ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 3 May 2011

மாவட்ட ஆட்சியரின் உரை

01.05.2011 காலை 11 மணி அளவில் மதுரை படிப்பாளிகள் சங்கமத்தில் - மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம். IAS அவர்கள் "நல்ல குடிமகனை உருவாக்குவது" என்ற தலைப்பினில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

இவ்வுலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையால் சிறப்புப் பெற்றிருக்கிறது. பொருளாதாராத்தில் சிறந்து விளங்குகிறது அமெரிக்கா. பொது உடைமைத் தத்துவத்தை உலகிற்குப் பரப்பியது இரஷ்யா. நிறைந்த மக்கட்தொகை கொண்ட மிகப் பெரிய நாடு சீனா. உழைப்பால் உயர்ந்து நிற்கும் உன்னத நாடு ஜப்பான். நம் இந்தியத் திருநாடோ மிகப் பெரிய மக்களாட்சி நடக்கும் நாடு. இதன் தேர்தல் முறையே இதற்குச் சான்று.

இந்த நாட்டிலே நல்ல குடி மக்களை உருவாக்குவது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும். பள்ளிகளில் கற்றுத் தரும் கல்வியோடு மாணவச் செல்வங்களுக்கு மனிதத் தன்மையினையும் கற்றுத் தர வேண்டும். கல்வி கற்பிப்பதோடு, நல்ல மனிதனை உருவாக்குவதும் ஆசிரியர்களின் பணிதான். நான் மருத்துவராவேன் - நான் பொறியியல் வல்லுனர் ஆவேன் - நான் இந்திய ஆட்சிப் பணியில் அமர்வேன் என்கின்ற இளம் உள்ளங்கள் நான் நல்ல மனிதனாவேன் என்று உணர்ந்து கூறுகின்ற அளவுக்கு ஆசிரியர்கள் அவர்களை உருவாக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் - உழைத்தால் ஊதியம் வருகிறது. இது என் தொழில் - இது அதற்குரிய ஊதியம் என்பதை விட அத்தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். மனம் உழைப்பதைக் கடமையாகக் கொண்டால் மட்டும் போதாது. கருணையோடு உழைக்க வேண்டும். இருட்டில் வெளிச்சத்தைத் தேடுவதைப் போல பகலிலும் இருண்ட வாழ்க்கை நடத்துவோருக்கிடையே உண்மையானவரைத் தேட வேண்டும்.

திரு சகாயம் ஒரு அரசு உயர் அதிகாரியாக இருந்த போதும், அவர் செயலில் இருக்கின்ற மனிதத் தனமை நம்மை மனம் நெகிழச் செய்கிறது. ஏற்றமிகு செயல் - எடுப்பான பேச்சு - நேர்மையான உழைப்பு - இவை அவரை உயர்ந்த மனிதராக்குகிறது. ஊழலும் கையூட்டும் மலிந்து விட்ட சமுதாயத்தைச் சட்டத்தால் திருத்த நினைக்கின்ற, இந்திய ஆட்சித்துறையினைச் சார்ந்த ஒரு அதிகாரி மனிதத் தன்மையோடு செயலாற்றுவது அவருக்கு ஒரு உயர்ந்த தோற்றத்தினை அளிக்கிறது.

தமிழ் எப்படி வளர்கிறது என்பதற்கு ஒரு அருமையான செய்தியைக் கூறினார். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் தான் எதிர் காலத்தில் தமிழ் மொழியினை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் தொண்டினைச் செய்பவர்கள் என்ற செய்தியினைத் தெளிவாகக் கூறினார்.அதனால் தான் இவர், மற்ற பள்ளிகளை விட இப்பள்ளிகளின் மீது அதிக அக்கறை காட்டுவதாகக் கூறினார். நடக்கப் பழகுகின்ற குழந்தைகளைத் தானே கையைப் பிடித்து அழைத்துச் செல்வோம். நன்றாக நடப்பவர்களை அல்லவே !

சட்டடத்தினை உருவாக்கும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது. சட்டத்தினைக் கையில் வைத்துக் கொண்டு அதன் எதிர்ப் பக்கத்திற்குத் துணை போகக் கூடாது. நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்று எப்படி இளநிலை இள வயது அதிகாரியாக இருக்கும் போது நினைத்தோமோ - அதனை பதவி உயர்வினிலும் நினைத்துப் பணியாற்ற வேண்டும். அப்படி ஒரு மன நிலையில் அரசு உயர் அதிகாரிகளைக் காண்பதரிது. "இலஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து " என்ற செய்திப் பலகையினை தன் அறையில் தன் இருக்கைக்கு மேலே மாட்டி வைத்திருக்கும் இவரைப் பாராட்டச் சொற்களே இல்லை. எந்நிலையிலும் மனச் சாட்சிப்படிப் பணியாற்ற வேண்டும் என்ற வேகம் அவரது புயல் வேகப் பேச்சிலிருந்தது. அவரது எளிய தோற்றம் மற்றும் மிடுக்கான ஆற்றல் திறன் அவரை ஒரு வரலாறு படைக்கும் மனிதராக ஆக்குகிறது. அத்தகைய மனிதரின் நெஞ்சில் ஈரம் உள்ளது என்பது எவ்வளவு இனிமையான நினைவு !

பேச்சுக்குச் சொல்வதுண்டு - "நீ என்ன பெரிய கலெக்டரா ? " என்று. ஆம் ! கலெக்டர் என்றால் எதையும் சாதிக்க முடியும். அதனால் தான் "படிப்பாளிகளாகிய நீங்கள் ஒரு நல்ல சமுதாயத்தினை உருவாக்குங்கள்" என்றார். பயிற்சி பெற்றவர்களாகத்தான் பலர் இருக்கிறார்கள். ஆனால் படித்துணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள் என்றார்.

அவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணி புரிந்த போது அவர் செய்த நல்ல செயல்களை எடுத்துரைத்தார். உழைப்பாளர் தினத்தன்று ஒரு நல்ல உழைப்பாளியினைக் கண்ட நிறைவு எல்லோருடைய கண்களிலும் தெரிந்தது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

46 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

r.v.saravanan said...

pagirvukku nandri cheena sir

ராமலக்ஷ்மி said...

//இளம் உள்ளங்கள் நான் நல்ல மனிதனாவேன் என்று உணர்ந்து கூறுகின்ற அளவுக்கு ஆசிரியர்கள் அவர்களை உருவாக்க வேண்டும்.//

அருமையாக சொல்லியுள்ளார்.

அவரது உரையினை நேர்த்தியாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

Prabu M said...

நல்ல விஷயம் சார்...
பகிர்வுக்கு மிக்க நன்றி... :-)

தருமி said...

ஆக, வாரா வாரம் ஒழுங்கா கூட்டங்களுக்குப் போய், நல்ல பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!
நல்லது.
இப்பதிவுக்கு ‘இரட்டை நல்லது’.

நீங்கள் நூலாய்வு செய்யும் போது சொல்லுங்கள். அதற்கு மட்டுமாவது வருகிறேன்.

பிரபாஷ்கரன் said...

/சட்டடத்தினை உருவாக்கும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது. சட்டத்தினைக் கையில் வைத்துக் கொண்டு அதன் எதிர்ப் பக்கத்திற்குத் துணை போகக் கூடாது./

என்ன அருமையான் வார்த்தைகள் .இவர்தான் தற்போதைய தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்

இராஜராஜேஸ்வரி said...

ஒரு வரலாறு படைக்கும் மனிதராக ஆக்குகிறது. அத்தகைய மனிதரின் நெஞ்சில் ஈரம் உள்ளது என்பது எவ்வளவு இனிமையான நினைவு !//
அருமையான பகிர்வு.

சௌந்தர் said...

நல்ல தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்...பகிர்வுக்கு நன்றி

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Praveenkumar said...

இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் பயனுள்ள உரையின் தொகுப்பு..!! பகிர்வுக்கு நன்றி ஐயா.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான பகிர்வு. இது போன்ற நல்ல கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

உழைப்பாளர் தினத்தன்று ஒரு நல்ல உழைப்பாளியினைக் கண்ட நிறைவு எல்லோருடைய கண்களிலும் தெரிந்தது.>>>>

உழைப்பாளர் தினத்தில் நல்ல கருத்துக்களை திரு,சகாயம் அவர்கள் எடுத்துரைத்துள்ளார். அவர் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

ம.தி.சுதா said...

ஃஃஃஃஇளம் உள்ளங்கள் நான் நல்ல மனிதனாவேன் என்று உணர்ந்து கூறுகின்ற அளவுக்கு ஆசிரியர்கள் அவர்களை உருவாக்க வேண்டும்ஃஃஃஃ

நல்ல வழிகாட்டல் சிந்தனையுள்ள பதிவு ஐயா... நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல விஷயம் .நன்றி அய்யா.

அகல்விளக்கு said...

Hats off......

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி சரவணன்

cheena (சீனா) said...

அன்பின் ராமல்கஷ்மி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் பிரபு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் தருமி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நூலாய்வு செய்யும் போது சொல்கிறேன் - வாருங்கள் - அடுத்த எம் ஆர் சி - கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் - வள்ளுவம் காட்டும் வழி என்ற தலைப்பினில் பேச இருக்கிறர. மே 15 - தவறாது வருக

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் இராஜராஜேஸ்வரி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் இரத்ன வேல் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் பிரவீன் குமார்- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் மதி சுதா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் அகல் விளக்கு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

VISA said...

பகிர்வுக்கு நன்றி...

ரஹீம் கஸ்ஸாலி said...

அய்யா...உங்களின் பதிவிற்கு இப்போது தான் வருகிறேன்...அருமை

மாணவன் said...

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள விசயங்களை சிறப்பாக பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கய்யா...

:-)

சக்தி கல்வி மையம் said...

நன்றி ஐய்யா..

தீதிலன் said...

பேரன்புக்குரிய சீனா ஐயாவிற்கு...

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், தற்பொழுது தமிழ் நாட்டின் மிகவும் முக்கியமான மனிதராகி விட்டார். நீதிக்கும், நேர்மைக்கும் அடையாளமாய் விளங்குகின்றார். ஒரு மனிதருக்குரிய சமூக பொறுப்புணர்ச்சியும், கடமையும் அவரைப் பார்த்து கற்று கொள்ள வேண்டிய விஷயம்.

cheena (சீனா) said...

அன்பின் விசா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கஸாலி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மாணவன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கருண் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மன்ம் கொண்டவன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது நண்பா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ம.தி.சுதா said...

ஐயா ஒரு அவசர வேண்டுகோள் எனது குறோம், பயபொக்ஸ் இணைய உலாவியால் வலைச்சரத்தை திறக்க முடியவில்லை எத்தனையோ தடவை முயற்சித்தும் முடியல இப்பிரச்சனை கடந்த 3 வாரங்களாக இருக்கிறது என் இணைய இணைப்பு வேகமின்மை தான் காரணம் என விட்டு விட்டேன் தயவு செய்து உதவங்கள்...

ஏதாவது புதிய வடிவமைப்பு சேர்த்துள்ளீர்களா ?

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

http://mathisutha.blogspot.com/

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பகிர்வு சீனா சார்..

Ram said...

சமீபத்திய தேர்தல் சமயத்தில் அவர் செயல்பாடுகள் மிகவும் பாராட்டும் படியாக இருந்தது. அவருடைய நல்ல எண்ணமும் இந்த கட்டுரையிலிருந்தி வெளிப்பட்டது. பாராட்டுக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் மதி சுதா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தேனம்மை - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ராம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சித்திரவீதிக்காரன் said...

மதுரை புத்தகத்திருவிழாவில் தான் திரு.சகாயம் அவர்களை காணும் வாய்ப்பு கிட்டயது. அவரது உரையை கேட்கும் வாய்ப்பும் அன்று கிடைத்தது பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன். உண்மையிலே மதுரைக்கு கிடைத்த சகாயம் தான் திரு.சகாயம் அவர்கள். அருமையான பதிவு நன்றி!

Thenammai Lakshmanan said...

சகாயம் சார் பற்றிய பதிவு அருமை . வாழ்த்துகள் சார்.