ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 27 January 2008

வலைப் பதிவர் மாநாடு.

மதுரையில் ஒரு பிரமாண்டமான வலைப் பதிவர் மாநாடு.

சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் 12 மற்றும் 13ம் நாட்களில் மதுரையில் ஆரப்பாளையம், டி.டி. சாலை, 69ம் எண்ணுள்ள சிவபாக்கியம் திருமண மகாலில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகள், மங்களூர் சிவாவின் தலைமையில், அவருடைய கடும் உழைப்பின் பேராலும், பெரும் முயற்சிகளாலும் அமர்க்களமாக, செய்யப்பட்டிருந்தன.

வலைப்பதிவர்கள் 5 பேர் ( 5000 பேருக்குச் சமம்) சந்தித்தனர். சீனா, அவரது மறு பாதி ( வேற யாருங்க என் துணைவி, மனைவி தானுங்க), மங்களூர் சிவா, நிலாக்குட்டி, நந்து ( இவரு நிலாக்குட்டியோட அப்பாங்க) சந்திச்சாங்க. முக்கிய பார்வையாளரா நிலா அம்மா, சசி வந்திருந்தாங்க. ( நந்துவுக்கு பாதுகாப்பு. அவரு மத்தவங்க ( அதாங்க பொண்ணுங்க) பின்னாடி ஜொள்ளு விட்டுட்டுப் போய்டாமெயும், அவரெ வேற யாரும் கடத்திட்டுப் போய்டாமெயும் பாத்துக்கறதுக்கு). டைட் செக்கூரிட்டிங்க. பாவம் நந்து.

முதல் நாள் மாலையில் நிலா, சசி மற்றும் நந்து வரலே. நாங்க மூணு பேரும் மாநாட்டை எப்படி வெற்றிகரமா நடத்தறதுன்னு ரூம் போட்டு, பேசித் தீர்மானிச்சோம். ராத்ரி ஹல்வா, வடை, கிச்சடி, காப்பியோட எல்லோருக்கும் அருமையான விருந்து.

இரண்டாம் நாள், வாண வேடிக்கைகளோடு, பாண்டு வாத்தியம் முழங்க மேள தாளத்துடன் மாநாடு தொடங்கியது. Full attendance ங்கோ! வாழை மரங்கள் வாசலிலே கட்டப் பட்டிருந்தன. திருமண மகால் முழுவதும் மாவிலைத் தோரணங்கள். பொதுவான வலைப் பதிவுகள், வலைப் பூக்கள், தமிழ் மணம், தேன்கூடு மற்றும் இணையம், இணையத்தில் பாதுகாப்பு பற்றி எல்லாம் விரிவாக விவாதித்தோம். சைடிலே, சிவா திருமணம் பற்றியும் பேசினோம். நாட்டிலே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே போவது பற்றி வருத்தத்துடன் விவாதித்தோம். பாவம் சிவா இல்ல, பொண்ணு கிடைக்கணுமே அதான்.

சக வலைப் பதிவர்கள் ( தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டுமே) பற்றியெல்லாம் கலாச்சிட்டு, கிண்டல் பண்ணிட்டு இருந்தோம். சிவாவோட வீக் எண்டு ஜொள்ளு பற்றி ரொம்ப நேரம் விவாதிச்சோம். நிலாக்குட்டியோட சிரிச்சி சிரிச்சிப் பேசினோம். தோழி அனுராதாவைச் சந்திக்கணும்னு முடிவு பண்ணினோம். சந்தர்ப்ப சூழ்நிலை சரியா வரலே.

அப்புறம் என்னங்க - காலை டிபன், மதிய சாப்பாடு. அவ்ளோ தான். எல்லாம் மங்களூர்க்காரரு ஏற்பாடு. காலைலே அல்வா, இட்லி, வடை, ஊத்தப்பம், பொங்கல் ( அபி அப்பா பொங்கள் இல்லீங்க), காப்பி மற்றும் குடிக்க தண்ணி. (மினரல் வாட்டர் தானுங்க). மதியம், சாப்பாடு - பாயசம், பூந்தி, தயிர் பச்சடி, ஃப்ரூட் சாலட், ( சூடா இருந்திச்சி), பருப்பு உசிலி, முட்டக்கோஸ் துவட்டல், மொச்சைக் குழம்பு, மலையாள அவியல், பருப்பு, நெய், வடை, சாதம், சாம்பார், மோர்க் குழம்பு, ரசம், தயிர் etc etc etc. எல்லா ஏற்படுகளும் சூப்பரு போங்க.

மாநாட்டைப் பயன்படுத்தி, சிவா அவங்க அண்ணணோட கல்யாணத்தேயும் இந்த நாட்களில், இதெ மண்டபத்தில் நடத்திக்கிட்டாருங்க. மாநாட்டு வேலயோட வேலயா, இருக்கற பிஸியிலே, அந்தக் கல்யாணத்திலேயும் கலந்து கிட்டோம். கல்யாணத்துலே கொடுத்த தாம்பூலப் பை கொடுத்தாங்க. அந்த செலவெ எல்லாம் மாநாட்டுச் செலவு கணக்குலே எழுதலீங்கோ!

மத்தபடி வேற ஒண்ணும் செய்திகள் இல்லங்க.

மாநாட்டை வெற்றி கரமா நடத்திக் காட்டிய எங்களுக்கு நாங்களே நன்றி தெரிவிச்சிக் கிட்டு கலஞ்சு போனோமுங்க.

அம்புட்டுத்தானுங்கோ!!