ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 2 May 2009

பட்டாம் பூச்சி விருது - பகுதி 2

பட்டாம்பூச்சி விருது - இதனைப் படித்து விட்டு இங்கே வரவும் :

ஆமா - இதென்ன பெரிய இடுகையா - கருத்துள்ள கதையா கவிதையா கட்டுரையா இலக்கியமா - என்ன இது சின்னப்புள்ளத்தனமா பகுதி இரண்டாமில்ல - கேக்கறதுக்கு ஆளில்லப்பா

யார்யா இது - இங்கே வந்து கத்தறது ......

சரி சரி தொலைஞ்சு போ - யாரெல்லாம் விருது வாங்கறாங்கன்னு சொல்லித் தொலை

முதல்வர் : பதிவுலகின் செல்லப் பிள்ளை - அனைவராலும் ரசிக்கப்படுபவள் - படங்களாகவே மயக்குபவள் - எல்லோரையும் கவர்ந்தவள் - நேரில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - தேவதை - நிலா

இரண்டாமவர் : அருமை அண்ணனின் - தருமியின் - மதுரை என்றாலே நினைவுக்கு வரக்கூடிய மூத்த பதிவர் தருமியின் - அருமைப் பேத்தி ஜெசிகா

மூன்றாமவர் : பப்பு - சந்தன முல்லையின் செல்ல மகள் - குறும்புக்காரி - அம்மாவினை அதிகம் தொந்தரவு செய்யாதவள் - எனக்குப் பிடித்தவள்
நல்வாழ்த்துகளுடன் கூடிய விருது.

எப்பா அறிவிச்சாச்சுப்பா

அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்வாழ்த்துகள்

இப்ப விதி முறைகள்:

இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

அதனால மூணுபேருமே என்னைப்போல தாமதிக்காமல் பட்டாம்பூச்சி போல பறந்து பறந்து விருதைக் கொடுத்துடுங்க:)

வணக்கம்.

அன்புடன் .... நட்புடன் .... சீனா