ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 22 April 2010

லதான்ந்தின் கேள்விக்குப் பதில்

நண்பர் லதானந்த் விஜய கோபால் சாமியிடம் கேள்விகள் கேட்டு, பதில்கள் பெற்று, இவரது கருத்தினையும் கூறி ஒரு இடுகை இட்டிருக்கிறார். அதே கேள்விகளுக்கு என்னைப் பதில் எழுதச் சொல்லிக் கேட்டார். இதோ பதில்கள்

லதானந்தின் கேள்வி சிவப்பு வண்ணத்தில்


எனது பதில் நீல வண்ணத்தில்

1. அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?

ஓஒ ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள் உண்டு - பேருந்தில் பயணம் போகும் போது = கண்டதையும் வாங்கித் திண்ணுட்டு - க்டமுடா க்டமுடா கலக்கி - பஸ்ஸூ எப்ப்டா நிக்கும்னு பாத்து இறங்கி ஓடிணா - ஒரு அறை கூட கிடைக்கல - ஒரு மரத்துக்குப் பின்னாலே போயி .... சரி சரி வேணாம் - நல்லாருக்காது ( இதெல்லாம் நடந்து ரொம்ப ரொம்ப வருசம் ஆயிடுச்சு )

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?

லதானந்தைப் பார்த்து - அவரின் இளமை ததும்பும் மனது - இடுகை இடுகின்ற வேகம் - பல்வேறு தமிழில் எழுதும் திறமை - குசும்பு - பெத்த பசங்க கிட்டே ஃப்ரெண்ட்லியாப் பழகறது - இன்னும் என்ன என்னவோ

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?

அந்தரங்கம் புனிதமானது - 20 வயசில பஸ்லே - சென்னை மதுரை - ஸ்டேட் எக்ஸ்பிரஸ் - நான் ரெண்டு பேரு உக்கார்ர சீட்ல தனியா உக்காந்து வந்தேன் - விழுப்புரம் வரைக்கும் யாருமே ஏறல - விழுப்புரம் தாண்டிப் பாத்தா - பக்கத்து சீட்ல ஒரு பாப்பா - காலேஜ் படிக்கற பாப்பா - என்ன பண்றதுன்னு தெரில - நல்ல தூக்கம் டாம் டயர்டு ரெண்டு பேருமே - அப்பப்ப தொடைகள் வெளிப்பக்க உராய்வு - கால்கள் இடிப்பு - தோள்களில் தலை சாய்வு - இப்படியே போச்சு - மதுர வந்துடுச்சி - அவ்ளோதான் - உண்மை உண்மை உண்மை

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

எப்பவுமே நடக்கறது தானே ! ஒண்ணா இரண்டா எடுத்துச் சொல்ல !

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறதே ! சொல்ல இயலாதே !

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?

முக்கா வாசி அப்படித்தான் - பிளாக்ல தான் வாங்கறது -

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?

சைக்கிள் டபுள்ஸ் - அவ்ளோ தான்

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?

அந்த வழக்கமெல்லாம் இல்ல


9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.

ச.தே அதிகம் படித்திருக்கிறேன் -
ம.ம நான் படிச்ச காலத்துல கேள்விப்பட்டதே இல்லையே

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?

எனக்கொன்றும் ஆட்சபனை இல்லையே

நல்வாழ்த்துகள் லதானந்த்
நட்புடன் சீனா

44 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

வால்பையன் said...

me the first போட ஒரு வாய்ப்பு தரக்கூடாதா!?

வால்பையன் said...

//யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?

லதானந்தைப் பார்த்து //

உண்மையை சொல்லுங்க அவரு மீசையை பார்த்து தானே!

வால்பையன் said...

// அப்பப்ப தொடைகள் வெளிப்பக்க உராய்வு - கால்கள் இடிப்பு - தோள்களில் தலை சாய்வு - இப்படியே போச்சு - மதுர வந்துடுச்சி - அவ்ளோதான் - உண்மை உண்மை உண்மை//

கொஞ்சம் கிளிகிளிப்பா தான் இருக்கு!
உங்க சின்னகார் பத்தி ஒன்னுமே சொல்லலையே!

வால்பையன் said...

//நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?

சைக்கிள் டபுள்ஸ் - அவ்ளோ தான் //


தண்ணி கலக்காம ராவா அடிக்கிறதும் இப்போ சட்டமீறல் தானாம்!

'பரிவை' சே.குமார் said...

நல்ல இடுகை.

உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள் சீனா சார்.
வாழ்த்துக்கள்.

வெற்றி said...

இன்னும் கொஞ்சம் வெளிப்படையா பேசிருக்கலாமோ :))

நானானி said...

நல்....ல பதில்கள்.
வூட்ல படிச்சாங்களா? அப்பால என்ன நடந்தது சொல்லுங்களேன்!!

cheena (சீனா) said...

வாலு வாய்ப்பு வேணுமா என்ன ? என்னப் பொறுத்த வரைக்கும் நீ தான் ஃப்ர்ஸ்டு எப்போதும் - சரியா

நல்வாழ்த்துகள் வாலு
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

ஆமா வாலு - அவரு மீசையும் எனக்குப் பொறாமைதான்

cheena (சீனா) said...

சின்ன காரெல்லாம் இல்லப்பா என் கிட்டே - வாலு குடும்பத்துல கொழப்பத்த உண்டு பண்னீடாதே - சரியா

cheena (சீனா) said...

நான் தண்ணி கலக்காம அடிக்கறது இல்லயே - நீ சட்ட மீறல்ல சக்கரவர்த்தியாச்சே

cheena (சீனா) said...

வுருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

cheena (சீனா) said...

இதுக்கு மேலெ வெளிப்படையாப் பேசினா உதை விழும் வெற்றி

cheena (சீனா) said...

அன்பின் நானானி - வூட்ல காமிக்கல - அயலகத்துலே இருந்து மக படிசிட்டு அம்மா கிட்டே வத்தி இப்படி எல்லாம் எழுதக் கூடாதுன்னு சொல்லிட்டா - அப்புறம் வூட்ல படிச்சாங்க - என்ன பண்றது - சோனது போதும் நானானி

கொல்லான் said...

அய்யா,
தங்கள் பதில்கள் ரத்தினம் போல் இருந்தன.
எங்க கேள்விக்கும் பதில் சொல்வீங்களா?

cheena (சீனா) said...

அன்பின் கொல்லான் - உன்னை விட மூத்தவன் நான் - கேட்டுத்தான் பாரேன் - சொல்றேனா இல்லையான்னு - ஆமா கோயம்புத்தூர்ல யாருமே கெடைக்கலியா - என்ன வம்புக்கிழுக்குறே !

நல்லாருப்பா கொல்லான்
நல்வாழ்த்துகள் கொல்லான்
நட்புடன் சீனா

பனித்துளி சங்கர் said...

அன்பின் ஐய்யா ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையான பதிலை மிகவும் அழகாக ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள் .

////////4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

எப்பவுமே நடக்கறது தானே ! ஒண்ணா இரண்டா எடுத்துச் சொல்ல !

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறதே ! சொல்ல இயலாதே !//////////////


அதிலும் இந்த இரண்டு பதில்களை நான் மிகவும் ரசித்தேன் . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன் கேள்வி கேட்க அல்ல பதிவை படிக்க .

கோவி.கண்ணன் said...

ஒளிவு மறைவின்றி இயல்பாக எழுதி இருக்கிங்க, அகவையின் முதிர்ச்சி.

கொல்லான் said...

அய்யா,
தங்கள் அனுமதிக்கு நன்றி.
கோயம்புத்தூருல ஆப்பீசருக்கு அப்புறம், உங்கள விட்டா எனக்கு வேற கதி?

சரி சரி,
கேள்விகள நோட் பண்ணிக்கோங்க.

'அகத்தியர் பன்னீராயிரம்' நூல் எங்க கிடைக்கும்?

'கோடான கோடி' - பாட்டுக்கு ஆடியிருக்கீங்களா?

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் அனைத்தும் போக ஆசை. ஒரு சில மட்டும் பாக்கி. உதவுவீர்களா?

முப்பத்து முக்கோடி தேவர்கள் யார்? புல் டீடைல் வேணும்.

கேள்வி பதில கண்டு பிடிச்சது யாரு?

ஆப்பீசர் உங்களுக்கு எப்படி பழக்கம்?

மனைவி ராஜியத்த மதுரைன்னும், கணவன் ராஜ்ஜியத்த சிதம்பரம்ன்னும் சொல்றவங்க, திருச்செங்கோடுன்னு மட்டும் சொல்லறது இல்லையே , அது ஏன்?

ஆணி புடுங்கரதுன்னா என்ன?

ஆப்பீசர் மீசை எடுத்தா எப்படி இருப்பார்?

கொல்லான் said...

அய்யா,
தங்கள் அனுமதிக்கு நன்றி.
கோயம்புத்தூருல ஆப்பீசருக்கு அப்புறம், உங்கள விட்டா எனக்கு வேற கதி?

சரி சரி,
கேள்விகள நோட் பண்ணிக்கோங்க.

'அகத்தியர் பன்னீராயிரம்' நூல் எங்க கிடைக்கும்?

'கோடான கோடி' - பாட்டுக்கு ஆடியிருக்கீங்களா?

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் அனைத்தும் போக ஆசை. ஒரு சில மட்டும் பாக்கி. உதவுவீர்களா?

முப்பத்து முக்கோடி தேவர்கள் யார்? புல் டீடைல் வேணும்.

கேள்வி பதில கண்டு பிடிச்சது யாரு?

ஆப்பீசர் உங்களுக்கு எப்படி பழக்கம்?

மனைவி ராஜியத்த மதுரைன்னும், கணவன் ராஜ்ஜியத்த சிதம்பரம்ன்னும் சொல்றவங்க, திருச்செங்கோடுன்னு மட்டும் சொல்லறது இல்லையே , அது ஏன்?

ஆணி புடுங்கரதுன்னா என்ன?

ஆப்பீசர் மீசை எடுத்தா எப்படி இருப்பார்?

மே ஏழு, எட்டு நீங்க வருவீங்களா?

cheena (சீனா) said...

ஏம்பா கொல்லான் - ரெண்டு தடவ கேக்கணூமா - அதுவும் மறுமொழியிலேயே கேட்டு மறுமொழியிலேயே பதிலும் வேணுமா ? படிக்கரவனெல்லாம் ஒதைக்க வருவாங்க - ம்ம்ம்ம் - பதில் எங்கே போடணும்

cheena (சீனா) said...

மே ஏழு எட்டு வருகிறோம் - கொல்லான்

cheena (சீனா) said...

ஒவ்வொருததரும் ஒவ்வொரு விதமா சிந்திக்கறாங்க - கோவி

அகவையின் முதிர்ச்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம் - இவ்ளோ வயசாயும் இப்படி எழுதறாரேன்னும் கேக்கறாங்க - ம்ம்ம்ம்ம்

மனதில் தோன்றியதை அப்படியே எழுதினேன் - அவ்வளவுதான் -

cheena (சீனா) said...

அன்பின் ஷங்கர் - திரும்பத் திரும்ப வருக - நல்வாழ்த்துகள் ஷங்கர்
நட்புடன் சீனா

கொல்லான் said...

அய்யா மே ஏழு, எட்டு சந்திப்போம்.

cheena (சீனா) said...

ஏழு எட்டா = எட்டு ஒன்பதா கொல்லான்

Thekkikattan|தெகா said...

அந்த பாத்ரூம் அவஸ்தை - அது இல்லாமல் எப்படீஈ...

ட்ரைன் கிளுகிளுப்பு பச்சக்கின்னு மனசில ஒட்டிகிச்சா சீனா ... :))

எல்லாத்தையும் வெளியே எடுத்து வைச்சிருக்கீங்க, இன்னும் வரணும்ல...

cheena (சீனா) said...

து சரி - இன்னும் வரணுமா - பிரபா வேணாம் - உண்மை அதுவா வந்து விழும் - அப்படித்தான் வந்துடுச்சு

Thenammai Lakshmanan said...

எப்பவுமே நடக்கறது தானே ! ஒண்ணா இரண்டா எடுத்துச் சொல்ல!//
அசடு வழிந்த அனுபவம் அருமை...ஹாஹாஹா சீனா சார்

cheena (சீனா) said...

அன்பின் தேனு

வருகைக்கஉ நன்றி

நல்வாழ்த்துகள் தேனு

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அன்பின் சீனா… நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் வலையில் நுழைந்தேன்..

அற்புதம்..வாழ்த்துக்கள்

நலம் நலமறிய ஆவல்.

நட்புடன் இளங்கோவன், சென்னை

பாச மலர் / Paasa Malar said...

typical சீனா சார் பதில்கள்..

cheena (சீனா) said...

அன்பின் இளங்கோ

அறிவது நல்னே ! விழைவதும் அஃதே !

அலைபேசி எண் உண்டல்லவா

தொடர்பு கொள்ளலாமே

நல்வாழ்த்துகள்

நன்றி

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பாசமலர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர்

எத்தனை நாட்களாகி விட்டது

நல்வாழ்த்துகள்
நடபுடன் சீனா

priyamudanprabu said...

1. எல்லோருக்கு அந்த அனுபவம் உண்டு
2.ஓ
3.ஹி ஹி
4.சொல்லவே இல்லை???!?
5.தப்பிசிட்டீங்களே?!?
6.ஓ
7.இதெல்லாம் ஒரு மேட்டரா?
8.எனக்கும் இல்ல
9.சீ சீ
10.ம்ம்ம்

Ungalranga said...

சீனா சார்..!!

அழகா பதில் சொல்லி இருக்கீங்க..!!

இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் ;)

cheena (சீனா) said...

அன்பின் பிரபு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு

அதென்ன சீ சீ - இவ்வயதில் சீ சீ சொல்லக் கூடாது

நல்வாழ்த்துகள் பிரபு
நட்புடன் சீனா




1. எல்லோருக்கு அந்த அனுபவம் உண்டு
2.ஓ
3.ஹி ஹி
4.சொல்லவே இல்லை???!?
5.தப்பிசிட்டீங்களே?!?
6.ஓ
7.இதெல்லாம் ஒரு மேட்டரா?
8.எனக்கும் இல்ல
9.சீ சீ
10.ம்ம்ம்

cheena (சீனா) said...

அன்பின் ஷர்புதீன்


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

இன்னும் என்ன எதிர்பாத்தே நீ ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா

ப.கந்தசாமி said...

ஆஜர் போட்டுக்கிறேன்.

cheena (சீனா) said...

ஆஜருக்கு நன்றி கந்த சாமி அய்யா

CS. Mohan Kumar said...

பல கேள்விகளுக்கு மனம் விட்டு பதில் சொல்லிருக்கீங்க சார்.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன் குமார்
நல்வாழ்த்துகள் மோகன் குமார்
நட்புடன் சீனா