ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 25 June 2009

மண விழாவில் பதிவர் சந்திப்பு

அன்பு நண்பர்களே

நேற்றைய தினம் - 24-6-2009 புதன் கிழமை மதுரையில் அருமை நண்பர் - சக பதிவர் கார்த்திகைப் பாண்டியனின் தங்கை திருமணம் சிறப்பாக நடந்தது. நண்பரோ அனைத்து நண்பர்களையும் நேரிலும் தொலைபேசியிலும் மண விழாக் காண
அன்புடன் அழைத்திருந்தார்.

திருமண மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம். அதில் சிறு தீவாக நமது பதிவர் வட்டம். நானும் எனது துணைவியும் ( அவர்களும் பதிவர் தான்) சென்றிருந்தோம். மண்டப வாசலிலேயே காரைக்குடியில் இருந்து வந்திருந்த மருத்துவர் தேவகுமாரும் சிவகாசியிலிருந்து வந்திருந்த அன்புமதியும் மதுரையில் இருக்கும் தேனி சுந்தரும் வரவேற்றனர்.

தேவன்மயம் எங்களை அன்புடன் அழைத்துச் சென்று காலை உணவு ஏற்பாடு செய்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்திலேயே நின்று அவரது வீட்டுத் திருமணம் போல் உபசரித்தார். நன்றி நல்ல உள்ளத்தினிற்கு.

திருப்பூரிலிருந்து ஆதவனும் சொல்லரசனும், மதுரையில் இருந்து ஸ்ரீதரும் தருமியும் பாலகுமாரும் ஜாலி ஜம்பரும் வந்திருந்தனர். களை கட்டியது சந்திப்பு.

மண விழா முடிந்ததும், என்னுடைய அலுவலக அவசர அலுவல் காரணமாக நாங்களூம் விடை பெற்றோம். நண்பர்களும் மாலை வரை இருந்து நீண்டதொரு சந்திப்பாக மாற்றி விடை பெற்றதாக அறிந்தேன்.

புகைப்படங்கள் - வீடியோ எல்லாம் மற்ற பதிவர்களீன் இடுகைகலில் பார்க்கலாம். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்த கா.பாவினிற்கு நன்றி


24 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

தேவன் மாயம் said...

கல்யாணப் பதிவு நம்பர்1

தேவன் மாயம் said...

கல்யாணமும் பதிவர் சந்திப்பும் மிக நல்லமுறையில் முடிந்தது!!

தேவன் மாயம் said...

கார்த்திகைபாண்டியன் நல்ல முறையில் வரவேற்று உபசரித்தார்.பதிவர் ஸ்ரீதர் கார்த்திகையின் சகோதரராகவே செயல்பட்டார்..வாழ்த்துக்கள் ஸ்ரீ...

சென்ஷி said...

:)

//
புகைப்படங்கள் - வீடியோ எல்லாம் மற்ற பதிவர்களீன் இடுகைகலில் பார்க்கலாம். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.//

நானும்!!!

Anbu said...

நானும் வீடியோ பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..

cheena (சீனா) said...

அன்பின் தேவா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

சென்ஷீ

மற்ற பதிவர்கள் இடுகைகள் போடுவார்கள் - பார்க்கலாம்

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

வீடியோ மருத்துவர் காரைக்குடி போடுவார் - பார்க்க்லாம்

அன்புடன் அருணா said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

இப்பிடி ஏதோ ஒரு காரணத்தை வைத்து ம்ம்ம் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறீர்கள்.....நடத்துங்க...நடத்துங்க!!!

வால்பையன் said...

நானும் போட்டோகளையும், வீடியோவையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சந்திப்பில் நான் இல்லை என்ற வருத்தம் இருக்கின்றது

cheena (சீனா) said...

நட்பின் சந்திப்பிற்கு காரணம் வேண்டுமோ அன்பின் அருணா

cheena (சீனா) said...

அன்பின் ஞான சேகரன் - வருந்த வேண்டாம் - விரைவினில் சந்தித்து விடுவோம் - டிக்கட் போடட்டா

cheena (சீனா) said...

வாலு - நானும் காத்திருக்கேன் - போட்டாங்களா தெரிலயே

சதங்கா (Sathanga) said...

படிக்கவே இனிமையாக இருக்கிறது. மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சதங்கா

கோவி.கண்ணன் said...

கெட்டி மேளத்தோடு ஒரு பதிவர் சந்திப்பை நடத்தி இருக்கிங்க, அனைவருக்கும் வாழ்த்துகள்

நானானி said...

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

வாங்க வாங்க கோவியாரே ! நன்றி

cheena (சீனா) said...

வாங்க வாங்க நானானி - வாழ்த்துகள் தெரிவிக்கப்படும் - நன்றி நன்றி

அ.மு.செய்யது said...

அழ‌காய் ப‌திவு செய்திருக்கிறீர்க‌ள்.

ப‌கிர்வுக்கு ந‌ன்றி சீனா அவ‌ர்க‌ளே !!

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சையது