ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 2 November 2010

பணி ஓய்வு - வாழ்த்து மடல்

எனது இனிய துணைவியார் திருமதி மெய்யம்மை அவர்கள் சென்னையில் ஒரு புகழ் பெற்ற பள்ளியில் தலைமைத் தமிழாசிரியையாய் 33 ஆண்டுகள் பணியாற்றி = பணி நிறைவு செய்த போது - அவரின் சக ஆசிரியை வாசித்தளித்த வாழ்த்து மடல்.
--------------------------------------------------------------------

எம்முடன் பணியாற்றிய எங்களில் ஒருவர்
எழுத்தும் சொல்லும் (மாணவ) மனங்களில் விதைத்தவர்
இத்திங்களில் எம்மைப் பிரிந்திட நேரும் - உன்
பணி நிறைவாலே வந்தது இந்நேரம்.

பணிகள் செய்ய நீ சளைத்தாய் இல்லை
இன்னமும் நீ களைத்தாய் இல்லை
பாரில் தமிழ் வளர்த்தோர் உண்டு - நீ எம்
பள்ளியில் தமிழ் வளர்த்த அம்மை - இது மெய்

வள்ளுவனும் பாரதியும் சொன்ன சொல்லை
உன் போல் சொல்ல எவரும் இல்லை
பள்ளியில் ஆற்றும் பணிகள் செய்யப்
பயின்றோம் நாங்கள் உன்னைப் பார்த்து.

கடலின் ஆழம் அமைதியைப் போல - உன்
கருத்தின் ஆழம், அமைதியாய் இருப்பாய்
மௌனமாய் இருந்து பணிகள் செய்வாய்
புன்னகையால் எம்மைப் புரிய வைப்பாய்.

வாய் திறந்தாலோ தமிழ் மடை வெள்ளம்
மகிழ்வுடன் நிறையும் கேட்பவர் உள்ளம்
தமிழுக்கு நீ சிறப்பு செய்தாய் அந்தத்
தமிழாலே நீ சிறப்பும் பெற்றாய்.

மூன்று ஆண்டுகள் பணி புரிந்தாலும்
முணுமுணுப்புடன் பணி செய்பவர் உண்டு
முப்பத்து மூன்றை முடித்த பின்னாலும்
முகந்தனில் மலர்ச்சி மறையவில்லை.

உன்னில் சிறியவர் நாங்கள் எனினும்
வாழ்த்துகிறோம் உன்னை நன்னலம் பெறவே
மதுரை மீனாட்சி திருவருளாலே
மண்ணில் மகிழ்வுடன் வாழ்க பல்லாண்டு.

ஆக்கம் : ஆங்கில ஆசிரியை