ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Wednesday, 7 January 2009

சமையல் குறிப்பு : அவல் கிண்டுவது எப்படி

சகோதரி நானானி அடுத்து என்ன கிண்டி, கிளறப் போறீங்கன்னு கேட்டிருந்தாங்க என்னோட மா உருண்டைப் பதிவுலே - அதன் தொடர்ச்சியா அவல் கிண்டப் போறேன்.

தேவையான பொருட்கள் :

அவல் : 200 கிராம்
வெல்லம் : 100 கிராம்
ஏலக்காய் : 3 அல்லது 4
முந்திரிப்பருப்பு : 5 அல்லது 6
திராட்சை : 7 அல்லது 8
நெய் : 2 ஸ்பூன்
தேங்காய் : அரை மூடி ( துருவி வச்சிக்கணூம்)


(அப்புறம் கேஸ், கேஸ் அடுப்பு, வாணலி, கரண்டி, மூடி கை துடைக்கத்துண்டு இதெல்லாம் எடுத்துக் கொடுக்க ஒரு ஆள் ( பொன்னா இருந்தா நல்லது) - இவ்வளவும் இருந்தா தான் அவல் நல்லா கிண்ட முடியும்)

முதலில் அவலை லேசா ஒரு கழுவு கழுவி ஒரு டம்ளர் தண்ணீலே ஊற வைக்கணும் ( 10 நிமிடம்). அப்புறம் எரியற அடுப்பிலே சட்டி வச்சி அதுலே முந்திரி, திராட்சையை நெய்யிலே நல்லா வறுத்துக்கணும். ரெண்டு டம்ளர் தன்ணியை அது மேலேயே ஊத்தி, வெல்லத்த தட்டி அதுல போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். நல்லா கொதிச்சதும் ஊற வச்ச அவலை அதுலே கொட்டி நன்றாகக் கிண்ட வேண்டும் - கிளற வேண்டும். அடிப்ப்டிக்க விட்டு விடக் கூடாது. நல்ல வாசனை வரும் போது கீழே இறக்கி வைத்து துருவிய தேங்காயை அதில் தூவி நன்றாகக் கிளறி ரெண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

அவ்ளோ தான் - இப்போ அவல் நல்லா சாப்பிடலாம் - ரெடி - உடம்புக்கும் நல்லது - ஆமா சொல்லிப்புட்டேன்.

நட்புடன் ...... சீனா

-----------------------

Saturday, 3 January 2009

மா உருண்டை

அருமை நண்பர் சதங்கா மா உருண்டை எப்படிச் செய்வதென்று ஒரு பதிவு அவரது செட்டி நாட்டுக் கிச்சன் என்ற வலைப்பூவினில் போட்டிருந்தார். நானும் மாஉருண்டை செய்வதில் எங்க அம்மாவுக்கு உதவி இருக்கேன். இப்ப என்ன பண்றது - எப்படிப் பண்றதுன்னு பாக்கலாமா

தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - சீனி - நெய்

செய்முறை :

பாசிப்பருப்பையும் சீனியையும் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கணும் - அப்பல்லாம் வீட்லெ மிக்ஸி எல்லாம் இல்லீங்கோ - மிஷின் காரன் சீனி பிளேட்ல ஒட்டிக்கும் - அதனாலே இப்ப அரைக்க முடியாது - கடசியா கட மூடும் போது அரைச்சுத் தரேன்னு சொல்லுவான் - சாயந்திரமா போய் காத்துக்கிட்டுருந்து அரைச்சுக்கிட்டு வரணும்.

அடுப்புலெ சட்டிய வச்சி - நெய் ஊத்தி காய வைக்கணும். இளஞ்சூடா இருக்கற நெய்யே எடுத்து அப்படியே மாவுலே ஒரு கரண்டி ஊத்தி - மாவையும் நெய்யெயும் சேத்து பதமா உருட்டி - மாவு உருண்டைக் கிண்ணம்னு ஒண்ணு இருக்கும் - சின்னதா அழகா - அதுலே வச்சி அமுக்கி - கிண்ணத்தெ தலை கீழா கவுத்தா மாவுறுண்டை ரெடி. அப்புறம் சாப்பிடலாம் . செய்யும் போதே மாவை அள்ளி அள்ளித் திங்கலாம்.

இப்படியே ஒவ்வொரு கரண்டியா நெய் விட்டு மாவுருண்டை பிடிச்சி - எல்லா மாவையும் உருண்டையாச் செய்யணும். ரொம்ப நல்லா இருக்கும்.

இப்பல்லாம் தங்க்ஸுக்கு இதுல எல்லாம் நான் உதவி செய்யறதே இல்லீங்கோ - அம்மாக்கு மட்டும் பட்டப்படிப்பு முதல் வருடம் படிச்சப்போ உதவி பண்ணுனதுங்கோ - ( அள்ளித் திண்ணது தான் ஜாஸ்தி - மெஷினுக்குப் போய் கால் கடுக்க நின்னு அரைச்சிட்டு வந்தேன்ல )

வர்ட்டா - நாளைக்குப் பாக்கலாம்