ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 6 January 2009

திருமண வாழ்த்துப்பா - உடன் பிறப்பின் வாழ்த்து

தமக்கையின் மண நாளன்று தங்கை படித்த நல்வாழ்த்துப் பா
---------------------------------------------------------------------------------
ஆடிப்பாடி அன்பாய் இருந்த நாட்கள் - நாம்
கூடிப்பேசி குலாவி மகிழ்ந்த பூக்கள் !

அறிவும் ஆற்றலும் நம் வாழ்க்கைப்படிகள்
ஆற்றலும் திறமையும் நம் பெற்றோர் மகிழ்ந்தபூக்கள் !

வளர்ந்த முல்லை ! வசந்த முல்லை ! வாழ்வின் செல்வி !
சேர்க்கும் தலைவன் சேதுராமன் செங்கரம் பிடிக்கின்றாய் !

அக்கா நீயும் அன்பாய் இரு ! அள்ளிக் கொடு !
ஆக்கிடும் இறைவன் அருள் புரிவான் !

வாழ்க வளமுடன் நீ !
வாழ்த்த வயதில்லை ! வணங்குகிறேன் !
நன்றே செய்து நலமுடன் வாழ்வாய் !

-----பிரி.

5 comments:

cheena (சீனா) said...

9 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பா
தமக்கையும் தங்கையும் வளர்ந்து விட்டார்கள்

சதங்கா (Sathanga) said...

உறவுகளின் உன்னதத்தை சொல்கிறது வரிகள்.

முதலில் தமக்கைக்கும், தங்கைக்கும் ஒரே குழப்பம், ரெண்டும் ஒன்னு தானோ என்று !!! பின் 'அக்கா' என்று பாடலில் சொல்ல, தமக்கைக்கு அர்த்தம் புரிந்தது :)))

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா - தமக்கை என்றால் அக்கா தானே சதங்கா - தமையன் என்றால் அண்ணன் தானே = தனயன் என்றால் மகன்தானே - போதுமா சதங்கா

கோவி.கண்ணன் said...

//அக்கா நீயும் அன்பாய் இரு ! அள்ளிக் கொடு !//



நைசாக அக்காவிடும் வேண்டுகோலைச் இடைச் சொருகியாகிவிட்டதா ? அக்கா மாமியார் நல்லமாதிரியாக இருந்தால் அள்ளிக் கொடுக்கலாம், இல்லாவிடில் கிள்ளித்தான் கொடுக்க முடியும்

cheena (சீனா) said...

அக்கா அள்ளிக் கொடுக்க அவரது நல்ல மாமியார் துணை புரிகிறார்
கோவி வருகைக்கு நன்றி