ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 4 January 2009

புத்தாண்டு வாழ்த்துப் பா !!

அருமை நண்பர்களே !

எனது நண்பர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்தாக இக்கவிதையை எழுதி மடல் வரைந்திருந்தார். படித்தேன் - ரசித்தேன் - கடைப்பிடிக்க வேண்டுமென நினைத்தேன். நீங்களும் படியுங்களேன் !
---------------------------------------------------------
அழகாய் மௌனமாய் வீற்றிருக்கும்
பழகப் பழக
புதுப்புது செய்திகள் சொல்லும்
இரவைப் பகலாக்கும்
விடிந்தாலும் இரவாய் பயணிக்கும்
தூக்கம் கலைக்கும்
தொடர்ந்து நித்திரைக்கும்
தூது செல்லும்.

படர்ந்த சிந்தனைகளை
மெதுவாய் அசைபோடும்
புதியன தேடவைக்கும்
புதிராய் அலையவைக்கும்
தாயாய் - தாரமாய்
தலைமுறை போற்றும் சேயாய்
விரலைப் பற்றி
நிழலாய் வலம்வரும்..............

புத்தகமே - நம்
புது அகம் !!
புத்தகமே - நம்
புது யுகம் !!

வாசிப்பே சுவாசிப்பு !
வாசிப்பவரே வசிப்பவர் !
வாசித்தல் நேசிப்போம் !!
வாழ்தலில் வசந்தம் சேர்ப்போம் !!
============================
நட்புடன் .... சீனா .......
--------------------------------------------