ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday, 15 January 2008

புத்தாண்டு ( தை முதல் தேதி ) சபதம்.

சகோதரி நானானி 2008ம் ஆண்டு சனவரித் திங்கள் ஆறாம் நாள், புத்தாண்டுச் சபதப் பதிவில், என்னைத் தொடர் பதிவிட அழைத்திருந்தார்.
அதன்படி இப்பதிவு சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் முதல் நாளில் ( புத்தாண்டு இது தான் எனச் சிலர் சொல்கின்றனர்) இடப்படுகிறது.

இது புத்தாண்டுச் சபதமோ பொங்கல் சபதமோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பொதுவாக நான் என்றுமே சபதங்கள் எடுத்ததில்லை. ஏனெனில் அதைப் பற்றி இது வரை சிந்திக்க வில்லை. சில ஆண்டுத் தொடக்கங்களில் சிலவற்றைச் செய்ய வேண்டும் எனவும் சிலவற்றை செய்ய வேண்டாம் எனவும் நினைப்பது உண்டு.

செய்ய வேண்டும் என்பது ஆண்டு முழுவதும் அல்லது வாழ்வு முழுவதும் கடைப் பிடிக்க வேண்டிய செயலாக பொதுவாக இருக்காது.
ஒரு நிகழ்வினை நிகழ்த்த வேண்டும் எனவோ, ஒரு செயலைச் செய்ய வேண்டும் எனவோ, ஒரு முறை செய்யக் கூடிய செயலாகத்தான் இருக்கும். அதை நிச்சயம் முதல் மாதமே செய்து விடுவேன். ஆகவே அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை.

செய்ய வேண்டாம் என்பது உடனடியாக நிறுத்தப் பட வேண்டிய செயலாக இருக்கும். அதையும் உடனடியாக நிறுத்தி விடுவேன். அச் செயலை மறுபடியும் செய்ய வேண்டிய கட்டாயம் நிச்சயமாக வராது. தேவை எனில் மறு பரீசீலனைக்குப் பிறகு செய்வேன்.

ஆகவே இந்த சபதம் என்ற சொல்லெல்லாம் எனக்கு ஒத்து வராது. இருப்பினும் சகோதரி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப சில சபதங்களை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

மங்களூர் சிவாவின் நண்பர் ரூபஸ் தன்னுடைய பதிவில் ( http://rufezarul.blogspot.com/2008/01/blog-post.html) ( கண்ணாடி) சில சபதங்கள் எடுத்திருந்தார். அப்பதிவினைப் படிக்கும் போது அவர் எடுத்த சபதங்கள் எனக்கும் ஒத்து வரும் போல ஒரு சிந்தனை தோன்றியது. இச்சிந்தனையை அப்பதிவினில் மறு மொழியாகவும் தெரிவித்தேன். அதன்படி அச் சபதங்களையே வாழ்வில் முதன் முறையாக எடுக்க விரும்புகிறேன். கடைப் பிடிக்கவும் ஆசைப் படுகிறேன்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.
(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்)

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மறு மொழி தருவதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்). யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - அது அவர்கள் ஹெட் லெட்டர்.

4. படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும். ( மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகம் வருகிறது)

5. மற்றவர்க்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நாமும் மகிழ வேண்டும்.

6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.

7. தொலைபேசிக் கட்டணம் மாதம் 2000 வருகிறது ( இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால்). சக பதிவர், எனது துணைவி, ( வலை மொழியில் தங்கமணி) இது அதிகம் எனவும், குறைக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். கவனிப்போம்.

8. போதாதா ஏழு - சபதமில்லாமல் ஒன்று. துளசி தளம் முழுவதும் படித்து விட வேண்டும்.

பி.கு: சுட்டி கொடுக்கத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தனி மடலில் உதவலாம்.

அப்பாடா - பதிவு போட்டாச்சு. நானானி மற்றும் ரூபஸ் படிக்கணும்.

Tuesday, 8 January 2008

ரசிகனின் வேண்டுகோள் - புதிய பதிவு

சில காரணங்களினால் இப்பதிவு மதுரைக் குழுப் பதிவிலிருந்து இத்தனிப் பதிவிற்கு மாற்றப் பட்டிருக்கிறது
-----------------------------------------------------------------------------------------------

அருமை நன்பர் ரசிகன் என்னை TAG செய்து விட்டார். ஏதெனும் எழுத வேண்டுமாம். என்ன எழுதுவது. மொக்கையாக இருக்க வேண்டுமாம். மொக்கன்னா என்னா ? தெரியாதே ? பாக்கலாம். (மொக்கச்சாமி ன்னு பேரு வைக்கணுமாம் பதிவுலே யாருக்காச்சும் )

பொதுவா நான் ஒரு கொள்கை ( அப்டின்னா என்னன்னு தெரியாதவங்க தனி மடல்லே வாங்க - அருமையா விளக்கம் தரேன்) வச்சிருக்கேங்க. அதாவது இணைய நண்பர்கள் யாராச்சும் மதுரைக்கு வந்தா அவங்களெ தம்பதி சமேதரா சந்திச்சுடறதுன்னு.

நான் மொத மொத பதிவு ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ளேயே நண்பர் தருமியைச் சந்தித்தேனுங்க. அலுவலகம் வந்திருந்தார். பார்த்தோம் - பேசினோம் - அடிக்கடி சந்திக்கலாம்னு சொல்லி விடை பெற்றார். அப்புறம் சில முறைகள் அலை பேசியில் பேசினேன் / பேசினார். ஆ.வி யிலே வந்த அவரது வலைப்பூவினைப் பற்றிய செய்தியெ நான் தான் மொத மொதல்லே அவருக்குச் சொன்னேன். ( மீ த பர்ஸ்டு). அப்புறம் சந்திக்கும் வாய்ப்பு வரலே. ஒரே ஊர்லே தாங்க இருக்கோம்.

அருமை நண்பர் தருமிக்கு இதுமூலமா வாழ்த்து சொல்லலாமில்லையா.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

ம்ம்ம் அப்புறம் நண்பர் ஓசை செல்லா இடுகையைப் பாத்துட்டு சகோதரி அனுராதாவை ம.பா வோடு சென்று பார்த்தேன். பேசிக்கிட்டு இருந்துட்டு நலம் விசாரித்து விட்டு வந்தோம். நாளை சண்டே தானே - போய்ப் பார்க்கலாமான்னு ம.பா கிட்டே கேட்டேன். நீங்க சொன்னா அப்பீல் உண்டான்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு அலுவல் நிமித்தம் தடை ஏதும் இல்லையெனில் நிச்சயம் சந்திப்போம். ( அதென்ன அலுவல் நிமித்தம் தடைன்னு உடனே யாராச்சும் கேக்குறீங்களா - அது ஒண்ணும் இல்லீங்க - எங்கேயாச்சும் ஏதேனும் நடக்கும் - நான் பாத்து ஒழுங்கு பண்ணணும் - இதான். நடக்குறதெ ஒழுங்கு பண்ற டிராபிக் கான்ஸ்டபிள் இல்லீங்கோ)

பாத்துட்டு வந்து பதிவு போடுறேன்.

ம்ம்ம் அடுத்து யாருங்க வரிசையிலே ? அடடா நம்ம களவாணிப் பொண்ணு - மதுரை வழியா பெரியகுளம் போகுது - பாத்துடலாம்னா என்ன காரணமோ சொல்லாம போய்டிச்சி பெரியகுளத்துக்கு - ம்ம்ம் வெய்ட்டீஸிங்க் To see her.......

சன் டிவீலே அசத்தப் போறது யாருலே மதன் பாப் இப்போ இப்போ சொல்றாரு. OPPERTUNITY and PREPARATION தான் லக்குண்றதுன்னு. இது சும்மா இங்கே தேமேன்னு எழுதிக்கிட்டு இருக்கும் போது காதுலே லேசா விழுந்தது.

ம்ம்ம் அப்புறம் நம்ம பாசமலர் மலர் சபாபதி. அயல் நாட்டுலேந்து ஒரு வாரம் வந்துட்டுப் போனாங்க - குடும்ப சகிதமா. திருநகர்லே அவங்க வூட்லே நானும் வழக்கம் போல குடும்ப சகிதமா போய் பாத்துட்டு வந்தேனுங்க. ஒரு 45 நிமிடம் பேசிட்டு வந்தோம். நல்லா பேசினாங்க - நல்லா பழகினாங்க - ரொம்ப நாளா நண்பர்கள் போல பேசினோமுங்க. அவரது கணவர் சபாபதி, மகள், மாமனார், மாமியார், மச்சினப் புள்ளே எல்லோரெயும் அறிமுகப் படுத்தி வைச்சாங்க. ஆங்கிலத் துறையில் புகழ் பெற்ற கல்லூரியில் ஆசிரியராக வேலை செஞ்சிட்டு இப்ப தமிழ்லே இணையத்துலே கலக்கிகிட்டு இருக்காங்க.

ம்ம்ம்ம்ம் - அப்புறம் - வரிசையிலே சந்திரமௌளி கணபதி நிக்குறாரு. யாருங்க இது - யாருக்காச்சும் தெரியுமா - அட நம்ம மதுரையம்பதிங்க. இப்ப நேரம் சரியில்ல - பொங்கல் வரைக்கும் இருக்கார். சந்திச்சுடுவோம்ல.

அப்புறம் நம்ம சிவாங்க - மதுரைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு. சனவரி 27ம் தேதி சந்திக்க அனுமதி கொடுத்துருக்காரு. ( கொடுத்தாரா - கொடுத்தேனா - தெரில). சந்திச்சுருவோம்.

இன்னும் யாரெல்லாம் மதுரைக்கு வரீங்க - சொல்லுங்க - சிவப்புக் கம்பளமெல்லாம் ஆர்டர் பண்ணணும் - சொல்லிட்டு வாங்க. சந்திக்கலாம். பழகிப் பாக்கலாம். என்ன நான் சொல்றது.

நம்ம கீதா சாம்பு மாமாவோட மதுரைக்கு வந்துட்டுப் போய் இருக்காங்க - தெரியாமப் போச்சுங்க - பாக்க முடிலே - அதனால் என்ன - சென்னைலே போய் பாத்துடுவோம். அவ்ளோ தான்

ஆமா இடுகைன்னா நீள, அகல, உயர, கன பரிமான அளவுகள் எல்லாம் இருக்கா - தெரியாதுங்க - சரக்கு இருக்கற வரைக்கும் எழுதலாம். இடுகை சைஸ் எல்லாம் தெரிஞ்சுக்கணுமா என்ன. ( சிவா சைஸ் எல்லாம் நான் சொல்றென் நான் சொல்றேன்னு குதிக்கிறாரு)

aamaa நானு நாலு பேர மாட்டி வுடணுமாமே - யாரெ மாட்டலாம்

1. தருமி
2. துளசி கோபால்
3. கேயாரெஸ்
4. பாசமலர்

ரசிகன் போதுமா - இன்னும் வேணுமா

அன்புடன் சீனா

Monday, 7 January 2008

இம்சையின் இம்சை தாங்க முடியாமல் இப்பதிவு

அன்பர்களே!
நண்பர்களே!
வலை உலக மொக்கையர்களே!
கும்மி அடிக்கும் கும்மியர்களே!
மொக்கை போடாத மொக்கையர்களே!
பெண் பதிவர்களே!
குழந்தைகளே!

வேற யாராச்சும் விட்டுப் போயிருந்தா பின்னூட்டத்திலாவது அல்லது தனி மடலிலாவது அல்லது தொலை பேசியிலாவது அல்லது சாட்டிங்கிலாவது நினைவுறுத்தினால் அவர்களது கோரிக்கை கனிவுடன் கன்சிடர் செய்யப் படும்.

என்னா இந்த பில்டப்பு ?? எதுக்கு இதெல்லாம் ?? யாருக்குத் தெரியும். இதெல்லாம் இப்படிச் சொன்னாத்தான் இதெ மொக்கன்னு ஒத்துக்குவாங்களாம் - சிவா, கேயாரெஸ், ரசிகன் எல்லாம்.

இவங்க எல்லாம் ஒத்துக்கலேன்னு யார் அழுதாங்களாம். இதென்ன ISO 9999 certificate - aaaa ????? ம்ம்ம்ம் - இவங்க தான் இதெக் கொடுக்குறதுக்கு அத்தாரிட்டீயா ?? என்ன கொடும இது சரவணன் ??

ஆமா என்னன்னவோ எழுதுறோமே - இதே எழுத மாட்டோமா ?

ஒரு கவுதெ ஞாபகத்துக்கு வந்துச்சி

நீயும் நானும் ஒண்ணு !
காந்தி பொறந்த மண்ணு !
டீக்கடையிலே நின்னு !
தின்னு பாரு பன்னு !

என்னெ அருமையா எழுதி இருக்கான்யா - சும்மாவா சொன்னாங்க யார் வேணா கவுத எழுதலாம்னு ! மரபுக் கவிதை - புதுக் கவிதை - வரிக்கவிதை - எழுத்துக் கவிதை -தூள் கெளப்புறாய்ங்கய்யா நம்ம ஆளுங்க!

ஒருத்தன் எஸெமெஸ் அனுப்புறான் - கீழே பாருங்கய்யா

: quote

ரஜனியே புரிஞ்சுக்கவே முடிலே

பாட்ஷாவிலே சொல்றாரு : எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு
சிவாஜிலே சொல்றாரு : பன்னிங்க தான் கூட்டமா வரும்

: Un quote

நான் சொல்லலெப்பா - யாராச்சும் ஆட்டோவுக்கு அட்வான்ஸ் கொடுக்காதீங்க - ஆமா சொல்லிப்புட்டேன்

என்ன கொடுமை சரவணன் இது

one more SMS :

Hai ! I am puppuk kutty - studying LKG "B" in dubakur school. I lost my "Rubber vaichcha pencil" - The pencil costs Rs 3/- I dont know who you are; But if you forward this message, i will get one paise from the world bank. If you have heart or lungs or kidney or whatever, Please FORWARD this mail to atleast TEN people .... Do not break this chain ... Do not send this to me .. Do not try to contact world bank ....

சேம் பிளட்

ம்ம்ம் வங்கிக்கு ஓரு கஸ்டமர் கிட்டே இருந்து ஒரு லெட்டர் வந்துச்சாம் - டேமேஜர் படிச்சிட்டு கமெண்டு ( மறுமொழி ன்னு சொல்லலாமா) எழுதுனாராம் அந்த லெட்டர்லே

"ரசிகா - பிளீஸ் ஃபாலோ அப் வெரி குலோஸ்லி"

மறு நாளிலேந்து ரசிகன் அவர் பின்னாலேயே போனாராம் - அவர் எங்கே போனாலும் - ஏன்னு இன்னிக்கு வரை யாருக்குமே தெரில.

ம்ம்ம்ம்

போரடிக்குதாய்யா !! நிறுத்திடலாமா !! வேணாம் - மத்த மொக்கை யரெல்லாம் நிறுத்தச் சொல்லு - நானும் நிறுத்திடறேன்.

இது http://iimsai.blogspot.com/2008/01/2000.html லே இம்சை என்ன எழுதச் சொன்ன பதிவு.

வர்ட்டா ......