ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 8 January 2008

ரசிகனின் வேண்டுகோள் - புதிய பதிவு

சில காரணங்களினால் இப்பதிவு மதுரைக் குழுப் பதிவிலிருந்து இத்தனிப் பதிவிற்கு மாற்றப் பட்டிருக்கிறது
-----------------------------------------------------------------------------------------------

அருமை நன்பர் ரசிகன் என்னை TAG செய்து விட்டார். ஏதெனும் எழுத வேண்டுமாம். என்ன எழுதுவது. மொக்கையாக இருக்க வேண்டுமாம். மொக்கன்னா என்னா ? தெரியாதே ? பாக்கலாம். (மொக்கச்சாமி ன்னு பேரு வைக்கணுமாம் பதிவுலே யாருக்காச்சும் )

பொதுவா நான் ஒரு கொள்கை ( அப்டின்னா என்னன்னு தெரியாதவங்க தனி மடல்லே வாங்க - அருமையா விளக்கம் தரேன்) வச்சிருக்கேங்க. அதாவது இணைய நண்பர்கள் யாராச்சும் மதுரைக்கு வந்தா அவங்களெ தம்பதி சமேதரா சந்திச்சுடறதுன்னு.

நான் மொத மொத பதிவு ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ளேயே நண்பர் தருமியைச் சந்தித்தேனுங்க. அலுவலகம் வந்திருந்தார். பார்த்தோம் - பேசினோம் - அடிக்கடி சந்திக்கலாம்னு சொல்லி விடை பெற்றார். அப்புறம் சில முறைகள் அலை பேசியில் பேசினேன் / பேசினார். ஆ.வி யிலே வந்த அவரது வலைப்பூவினைப் பற்றிய செய்தியெ நான் தான் மொத மொதல்லே அவருக்குச் சொன்னேன். ( மீ த பர்ஸ்டு). அப்புறம் சந்திக்கும் வாய்ப்பு வரலே. ஒரே ஊர்லே தாங்க இருக்கோம்.

அருமை நண்பர் தருமிக்கு இதுமூலமா வாழ்த்து சொல்லலாமில்லையா.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

ம்ம்ம் அப்புறம் நண்பர் ஓசை செல்லா இடுகையைப் பாத்துட்டு சகோதரி அனுராதாவை ம.பா வோடு சென்று பார்த்தேன். பேசிக்கிட்டு இருந்துட்டு நலம் விசாரித்து விட்டு வந்தோம். நாளை சண்டே தானே - போய்ப் பார்க்கலாமான்னு ம.பா கிட்டே கேட்டேன். நீங்க சொன்னா அப்பீல் உண்டான்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு அலுவல் நிமித்தம் தடை ஏதும் இல்லையெனில் நிச்சயம் சந்திப்போம். ( அதென்ன அலுவல் நிமித்தம் தடைன்னு உடனே யாராச்சும் கேக்குறீங்களா - அது ஒண்ணும் இல்லீங்க - எங்கேயாச்சும் ஏதேனும் நடக்கும் - நான் பாத்து ஒழுங்கு பண்ணணும் - இதான். நடக்குறதெ ஒழுங்கு பண்ற டிராபிக் கான்ஸ்டபிள் இல்லீங்கோ)

பாத்துட்டு வந்து பதிவு போடுறேன்.

ம்ம்ம் அடுத்து யாருங்க வரிசையிலே ? அடடா நம்ம களவாணிப் பொண்ணு - மதுரை வழியா பெரியகுளம் போகுது - பாத்துடலாம்னா என்ன காரணமோ சொல்லாம போய்டிச்சி பெரியகுளத்துக்கு - ம்ம்ம் வெய்ட்டீஸிங்க் To see her.......

சன் டிவீலே அசத்தப் போறது யாருலே மதன் பாப் இப்போ இப்போ சொல்றாரு. OPPERTUNITY and PREPARATION தான் லக்குண்றதுன்னு. இது சும்மா இங்கே தேமேன்னு எழுதிக்கிட்டு இருக்கும் போது காதுலே லேசா விழுந்தது.

ம்ம்ம் அப்புறம் நம்ம பாசமலர் மலர் சபாபதி. அயல் நாட்டுலேந்து ஒரு வாரம் வந்துட்டுப் போனாங்க - குடும்ப சகிதமா. திருநகர்லே அவங்க வூட்லே நானும் வழக்கம் போல குடும்ப சகிதமா போய் பாத்துட்டு வந்தேனுங்க. ஒரு 45 நிமிடம் பேசிட்டு வந்தோம். நல்லா பேசினாங்க - நல்லா பழகினாங்க - ரொம்ப நாளா நண்பர்கள் போல பேசினோமுங்க. அவரது கணவர் சபாபதி, மகள், மாமனார், மாமியார், மச்சினப் புள்ளே எல்லோரெயும் அறிமுகப் படுத்தி வைச்சாங்க. ஆங்கிலத் துறையில் புகழ் பெற்ற கல்லூரியில் ஆசிரியராக வேலை செஞ்சிட்டு இப்ப தமிழ்லே இணையத்துலே கலக்கிகிட்டு இருக்காங்க.

ம்ம்ம்ம்ம் - அப்புறம் - வரிசையிலே சந்திரமௌளி கணபதி நிக்குறாரு. யாருங்க இது - யாருக்காச்சும் தெரியுமா - அட நம்ம மதுரையம்பதிங்க. இப்ப நேரம் சரியில்ல - பொங்கல் வரைக்கும் இருக்கார். சந்திச்சுடுவோம்ல.

அப்புறம் நம்ம சிவாங்க - மதுரைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு. சனவரி 27ம் தேதி சந்திக்க அனுமதி கொடுத்துருக்காரு. ( கொடுத்தாரா - கொடுத்தேனா - தெரில). சந்திச்சுருவோம்.

இன்னும் யாரெல்லாம் மதுரைக்கு வரீங்க - சொல்லுங்க - சிவப்புக் கம்பளமெல்லாம் ஆர்டர் பண்ணணும் - சொல்லிட்டு வாங்க. சந்திக்கலாம். பழகிப் பாக்கலாம். என்ன நான் சொல்றது.

நம்ம கீதா சாம்பு மாமாவோட மதுரைக்கு வந்துட்டுப் போய் இருக்காங்க - தெரியாமப் போச்சுங்க - பாக்க முடிலே - அதனால் என்ன - சென்னைலே போய் பாத்துடுவோம். அவ்ளோ தான்

ஆமா இடுகைன்னா நீள, அகல, உயர, கன பரிமான அளவுகள் எல்லாம் இருக்கா - தெரியாதுங்க - சரக்கு இருக்கற வரைக்கும் எழுதலாம். இடுகை சைஸ் எல்லாம் தெரிஞ்சுக்கணுமா என்ன. ( சிவா சைஸ் எல்லாம் நான் சொல்றென் நான் சொல்றேன்னு குதிக்கிறாரு)

aamaa நானு நாலு பேர மாட்டி வுடணுமாமே - யாரெ மாட்டலாம்

1. தருமி
2. துளசி கோபால்
3. கேயாரெஸ்
4. பாசமலர்

ரசிகன் போதுமா - இன்னும் வேணுமா

அன்புடன் சீனா

18 comments:

cheena (சீனா) said...

வருக நண்பர்களே ! மறு மொழி தருக

மங்களூர் சிவா said...

அப்ப அங்க போட்ட பின்னூட்டமெல்லாம் இங்க திரும்ப போடணுமா??

மங்களூர் சிவா said...

உங்க பதிவுக்கு நீங்களே போட்டுகிட்ட மொத பின்னூட்டம் செல்லாது!!

மங்களூர் சிவா said...

அதனால மீ த பர்ஸ்ட்டு

மங்களூர் சிவா said...

ஆமா சைஸ் எல்லாம் சின்ன பையன் நாந்தான் சொல்லுவேன்!!

cheena (சீனா) said...

சிவா, எனக்குத் தெரில - சில காரணங்களினால் பதிவு மாற்றம். பின்னூட்டங்கள் மாற்றப் பட வில்லை. அவ்வளவே

cheena (சீனா) said...

சிவா, அவ்வளவு மறு மொழிகளுக்கும் நன்றி.

கண்மணி/kanmani said...

கூப்பிட்டாச்சு!இனி உங்க டேர்ன்.
பெஸ்ட் எது னு சொல்லுங்க
நாலு பேரைக் கூப்பிடுங்க


http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html

Anonymous said...

வலைத்தள உறவுகளை தம்பதி சகிதமாக சென்று மரியாதை நிமித்தம் பார்த்து நட்பை வளர்க்கும் தங்களின் உயரிய பண்பு பாராட்டிற்குறியது.

வாழ்த்துக்கள் நண்பர் சீனா அவர்களே.

தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ரூபஸ் said...

உங்கள் விருந்தோம்பல் மெய் சிலிர்க்க வைக்கிறது

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலையரசன்.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபஸ்

பாச மலர் / Paasa Malar said...

இதை இங்கே மாத்தீட்டீங்களா சீனா சார்..தமிழர் திருநாள் வாழ்த்துகள்..

cheena (சீனா) said...

பாசமலர், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

கோவி.கண்ணன் said...

//அதாவது இணைய நண்பர்கள் யாராச்சும் மதுரைக்கு வந்தா அவங்களெ தம்பதி சமேதரா சந்திச்சுடறதுன்னு//

சீனா ஐயா,

நான் மதுரை வந்தால் உங்களையும் தருமி ஐயாவையும் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டும்.

எனக்கும் பதிவர்களை சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சியே. இதுவரை 25க்கும் மேற்பட்ட பதிவர்களை சந்தித்து இருக்கிறேன். அதில் கோவை சுப்பையை வாத்தியாரும் உண்டு.

கோவி.கண்ணன் said...

//மங்களூர் சிவா said...
உங்க பதிவுக்கு நீங்களே போட்டுகிட்ட மொத பின்னூட்டம் செல்லாது!!
//

நாட்டாமை... பெரியவர்களுக்காக தீர்ப்பை மாத்துங்க. இப்படி விஜயகுமார் போல டயலாக் விடாதிங்க.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி கண்ணன். வாங்க வாங்க மதுரைக்கு - சந்திப்போம். உங்க TBCD சந்திப்பு படிச்சிருக்கேன் - நல்லா இருந்திச்சி - வாழ்த்துகள் - நன்றி

cheena (சீனா) said...

நாட்டாமெ தீர்ப்ப மாத்தச் சொல்லி பரிந்துரச்சதுக்கு நன்றி கோவி கண்ணன்