ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 5 June 2009

மாட்டிக்கிட்டேனே

அன்பின் ரங்கா - பழகலாம் வாங்கன்னு சொல்லி தொடர் இடுகைலே மாட்டி வுட்டுட்டான்.

என்ன செய்யறது ..... பதில் சொல்வோமே

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாய்வழித் தாத்தாவின் பெயர் எனக்கு என் அம்மா ஆசையாக வைத்தார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

என் தாய் இறந்த போது -

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும், ஆனா நான் எழுதற்தே இல்லையே - பேனா திறப்பதே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடத்தான்


4).பிடித்த மதிய உணவு என்ன?

வெஜிடேரியன் .. அதனால் தக்காளி சூப் - உருளைக் கிழங்கு அவியல் - பூசனிக்காய் சாம்பார் - தயிர் - சாதம்



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமா யாராச்சும் பழக ஆரம்பிச்சா உடனே நட்பு தான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் குளிக்கப் பிடிக்கும் - ஆனல் சந்தர்ப்பங்கள் குறைவு

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தோற்றம் - கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என் திறமை - என் முன் கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

அதிக அன்பு- என்னைச் சோம்பேறியாக்கும் வகையில் என் வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்வது

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

பெற்ற மக்கள் அயலகத்தில் - அவர்கள் இல்லாதது வருத்தத்தினை அளிக்கிறது


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஊதா - நீலம்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கணினியின் திரை பார்க்கிறேன் - ஒன்றும் கேட்கவில்லை

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்,

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மற்றும் மலர்களின் மணம்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அண்ணன் தருமி
நானானி
துளசி

இவர்கள் என் சம வயதினர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சின்னப்பையன் ரங்காவின் பதிவுகளில் - அவனது அப்பாவினைப் பற்றிய பதிவு எனக்குப் பிடிக்கும். நல்ல கவிதை

17. பிடித்த விளையாட்டு?

செஸ் - ரம்மி - ஃப்ரீசெல்


18.கண்ணாடி அணிபவரா?

ஆம்

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


நகைச்சுவை - த்ரில்லர் - புராணப்படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, - சூபர் படம்

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

ஏனெனில் அந்த மாதங்களில் நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்பொழுதா - இரா.முருகனின் சிறுகதைத் தொகுப்பு

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றுவதே இல்லை

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அயலகம் - இலண்டன்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

கணினியில் மென்பொருள் - கோபால் நிரலி - கை வந்த கலை
ஸ்கோயூனிக்ஸ் - எம் எப் கோபால் -


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என் செயல்களில் குற்றம் கண்டு பிடிப்பது

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அந்தரங்கம் புனிதமானது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம். ஆக்ரா, மதுரா

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்.... ..

நாள் பூரா தூங்குவது - எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழு ! வாழ விடு !



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

தருமி, நானானி, துளசி