... சீனா
Posted by cheena (சீனா) at 20 comments Links to this post
Labels: ஜெசிக்கா, நிலா, பட்டாம்பூச்சி விருது, பப்பு

