தீபாவளி சிறப்புப் பதிவு 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009

அருமை நண்பர் சதங்கா இவ்வருடம் தீபாவளியினை முன்னிட்டு ஒரு சிறப்பு இடுகை இட்டு அதனைத் தொடர் இடுகையாகத் தொடர பலரை அழைத்திருக்கிறார். அத்தொடரில் என்னையும் அருமைச் சகோதரி நானானி அவர்கள் அழைத்திருக்கிறார். எழுத் வேண்டுமாம். இப்படி யாராவது அழைத்தால் தான் எழுதுவது என்பது வழக்கமாகி விட்டது. என்ன செய்வது ....


தொடரில் பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன

அவற்றிற்கு மனந்திறந்து பதிலளிக்க வேண்டுமாம் - பார்ப்போம் எப்படி மனம் திறக்கிறதென்று.

அதற்கு முன்னால் விதிமுறைகள் :

  1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

  2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

  3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

  4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

  5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.

சரி சரி கேள்வி பதிலுக்கு வருவோம்

பொதுவாக நானானி அளித்த பதில்கள் பெரும்பாலும் அப்படியே எனக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லிட்டு முடிச்சிடலாமா ? பரவால்ல - கொஞ்சம் எழுதுவோம்.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
    என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பா .... ஆகா ஆகா - தம்பட்டம் அடிக்குமளவிற்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை. பொறியியல் பயின்றவன் - வங்கியிலே பணி புரிபவன் -தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிப்பவன். தமிழ் கற்றவன். அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை. தமிழ் கற்றவன் அவ்வளவுதான்.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

அப்படி ஒன்றும் நடந்ததாக நினைவில் இல்லை. சிறுவயதுத் தீபாவளி - ஒரு இடுகை இட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு தீபாவளீயின் போது . மலரும் தீபத் திருநாள் நினைவுகளாக. நேரமிருப்பின் சென்று பார்த்து மகிழுங்களேன்.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

இனிய 2009 தீபாவளிக்கு எங்கும் செல்ல வில்லை. மதுரை
மாநகரத்திலேயே தான் இருந்தோம்.
Justify Full
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை. வழக்கம் போல் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, கங்காஸ்நானம் ஆச்சா - கேள்வி கேட்டு - கேட்டவர்களுக்குப் பதில் கூறி - கோவிலுக்குச் சென்று - வந்து நல்லா சாப்பிட்டு - தொலைக்காட்சி பார்த்து - இணையத்தில் பொழுது போக்கி ..........

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தைப்பதெல்லாம் என் பெற்றோர் காலத்தில் - படித்த காலத்தில் - பணியில் சேரும் முன்னர் - இருந்த பழக்கம். இப்பொழுதெல்லாம் ஆயத்த ஆடையகம் தான். தீபாவளிக்கென்று புத்தாடை வாங்குவது குறைந்து விட்டது. மனதிற்குத் தோன்றிய பொழுதெல்லாம் வாங்குவது வழக்கமாகி விட்டது. எப்பொழுதும் வீட்டில் சில புத்தாடைகள் இருக்கும். உள்ளாடைகளும் பிள்ளையார் துண்டும் சனீஸ்வரர் துண்டும் புதியதாக வாங்குவோம். குறிப்பிட்ட கடை என்று ஒரு கொள்கையும் கிடையாது.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

செய்வது வாங்குவதெல்லாம் என் வேலையல்ல. அதற்கென்றே வீட்டில் ஒரு துணைவி வைத்திருக்கிறேனே. அவர்கள் செய்வதைச் சாப்பிடுவேன். அவ்வளவுதான். என்ன சாப்பிட்டேன் - தெரில - கேக்கணும். பொதுவா ரெண்டே பேர் தான் இருக்கறதாலே அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. வீட்டிற்கு நெறெய பலகாரங்கள் வரும் - செல்லும்.

வந்த பலகாரங்கள் : தேன்குழல் - மாஉருண்டை - அதிரசம் - ரிப்பன் பகோடா - குலோப் ஜாமூன் - சீப்புச் சீடை - உலர்ந்த பழங்கள் - அல்வா - லட்டு - சோன் பப்டி - இன்னும் பலப்பல இனிப்புகள். இவை அனைத்தும் கண்ணால் பார்த்து விட்டு சாஸ்திரத்துக்கு ஒன்று இரண்டு சாப்பிட்டு விட்டு மீதம் பலருக்கும் சென்று விடும்.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

அலைபேசி தொலைபேசி மின்மடல் இணைய வாழ்த்து அட்டைகள் என நவீன முறைகள்

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

இரண்டும் இல்லை. கணினியில் மூழ்கி விட்டேன்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கோ / நிறுவனங்களுக்கோ உதவி செய்ய்யும் வழக்கம் இல்லை. ஆண்டு முழுவதும் - தேவைப்படுபவர்கள் அணுகும் போது - நிறுவனங்களும் சரி தனி நபர்களும் சரி - இறைவனின் கருணை இருக்கும் வரை உதவி செய்கிறோம் - செய்வோம்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

இதுதான் கடினமான கேள்வி - யாரை அழைப்பது - யாரை விடுவது - கடினமான செயல். இருப்பினும் மதுரைக்காரர்களை அழைத்து விடுகிறேன்.

01 : கார்த்திகைப் பாண்டியன் - http://ponniyinselvan-mkp.blogspot.com
02 : ஸ்ரீ - http://sridharrangaraj.blogspot.com
03 : பாலகுமார் - http://www.solaiazhagupuram.blogspot.com
04 : தேனி சுந்தர் -http://thenitamil.blogspot.com

அப்பாடா - ஒரு வழியா எழுதி முடிச்சாச்சு - மக்களே படிங்கப்பா

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

செந்தில் நாதன் - சிங்கை நாதன்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த சில நாட்களாக - எங்கு நோக்கினும் நண்பர் செந்தில் நாதனைப் பற்றிய இடுகைகள் தான் - அவரின் உடல் நிலை பற்றிய இடுகைகலும் - பண உதவி வேண்டும் இடுகைகளும் தான்.

கீழே கொடுக்கப்பட்டிருப்பது ஒரு காபி பேஸ்ட் இடுகை

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்

LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)

Address:
Siddeswaran Sethuraman
20810 Amie Ave, Apt# 10
Torrance, CA 90503

Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c

siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Western Union மூலமாக பணம் அனுப்புபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டு அனுப்பியவர் பெயரையும் Money Transfer Control Number (MTCN)யும் karunanithi.muthaiyan@credit-suisse.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சிங்கப்பூர்

ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775 (joseph.paulraj@gmail.com)
கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721


அமெரிக்கா

இளா - +1 609.977.7767
ilamurugu@gmail.com

Europe

S.குமார்
Mobile number : 0049-17622864334.
E-mail : friends.sk@gmail.com

இந்தியா

நர்சிம் - +91 9841888663

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293





சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks


Regards,
Santhi Senthil Nathan.


---------------------------------------------------------------------------------


நண்பர்களே - சற்றே சிந்தியுங்கள்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

குறளாசான் கூறியது - இடுப்பு வேட்டி நழுவும் போது தன்னிச்சையாக - எவ்விதத் தூண்டுதலுமில்லாமல் கை சென்று அதனைக் கட்டிவிடுவது போல - நாம் இப்பொழுது உடனடியாக நண்பர் செந்திலின் துயரம் துடைக்க நம்மால் இயன்ற அளவு பண உதவி செய்திட வேண்டும்.

மாற்று இதயம் பொருத்துவதற்கு ஆகும் செலவான 33 இலட்ச ரூபாயில் இது வரை 11 இலட்சம் சேர்ந்திருப்பதாக அறிகிறேன்.

நண்பர்களே ! = பல் வேறு இடுகைகள் பணம் அனுப்பும் முறையினைப் பற்றிப் பேசுகின்றன. எவ்வாறேனும் தேவையான பணத்தினைத் திரட்டும் முயற்சியில் அருமை நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிறு சிறு துளிகளாகத் திரளும் நீர் பெரு வெள்ளமாக மாறும் காலம் விரைவினில் வரும். நம்பிக்கையுடன் செயலாற்றுக நண்பர்களே !

விரைந்து பண உதவி செய்க - கேள்வி கேட்காமல் உதவி செய்க - விவாதிக்க நேரமில்லை - சிறு துளியும் வரவேற்கப்படுகின்றன.

பயனுள்ள சுட்டிகள் :

http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html

http://kvraja.blogspot.com/2009/08/collection-updates.html

http://www.narsim.in/2009/08/blog-post_13.html

http://www.narsim.in/2009/08/blog-post_17.html

http://madhavipanthal.blogspot.com/2009/08/senthilnathan.html

http://www.maraneri.com/2009/08/collection-updates.html

http://www.maraneri.com/2009/08/blog-post_15.html

http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_12.html

http://sandanamullai.blogspot.com/2009/08/blog-post_12.html

http://govikannan.blogspot.com/2009/08/blog-post_13.html

அனைவரையும் ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்











சிறந்த நண்பருக்கு விருது

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

குறளாசான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே நட்பின் இலக்கணம் வகுத்துச் சென்றிருக்கிறான்.

நட்பென்பது அழகானது. அன்புணர்ச்சி உடைய மனக்கசிவே நட்பு. இறுக்கமற்றது. நினைக்குந்தோறும் நிம்மதி தருவது. நட்புக் கொண்டால் நிலைத்து நிற்கப் பாடுபடவேண்டும். நட்பின் நினைவே மகிழ்வூட்டுவதாய் நிற்க வேண்டும். ஆராய்ந்து கொள்ளும் நட்பே உயர்வானது. உள்ளும் புறமும் தூய்மையுடைய மனமே நல்ல நட்பை உருவாக்க முடியும். தோளோடு தோள் தட்டி வாய் விட்டுச் சிரிப்பது மட்டும் நட்பல்ல. இன்னல்கள் தீர்க்க தட்டிக்கொடுத்து தலை நிமிரச் செய்வதே நட்பு.

இன்பத்தில் கூடி மகிழ்வது இயற்கை. தேனின் எறும்புகள் சொல்லிக் கொடுத்து அழைத்து வரப்படுபவை அல்ல. மனத்தின் மறுமொழிகள் வாய்ச்சொற்களாக வந்தால் நட்பு மணம் பெறும். நட்பில்லாத உலகம் அழகின்றி அன்பின்றி வாடும். முகம் மட்டும் மலர்தலின்றி அகமும் மகிழ்ந்து கண்கள் மலரும் கனிவே நட்பு. நட்பு இருக்குமிடம் நம் மனமே ! மனத்தில் நாளும் நல்ல நட்பை வளர்ப்போம்.

நட்பு - நட்பெனில் யாது : பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, புகைவண்டி நட்பு, இணைய நட்பு என பல்வேறு பட்ட நட்புகளில் முன் பின் தெரியாத - முகமறியாத நட்பெனப்படுவது இணைய நட்பாகும்.

இணையத்தில் - பதிவர்கள் -வலைஞர்கள் நட்பு என்பது மிகச்சிறந்த நட்பாகும். பதிவர்கள் இடும் இடுகையைப் படித்துப் படித்து - ரசித்து ரசித்து - மறுமொழிகள் இட்டு - அவர்களது எழுத்துகளில் மயங்கி - எழுத்தின் மூலம் நண்பர்களானவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பதிவர் சந்திப்பு - ஒரே இடத்தில் வசிக்கும் பதிவர்கள் - எளிதில் நண்பர்களாகி விடுகின்றனர்.

நட்பிற்கு இலக்கணம் படைப்பவர்கள் பதிவர்களே.

பதிவர்களிடையே சிறந்த நண்பர்களைத் தேடிப்பிடித்து விருது வழங்கும் செயல் தொடர்ந்து வருகிறது. அருமை நண்பர் - காரைக்குடி மருத்துவர் தேவன் மாயம் ( புனைப்பெயர் தான்) ஒரு இடுகை இட்டு இவ்விருதினை எனக்கு வழங்கி உள்ளார். விருதின் விதி முறைகள் படி நான் எனக்குப் பிடித்த சிறந்த நண்பர்களுக்கு இத்தொடர் விருதினை வழங்க வேண்டும்.

விதி முறைகள் :

1.
நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம். 2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம். 3. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல் - ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும். 4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்படக் கூடாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.


நான் விருது வழங்கத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் :

01 : தருமி - இவர் தான் நான் சந்தித்த முதல் வலைஞர் - நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில், மின்னஞ்சல்கள் மற்றும் மறுமொழிகள் மூலமாக நான் அதிகம் உரையாடியது இவரிடம் தான்.என்னை விட வயதில் மூத்தவர். ஓய்வு பெற்ற பேராசிரியர்.

02 : மீறான் அன்வர் :
நான் சந்தித்த இரண்டாவது பதிவர். பாசக்காரப் பயபுள்ள - சம்பன்குளத்தான் - கப்பலூரில் பணி புரிகிறான்.

03 : சிவசுப்பிரமணியன் : மூன்றாவது பதிவர் - மணப்பாறையைச் சேர்ந்தவர் - பெங்களூருவில் பணி புரிகிறார் - மிகச்சிறந்த நண்பர்.

04 : மங்களூர் சிவா : பழகுவதற்கு இனியவர் - புதிதாய்த் திருமணம் ஆனவர் - புது வரவினை எதிர்பார்ப்பவர்.

05 : நந்து - நிலா : ஈரோட்டினைச் சார்ந்த தொழிலதிபர் - நட்பு மற்றும் அன்பின் இலக்கணம்.

06 : வால் பையன் : அறிமுகம் தேவை இல்லாத அருமை நண்பர்

07 : தமிழ் பிரியன் : அருமை நண்பர் - அமீரகத்தில் பணி புரிகிறார் - வத்தலக்குண்டினைச் சார்ந்தவர்

08 : கோவி கண்ணன் : சிங்கையில் பணி புரியும் நண்பர் - ஆத்திகரா அல்லது நாத்திகரா - விவாதத்திற்குரிய கேள்வி

09 : துளசி கோபால் : மூத்த பதிவர் - அனைவரும் அறிந்த பதிவர் - உலகம் சுற்றும் பதிவர்

10 : நானானி : நல்ல குணமுடைய அமைதியான பதிவர்.

11 : சதங்கா : அமெரிக்க நாட்டில் பணி புரிகிறார் - சிறந்த நண்பர்

12 : பாசமலர் : மதுரையைச் சார்ந்தவர் - ரியாத்தில் வசிக்கிறார் - ஆங்கிலப் பேராசிரியை - தமிழில் கலக்குகிறார்

இரண்டாண்டு காலமாக பதிவராக இருக்கிறபடியால் எனக்கு நண்பர்கள் அதிகம். நேரில் கண்ட முகமறிந்த நண்பர்களில் அதிகம்தெரிந்தவர்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். மற்ற நண்பர்கள் வருந்த வேண்டாம்.

கடந்த மே மாதம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. அதில் அதிகமாக பதிவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை சில நிமிடங்கள் சந்தித்துப் பேசினேன். பிறகு அவர்களில் பலர் நண்பர்களாகி விட்டனர். அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட வில்லை. மனம் வருந்த வேண்டாம்.

நல்வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்

சீனா