ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 1 May 2009

பட்டாம் பூச்சி விருது


அன்பின் பதிவர்களே !

நான் இடுகைகள் இடுவதை விட மறுமொழிகள் இடுவதையே அதிகம் விரும்புபவன். இருப்பினும் அன்பின் காரணமாக எனதருமை நண்பர் கோவி கண்ணன் எனக்கும் சில நாட்கள் முன்னதாக (19.03.2009) பட்டாம்பூச்சி விருதினை அளித்து விட்டார். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து - எழுதுவதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து - இன்று ஒரு முடிவுடன் எழுதுகிறேன்.

காரணம் - எனது துணைவியார் இன்று அவருக்குக் கிடைத்த விருதின் விதிகள் படி செயலாற்றி விட்டார். இனி பொறுப்பதில்லை என பொங்கி எழுந்து விட்டேன்.

கோவியாரோ அகவை ஐம்பதைக் கடந்த மூவரைத் தேர்ந்தெடுத்தார். நானோ மழலைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். ஏனெனில் பேரன் பேத்திகளைக் கொஞ்சும் காலமல்லவா இது !

முதல்வர் : நான் விரும்பிப் படிக்கும் பதிவர். பதிவு துவங்கிய காலம் முதல் அனைத்து இடுகைகளையும் படித்தவன் என்ற முறையில் அவருக்கு விருதினை அளித்து அவரை மகிழ்வித்து நான் பெருமைப் படுகிறேன். அருமை நண்பரின் மகள் - அவர் யாரென மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாமவர் : புதிய பதிவர் - மூன்றே இடுகைகள் தான் இட்டிருக்கிறார். வரைவதில் கெட்டிக்காரர். நினைவாற்றல் மிக்கவர். அருமை நண்பரின் பேத்தி. அமெரிக்காவில் வசிப்பவர் - வாழ்பவர். யாரெனக் கண்டு பிடியுங்கள்

மூன்றாமவர் : சித்திரக்கூடத்தின் இளவரசி - பொம்மைக்குக் கூட ஓவியம் கற்பிப்பவர். மழலையாய் உதிர்க்கும் மனமுத்துக்கள் நம்மை மயக்கும்.

ஆக வரட்டா - போதும் இன்னிக்கு - நாளை அறிவிக்கிறேன் - விருது பெற்ற பெரும் பேறு பெற்ற பதிவர்களை.

சரியா - பை பாஃர் நௌ

சீனா