ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 30 September 2015

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.

அன்பின் பதிவர்களே

அனைவருக்கும் வணக்கம்

புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல்விழா.  இது பற்றிய தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் பதிவிலும் ( https://mail.google.com/mail/u/0/#search/muthunilavanpdk%40gmail.com/14fd97baa86170f7)

பதிவர் திண்டுக்கல் தனபாலின் பதிவிலும் (http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html ) விளக்கமாகக் கூறப் பட்டிருக்கிறது.

ஒன்றை எடுத்துக் கூட்டி ஏற்றமுடன் செயல் படுத்துவது என்பது எல்லாருக்கும் கை வந்த கலையன்று. முத்து நிலவன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகிய இருவரும் செயல் படுத்தும் முறை சிறப்புடையது.

பதிவர்கள் இத்தளங்களுக்குச் சென்று செய்திகளை அறிந்து விழா சிறப்புற துணை செய்ய வேண்டும். தமிழை வளப் படுத்தவும், நிகழ்காலத்தினருக்கு நினைவு படுத்தவும் செய்தால் எதிர் காலைத்தில் வலைத் தமிழ் தமிழை வளர்க்கும். அத்தமிழ் வளர்க்கும் பணியை இப்பதிவர் சந்திப்பு செயலாக்கும் என்று நினைக்கிறேன்.

அனைத்துப் பதிவர்களையும்  இவ்வலைத் தளங்கள் பக்கம் வருகை தருமாறு வேண்டுகிறேன்.

திருவிழா சீரும் சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் - வளர்க தமிழுடன்.


நட்புடன் சீனா

Sunday 23 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி -003 - 20.11.2014

அன்பின் பதிவர்களே !

வலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர்கள் பற்றிய கீழ்க்கண்ட தகவல்கள் ஒரு EXCEL கோப்பில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது.

click here to download the excel file

வலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வரிசை எண், ஆசிரியப் பொறுப்பேற்ற தேதி, அவர்களீன் பெயர், அவர்களின் தளத்தின் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி, விதி முறைகள் அவர்களூக்கு அனுப்பப் பட்ட தகவல் ஆகியவை சேமிக்கப் பட்டிருக்கிறது






















Thursday 13 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி 002 - 13.11.2014

அன்பின் சக பதிவர்களே !

வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தா நதி 11.11.2006 அன்று வலைஞன் என்ற புனைப் பெயரில் தனது முதல் பதிவினை எழுதி இருக்கிறார். 22.02.2007ல் அடுத்த பதிவினை எழுதி இருக்கிறார். 26.02.2007 அன்று வலைச்சரம் துவங்கியது குறித்தும் வலைச்சர முதல் ஆசிரியராக பொன்ஸ் நியமிக்கப்
பட்டது பற்றியும் எழுதி இருக்கிறார்.

முத்துலெட்சுமி 30.04.2007 முதல் ஆசிரியப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார்.

04.05.2008 முதல் நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறேன்.
பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த நிமிடம் வரை
வலைச்சரக் குழு உறுப்பினராக சக பதிவர் தமிழ்வாசி பிரகாஷினை நியமித்திருக்கிறேன்.

வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தாநதி வலைச்சர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து சில விதி முறைகளைஏற்படுத்தினார்.

பல  பதிவர்களிடம் இருந்து, வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறி ஒரு பதிவு இட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவ்வார வலைச்சர ஆசிரியராக நியமிப்பது என்பது சரியான முறையல்ல எனவும் பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒர் பதிவரை மட்டுமே தேர்நெதெடுத்து ஒரு வாரத்திற்கு அவரை வலைச்சர ஆசிரியராக நியமிக்க வேண்டும் எனவும் விதிமுறைகளை ஏற்படுத்தினார்.

இந்த விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.

இருப்பினும் விண்ணப்பங்களைப் பெறுவது இன்னும் நிறுத்தப் பட வில்லை,

ஓரிரு நாட்களில் நிறுத்தப் படவேண்டும் என வலைச்சரக் குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

நிறுத்தி விடுவோம் என உறுதி அளிக்கிறேன்.தற்பொழுது பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒருபதிவரை  மட்டும் தேர்ந்தெடுத்து அவரை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அழைக்கும் முறையும் இருக்கின்றது. இவ்விதியை மட்டுமே கடைப்பிடிக்குமாறு வலைச்சரக் குழுவினரை அறிவுறுத்தி இருக்கிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா